Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Thursday, April 10, 2025

4 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் இடை நீக்கம்!

Published on வெள்ளி, 20 மார்ச், 2009 3/20/2009 12:56:00 PM // , , , , ,

கஷ்மீரில் போலி என்கவுண்டர் மூலம் தச்சர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் படையைச் சார்ந்த ஒரு துணை கமாண்டோ மற்றும் மூன்று காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது புல்வாமா மாவட்டத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமையன்று 35 வயதுடைய குலாம் முகைதீன் என்பவரை அவரது வீட்டில் மத்திய ரிசர்வ் படையின் 181 படைப்பிரிவினர் சுட்டுக் கொன்றனர். கடந்த ஒரு மாதத்தில் பொதுமக்கள் படையினரால் கொல்லப்படுவது இது மூன்றாவது நிகழ்வாகும்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!