ஐ.பி.எல். ஏலம் : பிளின்டாப், பீட்டர்சன் முதலிடம்
வெஸ்ட் இண்டீசின் பிடல் எட்வர்ட்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ்), ஜெரோம் டெய்லர் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இங்கிலாந்தின் ஓவைஸ் ஷா (டெல்லி டேர்டெவில்ஸ்), ரவி போபரா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இலங்கையின் திலன் துஷாரா (சென்னை சூப்பர் கிங்ஸ்), வங்கதேசத்தின் அஷ்ரபுல் (மும்பை இந்தியன்ஸ்), மோர்டசா (கோல்கட்டா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்ட வீரர்களும் ஏலம் போனார்கள்.
50 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது
மியான்மரில் குடியரசுத்துணைத் தலைவர்
தா. பாண்டியன் கார் எரிப்பு
புலிகளின் கடற்படைத்தளம் கைப்பற்றப்பட்டது?
"போரை நிறுத்துங்கள்" - இந்திய அரசு கோரிக்கை
என்று கூறியுள்ளார்.
இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இந்திய அரசு கவலை கொண்டிருக்கிறது. இலங்கை அரசு வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும்.
இந்தியா தனது செல்வாக்கினால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்கும் படிச் செய்தும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. தற்போது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. இன்னும் கூட புலிகளிடமிருந்து பதில் இல்லை. இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்த வேண்டும்.
இரு தரப்பும் போரை நிறுத்தி விட்டுப் பேச முன்வர வேண்டும். இரு கைகளும் சேர்ந்தே ஓசை எழுப்ப முடியும். உயிர்கள் அநியாயமாக பறிபோவது மனதுக்கு வேதனையாக உள்ளது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை இந்திய அரசு நிச்சயம் செய்யும்
"இலங்கை அரசு மீது வழக்கு" - தா. பாண்டியன்
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு நேரில் சென்று பார்வையிடவும் அங்கு உடனடியாக போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
"இலங்கையில் போர் நிறுத்தம் செய்த பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேச வேண்டும்" என்றார் அவர்.
"இலங்கைப் பிரச்சனையில் தமிழக அரசு இதுவரை எடுத்த முடிவுகள் எதுவும் பலனளிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறிய முதலமைச்சர் கருணாநிதி தற்போது பதவி விலக மறுக்கின்றார். பன்னாட்டு நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் இலங்கைப் பிரச்சினை குறித்து அங்கு வழக்கு தொடரப்படும் ".
ஆயினும், 'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம். இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல". என்றார் தா.பா
'அழகு சாதன பொருட்கள்' - அரசின் பார்வையில்!
திரைப்படத்தில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்குமாறும் அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டிருந்தார். பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் அழகு சாதனங்களாக நடமாடும் வேதிப்பொருட்களை குறிவைத்துள்ளது.
இளம் வயதினரிடையே அழகு சாதன பொருட்கள் மீதும் மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏராளமான உள் நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களும் சந்தையில் களமிறங்கி உள்ள நிலையில் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவோருக்கு சுகாதார அமைச்சகம் 'செக்' வைத்திருக்கிறது. விளம்பரத்தில் சொல்லப்படுவது போல உண்மையிலேயே அழகு சாதனங்கள் அழகு கூட்டுகிறதா, உடல்நலத்துக்குக் கேடான வேதிப்பொருட்கள் கலக்காமல் இருக்கின்றனவா? என்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆய்வு செய்து வருகிறது.
தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பில் அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களில் சொல்லப்படுவதை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அறிவியல் ரீதியான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.
உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள், மதுவுக்கு எதிராகவும், அமைச்சர்அன்புமணியின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
கல்யாண் சிங் மன்னிப்பை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு
பாபர் மசூதி இடிக்கப்பட்டதுமே அதற்கு பொறுப்பேற்று தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதாகவும் பாபர் மசூதி இடிப்புக்காக தற்போது மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொல்லியிருந்தார். முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பா.ஜ கவை வீழ்த்துவதற்காக முலாயம்சிங் யாதவுடன் அணி சேர்ந்து இருப்பதாகவும் கல்யாண்சிங் கூறியிருந்தார்.
முலாயம்சிங்குடன் கல்யாண்சிங் கூட்டு சேர்ந்ததை முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ள அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக அவர் இவ்வாறு கூறி இருந்தும், கல்யாண்சிங் மன்னிப்பை முஸ்லிம் தலைவர்கள் நிராகரித்து உள்ளனர்.
ஜாமியத்துல் உலமா அமைப்பு நிர்வாகி மவுலானா ஹமீது "கல்யாண்சிங்கின் இந்த மன்னிப்பு அரசியல் சந்தர்ப்ப விதம் ஆகும். இதை ஏற்க இயலாது" என்று கூறியுள்ளார். "இந்த குற்ற செயலுக்காக அவர் இறைவனிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார் அவர்.
பாபர் மசூதி நடவடிக்கை குழு முன்னாள் உறுப்பினர் செய்யது சகாப்தீன் "முஸ்லிம்களைபற்றி தவறாக கணக்கு போட்டுள்ளனர்.இது ஒரு அரசியல் நாடகம்" என்று கூறியுள்ளார்.
அலிகார் முஸ்லிம் பல்கலை கழக பேராசிரியர் மொகிபுல் ஹக் கூறுகையில், இந்துத்துவாவில் இருந்து மதசார்பற்ற அணிக்கு கல்யாண்சிங் வந்துள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்டதற்காக முஸ்லிம்கள் ஓட்டுகள் சமாஜ்வாடிகட்சி எந்த வகையிலும் உதவாது என்றார்.
கஸபிற்கு எதிராக டி.என்.ஏ ஆதாரம்.
தீவிரவாதிகள் குபேர் என்றப் படகில் தான் இந்தியா வந்தனர் என்பதற்கான ஆதாரமாகவும் இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
கஸப் இறந்து விட்டதாக முன்பு பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், கையில் கட்டுகளுடன் கைவிலங்கு அணியப்பட்ட நிலையில் கஸப் இருக்கும் புதிய புகைப்படங்களைக் கடந்த தினங்களில் தொலைகாட்சிகள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோலோகாஸ்டை மறுத்த பிஷப் கருத்தை திரும்பப் பெற உத்தரவு

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகள் நடக்கவே இல்லை என்று கூறிவந்த பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட்சன் என்ற பிஷப் உட்பட 4 பிஷப்கள் 1988ஆம் ஆண்டு கிருத்தவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். கடந்த மாத இறுதியில் இந்த நான்கு பிஷப்புகளையும் மீண்டும் கிருத்தவ திருச்சபையில் இணைத்து போப் உத்தரவிட்டார்.
