Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கிருஷ்ணகிரியில் துப்பாக்கியுடன் இருவர் கைது

Published on ஞாயிறு, 22 மார்ச், 2009 3/22/2009 06:55:00 PM // , , , , ,

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக கிருஷ்ணகிரி காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல் துறையினர் கூறுகையில், கிருஷ்ணகிரி பெரியகல்லுபள்ளி வனப்பகுதி அருகே காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு துப்பாக்கி சத்தம் கேட்டதால், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது வனப்பகுதிக்குள் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்த தேவராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி நரசிம்மாச்சாரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமிருந்தும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!