Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வெற்றியை நோக்கி இந்தியா - நியூசிலாந்தில் சாதனை படைக்குமா?

Published on: திங்கள், 6 ஏப்ரல், 2009 // ,
நியூலிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில், நியூசிலாந்து 4 விக்கெட்களை இழந்து 167 ரன்கள் எடுத்து இருந்தது. டைலர் 69 ரன்களுடனும், பிராங்ளின் 26 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். முன்னதாக, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 434 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடத் துவங்கிய, நியூசிலாந்து, இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் முன்னனி மட்டை வீரர்களை இழந்தது. ஏற்கனவே 1-0 என்ற முன்னிலையில் உள்ள இந்தியா, 2-0 என்ற கணக்கில் இத்தொடரை வெல்லுமா என்பது நாளை தெரியும்.

காம்பீர் அதிரடி ஆட்டம் - வலுவான நிலையில் இந்தியா

Published on: ஞாயிறு, 5 ஏப்ரல், 2009 // ,
நியூலிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் காம்பீரின் அதிரடியான ஆட்டம் மூலம் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. காம்பீர் சற்று முன் வரை 159 ரனகளுடனும், VVS. லஷ்மன் 38 ரன்களுடன் தொடர்ந்து ஆடி வருகின்றனர். சமீப காலமாக, டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டியில் ஜமாய்த்து வரும், காம்பீர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்தியா தோல்வியை தவிர்க்க துணை புரிந்தார். இந்நிலையில் மூன்றாம் நாளிலேயே 469 ஒட்டங்கள் முன்னிலை எடுத்துள்ள இந்தியாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

இந்தியா அபார பந்துவீச்சு, நியூலிலாந்து 197 ரன்களில் சுருண்டது

Published on: சனி, 4 ஏப்ரல், 2009 // ,
நியூலிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் நியூலிலாந்து முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர், ஜாகிர்கான், அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்பஜன் 3 வீக்கெட்டுகளை வீழ்த்தினார். முனாப் மற்றும் இஷாந்த் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா, ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்து இருந்தது. ஒருதின போட்டியில் தனது அதிரடியான ஆட்டம் மூலம் நியூலிலாந்தை சிதறடித்த, சேவாக், டெஸ்ட் போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் சமனில் முடிந்தது!

நேப்பியரில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 476 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 152 ரன்கள் முன்னிலை வகித்தது. நியூசிலாந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆடாமலேயே ஆட்டம் முடித்துக் கொள்ளப் பட்டது.

இன்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் லஷ்மன் ஆட்டமிழக்காமல் 124 ரன்களுடனும் யுவராஜ் சிங் 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நியுலிலாந்துக்கெதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி - தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

Published on: ஞாயிறு, 29 மார்ச், 2009 // ,
நியுசிலாந்தின் நேப்பியர் நகரில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா சற்றுமுன் வரை, தனது இரண்டாவது இன்னனிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து இருந்தது. அதிரடி வீரர் சேவாக் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, காம்பீரும், டெண்டுல்கரும் நிதானமாக ஆடி வருகின்றனர். காம்பீர் 84 ரன்களும், டெண்டுல்கர் 37 ரன்களும் எடுத்து தொடர்நது விளையாடி வருகின்றனர். முன்னதாக டிராவிட் பொறுமையாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். காம்பீர் விரைவாக 2000 ரன்கள் எடுத்த மூன்றாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

ஐ பி எல் போட்டிகளை நடத்த தெ. ஆப்ரிக்கா உறுதி

Published on: செவ்வாய், 24 மார்ச், 2009 // ,
இந்தியாவில் நடக்க இருந்த ஐ பி எல் போட்டிகள், வேறு நாட்டில் நடத்த போவதாக பிசிசிஐ அறிவித்த பின், தங்கள் நாடுகளில் நடத்த, நீயா, நான என தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் போட்டி போட்டன. இப்பொழுது தென் ஆப்ரிக்காவில் தான் போட்டிகள் நடக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் பருவநிலையயை கருத்தில் கொண்டு பிசிசிஐ இம்முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஐ பி எல் போட்டிகளை நம்பி நுற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பல வகையில் தங்களின் தயாரிப்புகளை விளம்பரம் செய்து இருந்தன. இவைகளின் நிலமைகள் எல்லாம் என்ன என்பது போக போகத்தான் தெரியும். ஏற்கனவே, உலக நிதி நெருக்கடியில் பல நிறுவனங்கள், ஆட் குறைப்பு செய்து வரும் நிலையில், ஐ பி எல் போட்டிகள் வேறு நாட்டில் நடக்கும் போது நிலைமை மேலும் மோசமாகலாம்.

தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி

Published on: திங்கள், 23 மார்ச், 2009 // ,
ஆஸ்திரேலியாவுக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சுழல் பந்து வீச்சாளர் பில் ஹாரிஸ் அபாரமாக பந்து வீசி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் எடுத்தார். முன்னதா ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 422 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதன் ஆல் ரவுண்டர் ஜான்ஸன் அசத்தலாக ஆடி 123 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

வெற்றியை நோக்கி தென். ஆப்ரிக்கா !

Published on: ஞாயிறு, 22 மார்ச், 2009 // ,
கேப் டவுன் நகரில் நடந்து வரும் மூன்றாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முன்னனி வீரர்களை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும், அதன் கடைநிலை ஆட்டக்காரர்கள் தென் ஆப்ரிக்காவின் வெற்றியை தாமதப்படுத்தும் போக்கில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
சற்று முன்வறை, ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவிற்கு மாற்றம்

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடப்பது உறுதியாகிவிட்டது. இன்று BCCI யின் அவசரக் கூட்டம் மும்பையில் நடந்தது. மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் போட்டிகள் நடைபெறுவதாக இருந்ததையொட்டி, போட்டிகளை தள்ளி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் BCCI யை கேட்டுக் கொண்டது. முதலில் போட்டிகள் ஒத்திவைப்பதாக கூறி வந்த BCCI, வியாபாரம் மற்றும் ஸ்பான்ஸர்களின் வேண்டுகோளுக்கிணங்க வேறு நாடுகளில் நடத்த ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனிடையே, இங்கிலாந்தும் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளதாக BCCI வட்டாரம் தெரிவிக்கின்றன.

தென் ஆப்ரிக்கா அதிரடி ரன் குவிப்பு

Published on: சனி, 21 மார்ச், 2009 // ,
தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வீரர்கள் அபாரமாக விளையாடி 651 ஓட்டங்கள் குவித்தனர். டீ வில்லர்ஸ் அதிரடியாக விளையாடி 164 குவித்தார், இதில் 12 பவுன்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். சற்று முன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட துவங்கிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 33 ஒட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்தியா அபாரம் - 32 ஆண்டுகளுக்குப் பின் நியூ. முதல் டெஸ்ட் வெற்றி

இந்தியா, நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. டோனி தலைமயில் சமீபகாலமாக அட்டகாசமாக அசத்தி வரும் இந்தியா, 32 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வென்றுள்ளது.இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முன்னனி வீரர்கள் அனவரும் பெவிலியன் திரும்ப, அதிரடி ஆட்டக்காரர் மெக்கெல்லம் சிறப்பாக விளையாடி 84 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 6 விக்கெட் எடுத்து வெற்றிக்கு உதவினார். ஆட்டநாயகனாக சாதனை மன்னன் டென்டுல்கர் தெரிவு செய்யப்பட்டார்.

தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா மூன்றாம் டெஸ்ட் போட்டி

Published on: வியாழன், 19 மார்ச், 2009 // ,
தென் ஆப்ரிக்காவில் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பந்தடிக்க தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவின் அபாரமான பந்து வீச்சால் 8 விக்கெட்களை இழந்து 205 எடுத்து இருந்தது. அணித்தலைவர், ரிக்கி பான்டிங் மற்றும் உதவி தலைவர் கிளார்க் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி உலக சாதனை புரிந்தனர்.

நியுஜிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா நிதானமான தொடக்கம்.

நியுஜிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை குவித்தது. சச்சின் அபாரமாக ஆடி 70 ரன்களுடனும், யுவராஜ்சிங் 8 ரனகளுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக முதலில் ஆடிய நியுஜிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 279 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தடுமாறிய நியுஜிலாந்து, அணித்தலைவர் வெட்டொரி மற்றும் புதுபுக வீரர் ரைடர் அபாரமான ஆட்டத்தால் 279 ரன்களை எடுத்தது. இருவரும் சதங்களை அடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.

கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

ஆக்லந்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் மட்டைப்பந்தாட்டத்தில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றி கண்டுள்ளது.