ரன்வீர் சேனாவுக்கு உடந்தை என்ற குற்றச்சாட்டில் இரு பத்திரிகையளார்கள் கைது
ஆறு வயது சிறுமியைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்கு.

இருவருக்கும் எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சப் இன்ஸ்பெக்டர் சியாம்லால் யாதவ் பணி நீக்கம் செய்யபட்டார். மற்றொருவரான சந்திரபான் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிறுமியிடம் எஸ்.பி மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தையில் வைத்து தனது பையிலிருந்து 280 ரூபாயைத் திருடியதாக கோமள் என்ற சிறுமியை அஞ்சு கதாரிய என்ற பெண் ஜஸ்வந்த்பூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்த வேளையில், காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் சிறுமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாபரி மஸ்ஜித் தகர்ப்பு: கல்யாண்சிங் மன்னிப்பு கேட்டார்!
பாஜகவிலிருந்து வெளியேறிய கல்யாண்சிங் கடந்தச் சில நாட்களுக்கு முன்னர் முலாயம் சிங்கின் கட்சியில் இணைந்திருந்தார். முலாயம் சிங்குடன் இணைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கல்யாண்சிங்கிடமிருந்து இவ்வறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
"பாஜகவை அழிப்பதே இனி எனது இலட்சியம்" எனவும் கல்யாண்சிங் கூறினார். "பாபரி மஸ்ஜித் என்னுடைய ஆட்சி காலத்தில் தகர்க்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களை அகற்றி நிறுத்துவதற்கோ அவர்களை எதிரியாக கருதுவதற்கோ நான் தயாராகவில்லை" என அவர் மேலும் கூறினார். பாஜகவை விட்டு விலகியதை ஆதரித்து அநேக முஸ்லிம் நண்பர்கள் தனக்குக் கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார்.
முழு அடைப்பு : பஸ், ரெயில் இயக்கப்பட்டன; கடைகள் மூடப்பட்டன
இலங்கையில் போதை நிறுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. வணிகர் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றாலும் மற்ற மாவட்டங்களில் பெருமளவும் கடைகள் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும்

கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும் என்று கிர்கிஸ்தான் அதிபர் குர்மன்பக் பகியேவ் செவ்வாய் கிழழை அறிவித்தார்.
புலிகள் சரணடைய வேண்டும் என சர்வதேச குழு வலியுறுத்தல்!
புலிகளுக்கு மிகக்குறைவான கால அவகாசமே இருக்கிறது என்பதால் இரு தரப்பிலும் ஏற்படும் வீணான உயிர்ச்சேதங்களை தவிர்ப்பதற்காக புலிகள் சரணடைவதே சிறந்தது என அக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கை அரசாங்கத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை புலிகள் தரப்பு விரைவில் தொடங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இந்த அறிக்கைக்கு புலிகள் தரப்பிலிருந்து இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
அஹமதாபாத் தொடர்குண்டு வெடிப்பு: மேலும் 5 குற்றப் பத்திரிகை தாக்கல்
அத்வானியின் நெருங்கிய உதவியாளருக்கு எதிராக கிரிமினல் வழக்கு!
எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி நடந்தது தொடர்பாக சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி பாராளுமன்ற சமிதியை நியமித்திருந்தார். இச்சமிதி வழங்கிய அறிக்கையினை டில்லி காவல்துறைக்கு வழங்கிய மத்திய அரசு, குல்கர்ணி உட்பட மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தர்விட்டது. மேலும், கடந்த கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாளில் பாஜக தலைமையகத்தில் இருந்து திருட்டுப் போன இரண்டு கோடி ரூபாய்க்கும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் கொண்டுவந்த பணத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பதைக் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பாஜக அலுவலகத்தில் பணம் திருட்டுப் போன அறையைப் பரிசோதிக்க அனுமதி தர வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் டில்லி காவல்துறை ஆணையர் அனுமதி கோரியுள்ளார். இத்திருட்டு சம்பவம் தொடர்பாக பாஜக காவல்துறையில் புகார் எதுவும் அளிக்காதது குறிப்பிடத் தக்கது.
பெங்களூரூவில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு மாநாடு
ஜமியியத் யே உலமாயே ஹிந்த் என்ற முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஹிந்து, இஸ்லாமிய அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்.
தீவிரவாதம் அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்க்கப்படவேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் மக்களிடம் பெறப்பட்டது.
ஜம்யியத்துல் உலமா யே ஹிந்த் தலைவர் சையத் முஹம்மத் உஸ்மான், பாராளுமன்ற உறுப்பினர் மெளலானா மஹ்மூது மதனி, ஆரிய சமாஜின் சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், ஹிந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ்பட் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரபலங்களில் சிலர்.
தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சார்பற்று செயல்படுவதற்கும், அண்மைக்காலத்தில் புதிதாக அறிய வந்துள்ள தீவிரவாதங்களின் கைவரிசைகள் குறித்த நேர்மையான விசாரிப்புக்கும் இம்மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
இராக்: அமெரிக்க இராணுவம் திரும்பப் பெறப்படும்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதே ஒபாமா, மாதம் ஒன்று அல்லது இரண்டு படைப்பிரிவு என்ற அடிப்படையில் 16 மாதத்துக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க இராணுவத்தை திரும்பப் பெறுவோம் என்று உறுதி மொழி கொடுத்திருந்தார்.
என்.பி.சி. டி.வி சேனலுக்கு அளித்த சமீப பேட்டியில், ஒரு ஆண்டு காலத்துக்குள் பெரும் அளவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் ஈராக்கியர்கள் மீது மேலும் அதிகமான பொறுப்புகளை சுமத்தக்கூடிய நிலையில் தாங்கள் இருப்பதாகவும் ஒபாமா கூறி உள்ளார்.
அதே நேரம், ஆப்கானிஸ்தானில் இப்போது 36 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 60 ஆயிரத்திற்கும் அதிகப்படுத்தப்படுத்தலாமா என்று ஒபாமா நிர்வாகம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் வாஜபேயி.
