Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

4 வயது மாணவியைக் கொன்றதாக திருச்சியில் நர்சரி ஆசிரியை கைது!

Published on சனி, 28 மார்ச், 2009 3/28/2009 03:28:00 AM // , , , , , ,

திருச்சியில் நான்கு வயது மழலையர் பள்ளி மாணவியைக் கொன்றதாக, மழலையர் பள்ளி ஆசிரியையும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ரோகிணி என்ற இச்சிறுமி தவறு செய்ததாகவும், அவரைக் கண்டிக்க ஆசிரியை அடித்தபோது அது அச்சிறுமியின் நெற்றியில் பட்டு, சிறுமி இறந்ததாகவும் கூறப்படுகிறது. புதன்கிழைமை நடந்த இச்சம்பவத்தை அடுத்து சிறுமியைக் காணாத பெற்றோர் காவல் துறையில் புகார் அளிக்க, வியாழக் கிழமையன்று சிறுமியின் உடலை அருகிலிருந்த கிணற்றிலிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் சிறுமி கொலை செய்யப் பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியை ஜெயாராணி (25), பள்ளி உதவியாளர்கள் ஆரோக்கியராஜ் (27), சகாயராஜ் (26) ஆகியோர் வெள்ளிக் கிழமையன்று கைது செய்யப் பட்டனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!