முதலில் மட்டை பிடித்தாடிய இந்தியா 10 ஆட்டக்காரர்களையும் இழந்து 149 ஓட்டங்களே பெற்றது. 74 பந்துகளில் 43 ஓட்டங்கள் (ஆட்டம் இழக்காமல்) பெற்றார் ரோகித் சர்மா. வழக்கமான அதிரடியை வெளிப்படுத்திய சேவாக் 27 பந்துகளில் 40 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இத்துடன் யுவராஜ்(11) தவிர, ஏனைய இந்திய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒற்றைஇலக்க ஓட்டங்கள் மட்டுமே பெற்று வீழ்ந்தனர். பந்துவீச்சில் நியுசிலாந்து தரப்பில் ரைடர் மூவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

36.3 சுற்று பந்துவீச்சில் 149 ஓட்டங்கள் பெற்று எளிதான இலக்கை இந்தியா அளிக்க, இந்திய இலக்கை பதட்டமின்றி எதிர்கொண்ட நியூசிலாந்து இருவரை மட்டுமே இழந்து வெற்றிகண்டது.
ஆட்டநாயகன் ரைடர் 49 பந்துகளில் 63 ஓட்டங்களும், குப்டில் 50 பந்துகளில் 57 ஓட்டங்களும் பெற்றனர்.

இதற்கு முன் நடைபெற்ற ஏனைய நான்கில், மூன்று ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது ஒருநாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

கிரிக்கெட்: நியூசிலாந்தில் இந்தியா தொடர் வெற்றி

Published on: புதன், 11 மார்ச், 2009 // , , , ,
ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்ற நான்காவது ஒருதினப் போட்டியிலும் அபாரமாக வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.
முதலில் மட்டைப்பிடித்தாடிய நியூசிலாந்து 47 பந்துவீச்சு சுற்றுகளில் ஐந்து ஆட்டக்காரர்கள் இழப்புக்கு 270 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் மெக்கல்லம் அதிகபட்சமாக 77 ஓட்டங்களும் மெக்கிலஷான் 56 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜாஹிர்கான் ஒரு ஆட்டக்காரரையும் இஷாந்த் சர்மா இருவரையும், யுவராஜ் சிங், யூசுஃப் பதான் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.

அதன்பின் ஆடிய இந்தியா டக்வெர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை 24 சுற்றுகளிலேயே எந்த இழப்புமின்றி பெற்று எளிதாக வென்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீர் (67 பந்துகளில் 63 ஓட்டங்கள் - ஆறு நான்குகள்) சேவாக் - 74 பந்துகளிலேயே 125 ஓட்டங்கள் அதில் 14 நான்குகள் 6 ஆறுகள் பெற்று அசத்தினர். சேவாக்குக்கு இது 11வது ஒருநாள் சதமாகும். கம்பீர் தன் 15ஆவது அரைச்சதத்தைப் பெற்றார். 60 பந்துகளில் சதம் கடந்த சேவாக், இதே நியூசிலாந்துக்கெதிராக 1998ல் 62 பந்துகளில் அதிவேக சதமடித்திருந்த அஸ்ஹருத்தீனின் சாதனையை தகர்த்து ஒருதினப் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

ஐ.பி.எல். போட்டி தேதிகளில் மாற்றம் தவிர்க்க முடியாதது - ப.சி.

Published on: வெள்ளி, 6 மார்ச், 2009 // , , , , ,
இந்தியன் பிரீமியர் லீக் போட்டி தேதிகளில் மாற்றம் செய்வது தவிர்க்க முடியாதது என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

தேர்தல் ஆணையம் தேர்தல் நாள்களை அறிவிப்பதற்கு முன்பே ஐ.பி.எல். போட்டித் தேதிகளை அறிவி்த்துவிட்டாலும், தேர்தல் ஆணையம் ஐ.பி.எல். போட்டி தேர்தல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று தாம் கோரவில்லை எனவும், அவர்கள் போட்டிகளை நடத்த தாம் ஒத்துழைப்புத் தருவதாகவும் கூறிய அமைச்சர் சிதம்பரம், போட்டிகளின் தேதிகளில் மாற்றம் செய்வது தவிர்க்க முடியாதது என்று கூறினார்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் கூறிய சிதம்பரம், இந்தியா கிரிக்கெட்டுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பாதுகாப்பான நாடு என்றும் கூறினார்.

ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா நியூசிலாந்தை வென்றது

நேப்பியரில் இன்று நடைப்பெற்ற முதலாம் ஒருநாள் மட்டைப்பந்து ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது. மழை குறுக்கிட்டதன் காரணமாக டக்வெர்த்-லூயிஸ் முறைப்படி பந்துவீச்சு சுற்றுகள் வெகுவாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்தியா 38 சுற்றுகளுக்கு 4 ஆட்டக்காரர்களை இழந்து 273 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் தோனி ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களும், துணைத்தலைவர் சேவாக் 77 ஓட்டங்களும், ரெய்னா 66 ஓட்டங்களும், யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

அதன்பின் நியூசிலாந்து ஆடிய 17ஆவது சுற்றில் மீண்டும் மழை குறுக்கிட நியூசிலாந்துக்கான இலக்கு 28 சுற்றுகளில் 215 ஓட்டங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து 9 ஆட்டக்காரர்களை இழந்து 162 ஓட்டங்களையே எடுத்தது.இதனால் இந்தியா 53 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் தரப்பில் ஹர்பஜன்சிங் மூவரையும் பிரவீன் குமார் இருவரையும் ஜாஹிர்கான், யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோர் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச்செய்தனர்.

கடந்த 20-20 ஆட்டங்கள் இரண்டிலும் நியூசிலாந்திடம் தோற்றிருந்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு!

பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

லாஹூரில் உள்ள கடாபி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அருகில் இது நடந்துள்ளது. இதில் 8 இலங்கை வீரர்கள் காயமுற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை பேட்ஸ்மேன் குமார் சங்கர்கரா உள்பட வீரர்கள் காயமுற்றதாக இலங்கை அணியின் மேலாளர் கூறியதாக இணைய தகவல்கள் கூறுகின்றன.

இது இலங்கை அணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என பாகிஸ்தானிய தொலைக்காட்சிகள் கூறுகின்றன. இரு வீரர்களுக்கு நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், ஒருவருக்கு காலில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், காவல்துறையின் வாகனத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன. இரண்டு குழுக்களுக்கிடையே நடந்த மோதல்களில் இலங்கை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் போன்றதே இத்தாக்குதல் எனவும், அந்தப் பகுதியில் தற்போதும் 12 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் பாகிஸ்தானிய காவல்துறை கூறியுள்ளது.

இலங்கை வீரர்களை அந்தப் பகுதியிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சற்று முன் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நடுவர் ஸ்டீவ் பக்னர் ஓய்வு

Published on: புதன், 25 பிப்ரவரி, 2009 // , , , , ,
மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஸ்டீவ் பக்னர் வரும் மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். 62 வயதாகும் பக்னர், 126 டெஸ்ட் மற்றும் 179 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக 5 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்றதும் அவரது சாதனைகளில் ஒன்று.

62 வயதாகும் தனக்கு மேலும் ஒன்றிரண்டு வருடங்கள் நடுவராக செயல்பட இயலும் என்றாலும் ஓய்வு பெறுவதற்க்கு இதுவே சரியான தருனம் என்றும் தெரிவித்தார்.


வரும் மார்ச் மாதம் தென்னாப்பிரிக்க-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்குப்பின் தான் ஓய்வு பெரும் முடிவை ஐ.சி.சி. யிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.

தனது ஒய்விற்குப்பிறகு மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற விரும்புவதாகவும் ஸ்டீவ் பக்னர் தெரிவித்தார்.

20-20 கிரிக்கெட்: இந்தியா இலங்கையை வென்றது

Published on: செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
இன்று கொழும்புவில் நடைபெற்ற 20-20 சுற்றுகள் மட்டைப்பந்தாட்டத்தில் இந்தியா 3 ஆட்டக்காரர்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

முன்னதாக களம் இறங்கிய இலங்கை அபாரமாக ஆடி 20 சுற்று பந்துவீச்சில் 171 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் தில்ஷான் 47 பந்துகளில் 61ஓட்டங்களும், ஜெயசூர்யா 17 பந்துகளில் 33 ஓட்டங்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் யூசுஃப் பதான் இருவரை வீழ்த்த, இர்ஃபான்பதான் ஒருவரையும், இஷாந்த் சர்மா ஒருவரையும் வீழ்த்தினர்.

பிறகு களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முக்கிய ஆட்டக்காரர்களான ஷேவாக், கம்பீரை இழந்தாலும், யுவராஜ் சிங் , ரெய்னா ஆகியோர் பொறுப்பாக ஆடி முறையே 32, 35 ஓட்டங்கள் பெற்றனர். அதன்பிறகு இந்திய ஆட்டக்காரர்கள் விரைவாக ஆட்டமிழக்க, இந்தியா தோற்றுவிடுமோ என்ற நிலையை மாற்றி பதான் சகோதரர்கள் இந்தியாவுக்கு வெற்றித் தேடி தந்தனர்.

யூசுஃப் பதான் 10 பந்துகளில் 22 ஓட்டங்களும், இர்ஃபான் பதான் 16 பந்துகளில் பெற்ற 33 ஓட்டங்களும் இந்திய அணி வெற்றி பெற உதவியது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!