இன்று இரவு 10.00 மணிக்கு ஐசியூ என்று சொல்லப்படும் இண்டென்சிவ் கேர் யூனிட்டில் வாஜ்பாய் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக ஏஐஎம்எஸ் கண்காணிப்பாளர் மருத்துவர் D K ஷர்மா தெரிவித்துள்ளார்.
84 வயதாகும் வாஜ்பேயி உடன் அவருடைய பிரத்யேக மருத்துவர் ரந்தீப் குலேரியா மருத்துவ சோதனைகளில் ஈடுபட்டுள்ளார்.
பா ஜ க தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அரசியல் வானில்: மனிதநேய மக்கள் கட்சி பிப்.7ல் உதயம்.
இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நிருபரிடம் கூறுகையில்,
தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்பட இருக்கிறது. துவக்க விழா மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.என்றார்.
கட்சியின் பொதுச் செயலாளராக அப்துல் சமது, பொருளாளராக ஹாரூன் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமுமுக சமூக சேவை அமைப்பாக தொடர்ந்து செயல்படும்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயல்படலாம்.
ராமநாதபுரம், வேலூர், நெல்லை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அவற்றில் எதாவது இரண்டு தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்.
நேற்றுமாலைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்குச் சென்ற 10க்கும் மேற்பட்ட ஆட்கள் இலங்கை அரசுக்கும், ராணுவத்திற்கும் எதிராக கோஷமிட்டபடி தாக்குதலில் இறங்கினர்.
அலுவலக கண்ணாடி கதவுகள், விளம்பர போர்டுகளை தாக்கி சேதப்படுத்தினர். கதவுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அலுவலகத்திற்குள் பணியில் இருந்த இரு ஊழியர்களும் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் சென்று விட்டனர்.
காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகம்: நாளைய முழுஅடைப்புக்கு தடை இல்லை.
இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் சரவணகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நாளை சில அரசியல் கட்சிகள் ஆதரவுடன் `முழுஅடைப்பு' நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை உச்சநீதிமன்றம் சட்ட விரோதம் என அறிவித்து பந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனதுமனுவில் கோரியிருந்தார்.
இன்று பிற்பகல் இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் வேலை நிறுத்தத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டனர்.
நீதிபதிகள் அளித்த உத்தரவில், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்.அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை உள்ளதுஎன்று தெரிவித்துள்ளனர்.
இம்மனு மீதான அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடரை இந்தியா கைப்பற்றியது.
முதல் இரண்டு ஆட்டங்களை வென்ற உற்சாகத்தில் களம் இறங்கிய இந்திய அணி, துவக்கத்தில் கவுதம் கம்பீர் மற்றும் தெண்டுல்கர் இருவரின் முக்கிய விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்து சரிவைச் சந்தித்த போதிலும் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியா 364 ரன்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் இணைந்து 214 ரன்கள் குவித்தனர். வீரேந்திர சேவாக் 116 ரன்களும் யுவராஜ் சிங் 117 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணிக்கு எந்த ஒரு கட்டத்திலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை வழங்காமல் இந்தியா ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது.
இறுதியில் 147 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய ஏற்றுமதித் துறையில் 15 லட்சம் பேர் வேலை இழக்க நேரலாம்!
இந்தியாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குவதால் அந்நாடுகளிலிருந்து வரும் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதித் துறை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த பிள்ளை, இதே நிலை தொடர்ந்தால் மார்ச் மாதத்திற்குள் மேலும் 5 லட்சம் ஊழியர்கள் வேலையை இழக்கக் கூடும் என்றும் கூறினார்.
ஜவுளி மற்றும் ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப் படும் என்று அவற்றில் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலும் உருவாகலாம் என்று அவர் அப்பேட்டியில் தெரிவித்தார்.
மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல்

முல்லைத் தீவு அருகே உள்ள புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது என்றும் இதுவரை மருத்துவ மனையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 12 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் 30க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
சொந்த தயாரிப்பில் இரான் செயற்கை கோள் அனுப்பியது
500 ரூபாய்க்கு மடிக்கணினி
எடியூரப்பா மனைவி மரணம் குறித்து மறு விசாரணை!
ஷிமோகாவைச் சேர்ந்த ஆர் சேஷாத்ரி என்ற வழக்குரைஞர், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மறு விசாரணை செய்யும்படி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வழக்குரைஞர் சேஷாத்ரி, இந்த மரணம் ஒரு கொலை என்றும் உண்மைகள் மறைக்கப்பட்டு சாட்சியங்கள் திரிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகிறார். எடியூரப்பா, அவரது மகள், இரண்டு மகன்கள், பணியாளர்கள் அனைவரும் காவல் துறையினருக்குத் தவறான தகவல்களைத் தந்து திசை திருப்பி விட்டனர் என்றும் தெரிவிக்கிறார்.
முதல்வர் எடியூரப்பா இது பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.
குஜராத் அமைச்சர் தலைமறைவு?
டெல்லி விமானக் கடத்தல் முயற்சி!
5.29 மணியளவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டு ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. விமானத்தைச் சுற்றி கமாண்டோக்கள் நிறுத்தி வைக்கப் பட்டனர். பிறகு பயணிகளை பத்திரமாக வெளியேற்ற முடிவு செய்யப் பட்டது. 8:30 மணியளவில் கமாண்டோக்களின் பாதுகாப்போடு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப் பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஜிதேந்திரா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமீர், ஹர்ப்ரீத் என்ற மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப் பட்டனர்.
பிரிட்டனில் சீன அதிபர் மீது காலணி வீசப்பட்டது!
சீன அதிபர் உலகமயமாதலில் சீனாவின் பங்கு பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தபோது இச்சமபவம் நிகழ்ந்தது. ஐரோப்பியரைப் போல தோற்றம் கொண்ட ஒரு நபர் எழுந்து, 'இந்தச் சர்வாதிகாரி சொல்லும் பொய்களை உங்களால் எப்படி கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது? இதை நீங்கள் எதிர்த்துக் கேட்க வேண்டாமா?' என பார்வையாளர்களை நோக்கி கூச்சலிட்ட வண்ணம் தனது காலணியைக் கழற்றி அதிபரை நோக்கி வீசினார். அது குறி தவறி மேடையில் அதிபரின் ஒரு கஜ தூரத்தில் விழுந்தது.
கேம்பிரிட்ஜ் நகர காவல்துறையினர் 27 வயதான அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுநீரக தானம் உடல்நலத்தைப் பாதிக்காது.
