Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அமெரிக்காவில் 6 இந்தியர்கள் பலி!

Published on செவ்வாய், 31 மார்ச், 2009 3/31/2009 11:36:00 PM // , , , , , ,

அமெரிக்காவில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் இந்தியர் ஒருவர். பொருளாதார மந்தநிலையினைத் தொடர்ந்து குடும்ப செலவுக்குப் போதிய வருமானமில்லாததால் ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

கேரளாவிலுள்ள வயநாடு அய்யன்கொல்லியிலுள்ள செரியேரியைச் சேர்ந்தவர் அப்பு மாஸ்டர். இவரின் அஸோக். அப்பு மாஸ்டரின் மகளான அபயாவின் கணவர் தேவராஜன். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் சிலிக்கன்வேலி ஸாண்டாக்ளாராவில் பணிபுரிகின்றனர்.

சம்பவத்தினத்தன்று, குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தேவராஜன் குடும்பத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் அசோகன், மனைவி சுஜிதா, மக்களான அலகா, அகில், மேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். தேவ ராஜனின் மனைவி மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியப்பின் தேவராஜனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் பல உயிர்களையும் பலிவாங்குவது தொடர்கதையாகி வருகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!