வெற்றியை நோக்கி இந்தியா - நியூசிலாந்தில் சாதனை படைக்குமா?
Published on: திங்கள், 6 ஏப்ரல், 2009 //
விளையாட்டு,
cricket
நியூலிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில், நியூசிலாந்து 4 விக்கெட்களை இழந்து 167 ரன்கள் எடுத்து இருந்தது. டைலர் 69 ரன்களுடனும், பிராங்ளின் 26 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். முன்னதாக, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 434 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடத் துவங்கிய, நியூசிலாந்து, இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் முன்னனி மட்டை வீரர்களை இழந்தது. ஏற்கனவே 1-0 என்ற முன்னிலையில் உள்ள இந்தியா, 2-0 என்ற கணக்கில் இத்தொடரை வெல்லுமா என்பது நாளை தெரியும்.