சிறுநீரகக்கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மற்றும் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் சிறுநீரகதானத்தின் காரணமாக அதிகப்படுவதில்லை என்றும், வயது, பாலினம், பரம்பரை உள்ளிட்ட நோய்வாய்க்காரணிகளில் சிறுநீரகத்தானம் செய்தவர், செய்யாதவர் என்ற பாகுபாடு பாரிய வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகவலை பல்கலை.மருத்துவர் ஹசன் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார். "60 விழுக்காடு சிறுநீரக தானமளித்தவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய நிலைகள் சாதாரண பொதுமக்களின் நிலைகளை விடவும் தாழ்ந்துவிடவில்லை" மற்றவர்களைப் போன்ற இயல்பான வாழ்வை தானமளித்தவர்கள் தொடர்வதில் எந்தத் தடையுமில்லை" - என்கிறார் மருத்துவர் இப்ராஹிம்.
நாளை கூடுகிறது தி மு க செயற்குழு.
உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் நாளை கூடும் திமுக செயற்குழுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், நாளைய கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என தெரிகிறது.
நாளை இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என ஊடக உலகில் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்யாணத்தை நிறுத்திய கலெக்டர்.
இவருக்கும், பேதாதம்பட்டியைச் சேர்ந்த துரைவளவன் என்பவருக்கும் நேற்று பேதாதம்பட்டி மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அமுதாவுக்கு தகவல் கிடைத்து. அரசின் சட்டவிதிகளுட்பட்டு மணப்பெண்ணின் வயது ஆகவில்லை என்ற குற்றச்சாட்டினை
யடுத்து மாவட்ட கலெக்டர் அமுதா, இளம் பெண் வெண்ணிலாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த அரூர் டிஎஸ்பி மோகனுக்கு உத்தரவிட்டார்.
இதன் பேரில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரிடம் பேசிய போலீசார் வெண்ணிலாவின் பால்ய திருமணம் சட்ட விரோதமானது எனக் கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
தலைமை தேர்தல் ஆணையரின் பரிந்துரை நிராகரிப்பு
பாண்டிச்சேரியிலும் கல்லூரிகள் மூடல்
விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு?
விமானத்தைக் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கென்யா: எண்ணெய் லாரி வெடித்து 111 பேர் பலி!
தாலிபான் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை
கூகுள் தளத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சர்ச் இஞ்சின் ஜாம்பவனான கூகுள் தளத்தில் இன்று தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் மூலம் தேடிய சர்ச் ரிஸல்ட் பக்கத்தில் பயனர் எவருக்கும் பயன் இல்லாத வகையில் அனைத்துத் தளங்களும் ஆபத்தானவை என்ற அறிவிப்பை வெளியிட்டது கூகுள். இதனால் எந்த ஒரு பயனரும் தனது தேடுதல் மூலம் தளங்களுக்குச் செல்ல இயலவில்லை. இந்த தொழில் நுட்பக் கோளாறு 40 நிமிடங்கள் வரை நீடித்தது.
இணைய உலகின் மிகப் புகழ் பெற்ற கூகுள் தளத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான இந்த தொழில்நுட்பக் கோளாறில் கூகுள்.காம் தளம் கூட ஆபத்தானது என்ற அறிக்கையிலிருந்து தப்பவில்லை. (படம்)
இத் தவறு ஏற்பட்டது எப்படி?
பிரவுஸிங் செய்பவர்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் போன்ற மென்பொருளைக் கொண்டு ஆபத்தினை விளைவிக்கும் தளங்களைக் கண்டறிந்து தகவல் கொடுக்க இது நாள் வரை கூகுள், stopbadware.org என்ற தளத்தின் உதவியை நாடி வந்தது.
அந்த தளம் தந்த தகவலின் அடிப்படையிலேயே இதுநாள் வரை பயனர்களுக்கு இத்தகவலை அளித்து வந்தது.
இன்று காலை இந்தத் தகவல் களஞ்சியத்தை கூகுள் தளத்தில் அப்டேட் செய்கையில் தவறுதலாக உலகின் அனைத்து இணையத் தளங்களும் ஆபத்தானவை என்ற தகவல் பதியப் பட்டு விட்டது.
கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவரான மரிஸா மேயர், இந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு இது மனித உழைப்பில் தகவலை உள்ளீடு செய்வதால் ஏற்பட்டக் கோளாறு என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளை மூட அரசு உத்தரவு
தேர்தல் ஆணையரை நீக்க தலைமைத் தேர்தல் ஆணையர் பரிநதுரை
நடிகர் நாகேஷ் காலமானார்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
அண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.
தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் பூர்வீகம் மைசூர். தந்தை பெயர் கிருஷ்ணாராவ். கர்நாடக மாநிலம் அரிசிக்கரேயில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தவர். தாயார் ருக்மணி அம்மாள். ஆரம்பகாலக்கட்டத்தில் இவர்கள் தமிழகத்தில், தாராபுரத்தில் வசித்து வந்தனர். நாகேஷின் முழுப்பெயர் நாகேஸ்வரன்.
'தாமரைக்குளம்' படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆசியாவின் தூய்மை கிராமம் மெளலினாங்

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரிலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மெளலினாங் என்ற கிராமம் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

ஹரியானா முன்னாள் முதல்வரின் மனைவி கைது
பா.ஜ.க.வை ஆதரிக்க சிவ சேனை நிபந்தனை
விமானப் பயணம்: கட்டணங்கள் குறைகின்றன:
அபெக்ஸ் -21 (APEX - 21) என்ற திட்டத்தின் கீழ், உள்நாட்டு ப் பயணத்தில் இப்போதும் அடிப்படைக் கட்டணம் ரூ.99/= மட்டுமே என்ற போதிலும், அரசுவரியாக ரூ.225/=ம், எரிபொருள் கூடுதல் கட்டணமாக ரூ.2700/= வசூலிக்கப்படுகிறது.
இந்த விலைக்குறைவு பிப்ரவரி 28 வரை மட்டுமே என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பொருளாதார வீழ்ச்சியையும் மீறி விமான நிறுவனங்களிடையேயான போட்டியும் இவ்விலைக்குறைப்புக்கு காரணம் என்றும், பகரமாக தன் அடிப்படை ச்செலவுகளைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.
