Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

வருணுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்!

Published on வெள்ளி, 20 மார்ச், 2009 3/20/2009 12:35:00 PM // , , , ,

உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வருணுக்கு, பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.தேர்தல் பிரசாரத்தின் போது மதவாதத்தை பரப்பும் வகையில் வருண் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வரும் வரை அவரை காவல்துறையினர் கைது செய்வதற்கு தடைவிதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்ஜாமீன் கோரி வருண் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதி கேத்ரபால் இந்த உத்தரவை வழங்கினார். வருணுக்கு எதிரான புகார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவாகியிருப்பதால், டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க அதிகார எல்லை இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!