திரும்பிவிடும் காசோலைகள் குறித்து உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்றங்களில் காசோலை திரும்பல் வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கி இருப்பதை இம்முடிவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உயர்நீதிமன்றங்களில் இவ்வழக்குகளுக்காக வாதிகள் செலுத்தவேண்டிய கட்டண அளவு, காசோலைத் தொகைக்கேற்ப ரூ.200 லிருந்து ரூ.1.5இலட்சம் வரை வசூலிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை: இலங்கை தூதரகம் மீது தாக்குதல் முயற்சி
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை துணை ஆணையர் மவுரியா, உதவி ஆணையர் ரவீந்திரன் ஆகியோர் சேலம் சட்டக்கல்லூரியை சேர்ந்த 36 மாணவர்களை இது தொடர்பாக கைது செய்தனர்.
"போர் நிறுத்த அறிவிப்பை புலிகள் அறிவிக்கட்டும்" - அன்பழகன்.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று அன்பழகன் பேசுகையில்,
இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?. இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அன்பழகன் சட்டசபையில் பேசியுள்ளார்.
இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது.புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.
போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை விரும்பவில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
இந்தியா: தனிநபர் வருமானம் உயர்வு!
வளர்ச்சி விகிதம் 12.7சதம் என்ற இரட்டை இலக்கத்தில் கடந்த ஆண்டு உயர்ந்துஇருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில், அதிகபட்சம் 9.7 சதம் என்ற அளவிலேயே வளர்ச்சி விகிதம் இருந்தது. இதே காலக் கட்டத்தில் 1.4% என்ற அளவு மக்கள் தொகைப் பெருக்கம் இருந்தது. அதாவது நிதியாண்டின் இறுதியில் மக்கள் தொகை 1.38 பில்லியன் ஆகும்.
2003-04 காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 60% சத வளர்ச்சியாகும். அவ்வருடத்திலிருந்து வருடந்தோறும் 10% க்கும் அதிகமான வளர்ச்சி இருந்து வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடும் பொருளாதார சிக்கல்கள் அலைக்கழிக்கும் நடப்பாண்டில் வளர்ச்சி என்பது வீழ்ச்சியாக மாறி 7% என்ற குறியீட்டுக்கு த்தாழ்வு அடையும் என்று கருதப்படுகிறது. இத்தகவலை ரிசர்வ் வங்கியும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுமமும் தெரிவித்துள்ளன.
மலேகான்: ஸ்ரீராமசேனா தலைவனிடம் விசாரணை!
மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சன்னியாசி ப்ரக்யா சிங் தாக்கூரைப் புகழ்ந்து உடுப்பியில் முத்தலிக் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் முத்தலிக்கின் செயல்பாடுகளை, மாலேகான் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கர்னல் பிரசாத் புரோஹித்வெகுவாக புகழ்ந்ததாகவும் அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் சில பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக விசாரணை நடத்தவும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முத்தலிக்கிற்குத் தொடர்பு உண்டா என்பதைக் குறித்து விசாரிக்கவுமே ஏடிஎஸ் கர்நாடகா வர இருக்கிறது.
ஜிம்பாப்வே தன் நாணயத்தைக் கைவிட்டது!
இந்தக் கடும்பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் தாறுமாறாக விலையேறிவிட்டன.
எகிறிச்செல்லும் பணவீக்கத்தினைக் கையாளவோ, உருப்படியான பண மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவோ இயலாத நிலையில் தற்போது இருக்கும் ஜிம்பாப்வே அரசு, பெரும் மதிப்புள்ள நாணயங்களை அறிமுகப்படுத்தி வந்தது. ஐம்பது மில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டுகள் சர்வ சாதாரணமாக ஜிம்பாப்வே மக்கள் புழக்கத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டை ஜிம்பாப்வே அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அந்நாணயத்திற்கு மதிப்பு சிறிதுமின்றிப் போய்விட்டதால் அந்நாட்டுமக்களே இதனைப் பயன்படுத்தாமல் பிற நாட்டு நாணயங்களைப் புழங்கி வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் ஜிம்பாப்வே அரசு தன் நாணயப் பரிமாற்றத்தோடு பிறநாட்டு நாணயங்களையும் மக்கள் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இன்றைய மதிப்பில் ஓர் அமெரிக்க டாலருக்கு 1520 ஜிம்பாப்வே டாலர் என்ற மதிப்பில் இந்நாணயம் உள்ளது.
இதேநிலை இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்தால் ஜிம்பாப்வே தன் நாணயத்தை முற்றிலும் கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் கூட்டணி இல்லை - காங்கிரஸ்
முன்னாள் துணை முதல்வரின் மனைவி தற்கொலை முயற்சி
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை - உ.பி. முதலிடம்
பிரான்சில் இன்று முழு அடைப்பு
ஹரியாணா முன்னாள் துணை முதல்வர் கடத்தப்பட்டதாக 2வது மனைவி புகார்
பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!
தற்பொழுது மீண்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும் டிசல் விலையில் இரண்டு ரூபாயும் சமையல் வாயுவின் விலையில் 25 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை குறைவும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வந்தது.
ஜெர்மனி பெண்ணை கடத்திக் கற்பழித்த ஐவருக்கு வாழ்நாள் சிறை
கஷ்மீரில் இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி முடிவாகவில்லை - தேர்தல் ஆணையம்
கழிவறையில் தண்ணீரைப் பயன்படுத்திய ஊழியர் பணி நீக்கம்
ஓரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழப்பு
அமெரிக்கர்கள் விரோதிகள் அல்லர் - ஒபாமா
அதில் மிகவும் ஆறுதலளிக்கும் குரலில் " அமெரிக்கர்கள் உங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) விரோதிகள் அல்லர்" என்று அவர் கூறியுள்ளார். "முஸ்லிம்களிடத்தில் இச்செய்தியை வழங்குவது தமது கடமை" என்றும் குறிப்பிட்டுள்ள அவர் "பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையேயான பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.
"நாம் சிலநேரம் தவறு இழைத்து விடுகிறோம்" என்ற ஒபாமா 'அமெரிக்கர்களுக்கும் முஸ்லிம் உலகத்திற்கும் இடையே கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நல்லுறவு மீட்டெடுக்கப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த காலத்தின் அதிகாரத் தோரணை மாறி புரிந்துணர்வுத் தோழமையை மேற்கொள்ளும் தொனியை ஒபாமாவின் இந்த பேட்டி அளித்ததாக அல் அரேபியா ஆங்கில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஒபாமாவின் சிறப்புத்தூதராக ஜார்ஜ் ஜே.மிட்சல் எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, ஃபிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் மீது குண்டர் சட்டம்
யூனுஸ்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன்!
இந்தியர்களுக்கு அடையாள அட்டை - அரசு முயற்சியைத் தொடங்கியது
முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் மரணம்
98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஒரு வார காலத்திற்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.
அவர் விடுத்துள்ள செய்தியில், ஆர்.வெங்கட்ராமன் நாட்டு அரசியலிலும் - இந்திய தேசிய அரசியலிலும் தனி வரலாறு படைத்தவர். அவரது மறைவு ஜனநாயகத்திற்கு பெரும் இழப்பாகும். அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
போதைப் பொருளுடன் காவல்துறை உயர் அதிகாரி கைது
60ஆவது குடியரசு தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்

இன்று காலை 8.45 மணிக்கு அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து ராஜ்பத்தில் குடியரசு தின விழா தொடங்கியது. கஜக்ஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நசர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் 24 முறை பீரங்கிக் குண்டுகள் முழங்கப்பட்டன.

இஸ்ரேலியப் படையினருக்கு சட்டப் பாதுகாப்பு - ஒல்மர்ட்
இதனையடுத்து 'ஹேக்'கில் இருக்கும் பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலியப் படையினர் மீது போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்போவதாக தொண்டுநிறுவனம் ஒன்று கூறியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் அவ்வாறு வழக்குத்தொடுக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எந்த ஓர் இஸ்ரேலியப் படையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டாலும் இஸ்ரேலிய அரசு அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை அளிக்கும் எனத் தெரிவித்தார்.
சர்வதேசப் போர் நடைமுறைகளின் படி பொதுமக்கள் குடியிருப்புகள் மீது வெண்பாஸ்பரஸ் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஸாவில் வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரசு, அதனைப் பொதுமக்கள் மீது வீசவில்லை என மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
கஞ்சா பயன்படுத்தல் குற்றம் என பிரிட்டன் மீளறிவிப்பு!
பிரிட்டனின் சட்டப்படி C பிரிவு போதை மருந்துகளை வைத்திருப்பவரை சட்டம் ஒழுங்கு காவலர்கள் அறிவுறுத்த மட்டுமே முடியும். அவர்கள்மீது வழக்குத் தொடுக்கவோ தண்டனை பெற்றுத் தரவோ இயலாது.
தற்போது கஞ்சா B பிரிவு வேதிப் பொருள் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கஞ்சாவை வைத்திருப்பதோ பயன்படுத்துதலோ குற்றம் என்ற பிரிவில் அடங்கும். கஞ்சாவின் புழக்கம் பிரிட்டிஷ் சமூகத்தில் பெருமளவு அதிகரித்துவிட்டதால் கார்டன் பிரவுன் இந்த அறிவிப்பை அளிக்கப் பரிந்துரை செய்தார்.
இதன்படி முதல்முறை விதி மீறுவோருக்கு எச்சரிக்கையும், அவரே இரண்டாம் முறை பிடிபட்டால் 80 பவுண்டு அபராதமும், மூன்றாம் முறை பிடிபட்டால் சிறைத் தண்டனையும் அளிக்க்கப்படும்.
ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம்
வியட்னாம் படகு விபத்தில் 40 பேர் பலி!
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பொருள்கள் வாங்க அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த படகில் அளவிற்கு அதிகமாக பயணிகள் ஏற்றப் பட்டிருந்தனர். 20 பேர் மட்டுமே பயணம் செய்ய உரிமம் வழங்கப் பட்டிருந்த அப்படகில் 80-ற்கும் அதிகமானோர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. படகு கரையை நெருங்கியபோது விரைவாக படகிலிருந்து இறங்குவதற்காக பெரும்பாலான பயணிகள் முண்டியத்துச் சென்றபோது எதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்தது.
ஆற்றிலிருந்து இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. அவர்களுள் இரு கர்ப்பிணிகளையும் சேர்த்து 32 பேர் பெண்கள். 36 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். காணாமல் போன மேலும் சிலரைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவில் காலரா பரவுகிறது
தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற குரூகர் தேசியப் பூங்காவில் காலரா கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பூங்காவின் சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளனர்.
பூங்காவைச் சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப்பயணிகள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என அரசு அலுவலர்கள் கூறினாலும், இப்பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்காக வழங்கப்படும் குடிநீரிலும் இக்க்கிருமிகள் தென்பட்டதாக சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.
ஒவ்வோராண்டும் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குரூகர் தேசியப் பூங்காவிற்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜிம்பாப்வேயில் கடந்த ஆகஸ்டு முதல் 3000க்கும் அதிகமானோர் காலரா தாக்கி இறந்துள்ளனர் என்பது கவலையளிக்கும் தனித் தகவல்.
சத்யம் நிறுவன தணிக்கையாளர்கள் கைது!
சத்யம் நிறுவன கணக்கு வழக்குகளில் 8000 கோடி ரூபாய் தில்லுமுல்லுகள் நடந்திருப்பது வெளியானதைத் தொடர்ந்து அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு இம்மாதத் துவக்கத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் பற்றிய விசாரணைகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்பில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரினிவாஸ் தலுரி ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.
"சத்யம் நிறுவனம் தொடர்பான விசாரணகளுக்கு எங்கள் குழு முழுமையாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கைது நடவடிக்கை துரதிருஷ்டவசமானது" என தணிக்கை நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
இந்தியா - கஜகஸ்தான் : நான்கு ஒப்பந்தங்கள்
மத்திய ஆசியாவில் யுரேனியச் செறிவு மிக்க நாடான கஜகஸ்தான் உலகின் யுரேனிய உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நாட்டுடன் இந்தியா குடிமை அணுசக்தி ஒப்பந்தம், குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்படி யுரேனியம் சார்பொருட்களை கஜகஸ்தான் இந்தியாவுக்கு வழங்கவும், அணுசக்தி நிலையங்களை இந்தியா கஜகஸ்தானில் நிர்மாணிக்கவும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புது டெல்லியில் இருநாட்டு குடியரசுத்தலைவர்கள் பிரதீபா பாட்டீலும், நூருல் இஸ்லாம் நஸர்பயேவ்வும் இவ்வொப்பந்தங்களை மேற்பார்வையிட்டனர்.
"இவை இருநாட்டுகளிடையேயான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும்" என்று நமது செய்தியாளர்களிடம் நஸர்பயேவ் பின்னர் தெரிவித்தார்.
விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பிலும், உலக வர்த்தக அமைப்பில் கஜகஸ்தானுக்கு இடமளிப்பது குறித்தும் மற்ற இரு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
25 இந்திய கடற்பிரயாணிகள் விடுவிப்பு
வேதிப்பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலான M T பிஸ்காலிகா என்ற லைபீரிய கப்பலிலிருந்து ஏடன் வளைகுடா அருகே கடந்த நவம்பர்28 அன்று இவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.
இத்தகவலை தேசிய கடற்பிரயாணிகள் நல ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அப்துல்கனி செராங் தெரிவித்துள்ளார். "அனைவரும் நலமாக உள்ளனர்" என்றார் அவர்.
தொடக்கத்தில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்கள் பிணைத்தொகை கோரியிருந்த கொள்ளையர்கள், பின்னர் அதை 25இலட்சம் டாலர்களாக ஏற்றிக்கேட்டிருந்தனர். எனினும், விடுவிக்கப்படுவதற்கு முன்பாக பிணைத்தொகை வழங்கப்பட்டது பற்றி தெரிய வரவில்லை.
கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட 18 இந்தியர்களுக்குப் பிணைத்தொகையாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இக்கொள்ளையர்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹோலோகாஸ்டை மறுத்த பாதிரியார்கள் மீண்டும் கிருஸ்துவ திருச்சபையுடன் இணைப்பு!
ஹிட்லரின் நாஜிப்படையினரால் யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வு 'ஹோலோகாஸ்ட்' என வரலாற்றில் பதியப் பட்டுள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இச்சம்பவங்களை உண்மை என ஏற்றுக் கொண்டிருந்தாலும் சிலர் அவற்றைப் பற்றிய சந்தேகங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சந்தேகங்களை எழுப்புவது பல ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றத்தை புரிந்ததற்காகவே 4 பிஷப்களும் திருச்சபையிலிருந்து நீக்கப் பட்டிருந்தனர்.
நால்வரில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் வில்லியம்சன் ஹோலோகாஸ்ட் பற்றி கூறப்படுபனவற்றை மறுத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சுவீடன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், யூதர்களைக் கொல்வதற்காக விஷ வாயு கிடங்குகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றே தாம் நம்புவதாகத் தெரிவித்தார். அச்சம்பவங்களில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 60 லட்சம் என்று சொல்லப்படுவதையும் அவர் மறுத்து, அதன் உண்மையான எண்ணிக்கை 3 லட்சம் மட்டுமே இருக்கும் எனவும் அவர் கூறினார்.
நான்கு பிஷப்களையும் மீண்டும் திருச்சபையில் இணைக்கும் உத்தரவை போப் வெளியிடுமுன்பாக பல யூதத் தலைவர்கள் போப்பின் இந்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். பல்லாண்டுகளாக நிலவி வரும் யூத கிருஸ்துவ சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை இது குலைத்து விடும் எனவும் 'ஆழமானதொரு காயத்தை இது மீண்டும் கிளறி விடும்' எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
குவாண்டனாமோ: 2 மலேஷிய கைதிகளை தாய்நாட்டிற்குக் கொண்டுவர பிரதமர் விருப்பம்!
முகமது நாசிர் லெப் மற்றும் முகமது பரிக் அமின் என்ற இரு மலேஷிய நாட்டவரும் 2002-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்புகளை நடத்திய ஜெமா இஸ்லாமியா என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
"அதிபர் பாரக் ஒபாமா (குவாண்டனாமோ சிறையை மூடுவது பற்றிய) தமது வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக மலேஷியா தனது மகிழ்வை தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறிய மலேஷிய பிரதமர், அக்கைதிகள் மலேஷியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களின் எஞ்சிய தண்டணைக் காலத்தை மலேஷிய சிறையில் கழிப்பர் என்றும் தெரிவித்தார்.
குவாண்டனாமோ சிறையில் இன்னும் அடைபட்டிருக்கும் சுமார் 250 பேரில் செப் 11 தாக்குதல் நடக்க உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 நபர்களைச் சேர்த்து சுமார் 20 பேர் மீது மட்டுமே குற்ற வழக்கு பதியப் பட்டிருக்கிறது.
அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பலி!
எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒன்றாக பல ஏவுகணைகள் வந்து விழுந்ததாகவும் ஏவுகணை விழுந்தப் பகுதி முழுவதும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எனவும் கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
அநேகமாக பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்ற பின்னர், அமெரிக்கப் படைகள் நடத்திய முதல் தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.
"தீவிரவாத எதிர்ப்புப் போரின் முக்கிய பகுதிகளாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இருக்கும்" என அதிபர் பராக் ஒபாமா ஸ்டேட் டிபார்ட்மென்ட் கூட்டத்தில் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.
சர்மா கைது செய்த காஷ்மீர் தீவிரவாதி விடுதலை!
டெல்லி சாஸ்திரி பார்க்கின் அண்மையிலுள்ள மெட்ரோ ஸ்டேசனில் வைத்து கடந்த 2004 ஜனவரி 22 அன்று அயாஷ் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்யும் பொழுது அவர் வைத்திருந்தப் பையில் வெடிபொருட்களும் மூன்று லட்சம் ரூபாயும் இருந்ததாகவும் அடுத்து வரும் குடியரசு தினத்தில் டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக அவர் அதனை வைத்திருந்தார் எனவும் டில்லி ஸ்பெஷல் செல் வழக்கு பதிவு செய்திருந்தது.
நிதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பொழுது, ஸ்பெஷல் செல்லிலுள்ள எ.எஸ்.ஐ. ரிஷிகேசிற்கு இக்பாலை கைது செய்த இடம் எங்கு என்பதைக் குறித்து விவரிக்க இயலவில்லை. மற்றொரு ஸ்பெஷல் செல் அதிகாரியான ஜெய் கிஷன், காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டவைக்கு எதிராக, மெட்ரோ அதிகாரிகள் அந்த ரெய்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். ரெய்டில் கலந்துக் கொண்ட எஸ்.ஐ. உமேஷ் பாரதியினால் எவ்வளவு நேரம் ரெய்டு நடந்தது என்றக் கேள்விக்குப் பதிலளிக்க இயலவில்லை.
"குற்றம் சுமத்தப்பட்ட பிரதி, நாட்டுக்கு எதிராக போர் பிரகடன் செய்ததையும் நாட்டைத் தகர்க்க சதியாலோசனை நடத்தியதையும் தெளிவிப்பதில் அரசு தரப்பு தோல்வியடைந்ததாக" தீர்ப்பு கூறிய நீதிமன்றம், காவல்துறைக்கு எதிராகக் கடும் விமர்சனமும் கண்டனமும் தெரிவித்தது.
சீனா பொம்மைகள் இறக்குமதிக்கு இந்தியா தடை!
ஏற்கெனவே மெலாமின் என்ற விஷ ரசாயனப்பொருள கலந்துள்ளதுக் கண்டுபிடிக்கப்பட்டக் காரணத்தினால் சீனாவிலிருந்து சாக்லேட், பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தற்பொழுது சீன உற்பத்தி பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொம்மைகள் உருவாக்கப்படுத்தப்படும் பொருட்களில் விஷ ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக எழுந்த சந்தேகமும் மிக விலை குறைந்த சீன பொம்மைகளின் அளவுக்கதிகமான இறக்குமதி உள்நாட்டு பொம்மை உற்பத்தியை வெகுவாக பாதித்திருப்பதும் இத்தடைக்குக் காரணமாக கூறப்படுகிறது.
பஞ்சாபில் 5 வயது சிறுமி கற்பழிப்பு
"தேச துரோகி" வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி!
இதற்கு முன்னர், மும்பை உயர்நீதிமன்றமும் இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு உச்சநிதிமன்றத்தை அணுகியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மற்றப்பாகங்களில் வெளியான இத்திரைப்படத்தை, மஹாராஷ்டிராவில் வெளியிட மட்டும் மஹாராஷ்டிரா அரசு தடை விதித்திருந்தது.
அதேநேரம், உச்சநிதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னரும் இதுவரை மஹாராஷ்டிராவில் ஒரு திரையரங்கிலும் இத்திரைப்படம் இதுவரை திரையிடப்படவில்லை. திரைப்படம் திரையிட நினைத்திருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க தயாராகாததே இதற்கான காரணமாகும்.
மாலேகான் வழக்கு: சதி திட்டத்தில் ஹிமானி சவார்க்கரும்!
கடந்த ஏப்ரல் 11 அன்று போபாலிலுள்ள ராம ஷேத்திரத்தில் வைத்து நடந்த குண்டு வெடிப்பிற்கான ரகசிய சதியாலோசனை கூட்டத்தில் தானும் ஹிமானி சவார்க்கரும் கலந்துக் கொண்டதாக கடந்த டிசம்பர் 24 அன்று, அபினவ் பாரதின் உறுப்பினருமான வழக்கின் முக்கிய சாட்சி வாக்குமூலம் கொடுத்தார்.
இதனைக் குறித்த கேள்விக்கு, "தான் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வேளையில் தற்பொழுது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகளாக இருந்தனர்" என ஹிமானி பதிலளித்துள்ளார்.
ஹிமானியையும் முக்கிய சாட்சியையும் குற்றவாளிகள் பட்டியலில் ஏ.டி.எஸ் சேர்க்கவில்லை. எதனால் இவர்கள் இருவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு, "இதற்கான பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்" என ஏ.டி.எஸ்ஸின் தற்காலிக தலைவர் ரகுவன்ஷி பதிலளித்தார்.
மரம் வெட்டிக்கு தண்டனை
பிரதமருக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை
தீவிரவாத வழக்குகள்: பார் கவுன்ஸிலுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்!
பார் அஸோஸியேசன்களின் நடவடிக்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பொதுநல வழக்கின் மீது வாதம் கேட்கும் பொழுது, தலைமை நிதிபதி கெ.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலுள்ள நீதிபதிகள் குழு பார் கவுன்ஸிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. முஹம்மது ஷிஐப்(லக்னோ), ஸமால் அஹ்மது(ஃபைஸாபாத்), நூர் அஹமது(உஜ்ஜயினி), சுரேந்தர் ஸிகாட்லிங்(மாஹாராஷ்டிரா) ஆகிய வழக்கறிஞர்கள் இணைந்து இந்த பொது நலவழக்கு தொடுத்துள்ளனர்.
"பார் அஸோஸியேசன் சட்ட விரோத தீர்மானம் நிறைவேற்றியுள்ளது" எனவும் "இதன் மூலம் கடந்த ஆண்டு நடந்தத் தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக இருந்ததிலிருந்து விலக வேண்டி வந்ததாகவும்" புகாரில் அவர்கள் கூறினர். "குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக வந்த வேளையில் மற்ற வழக்கறிஞர்கள் தங்களைத் தக்கியதாகவும்" அவர்கள் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.
மைக்ரோஸாப்ட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு
மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை அந்நிறுவனத்தின் நிகர இலாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு குறைந்து விட்டதாகத் தெரிவிக்கிறது. செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இந்த ஆட்குறைப்பு செய்யப் படுகிறது.
அந்நிறுவனத்தில் ஆய்வு, சந்தைப் படுத்தல், விற்பனை, நிதி, சட்டம், மனிதவளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப் படுவர் என்று தெரிகிறது.
குவாண்டனாமோ சிறையை மூட ஒபாமா உத்தரவு!
11 லாரிகள் தீக்கிரை
சினிமா தயாரிப்பாளர் பரத்ஷா கைது
ஒபாமா ஆரவாரமான துவக்கம்!
பதவியேற்பு முடிந்து நேரடியாக வெள்ளை மாளிகை சென்ற ஒபாமா, முதல் வேலையாக தனது பதவியேற்பிற்கு முன், முன்னாள் அதிபர் புஷ் தனது பதவி காலத்தின் இறுதியில் கையெழுத்திட்டிருந்த அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி, தனது தேர்தல் பிரச்சார வேளையில் அளித்திருந்த "குவாண்டனமோ சிறைச்சாலையினை மூடும்" வாக்குறுதியினை நிறைவேற்றும் ஆரம்பப்படியாக, உடனடியாக குவாண்டனமோ கைதிகளின் நீதிமன்ற விசாரணைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று நடக்க இருந்த ஒரு வழக்கினை நீதிபதி பாட்ரிக் பாரிஷ் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
அதிபர் பதிவேற்ற ஒபாமாவின் முதல் நாள் நடவடிக்கைகள் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.



