Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஹரியாணா முன்னாள் துணை முதல்வர் கடத்தப்பட்டதாக 2வது மனைவி புகார்

Published on வியாழன், 29 ஜனவரி, 2009 1/29/2009 10:26:00 AM // , , , ,

ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான சந்தர் மோகன் (தற்போது சாந்து முகம்மது) நேற்று கடத்தப்பட்டதாக அவரது இரண்டாவது மனைவி கூறினார்.


சாந்து முகம்மதுவை அவரது வீட்டிற்கு சந்திக்கச் சென்ற சிலர் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றிச் சென்றுவிட்டனர் எனவும் தன்னால் அவரை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், சாந்து முகம்மதுவை கடத்தியவர்கள் கொலை செய்யக் கூடும் என்று அஞ்சுவதாகவும் கூறிய பிஜா, இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறினார்.

சாந்து முகம்மதுவின் இளைய சகோதரரும் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குல்தீப் பிஷ்னோய் என்பவர்தான் இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சுமத்தினார்.

ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனான சந்தர் மோகன் கடந்த டிசம்பர் மாதம் பிஜா என்ற இப்பெண்ணை மணம் புரிவதற்காகவே அவரும் இப்பெண்ணும் முஸ்லிமாக மாறினர். இது ஹரியானா அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் அவர் துணை முதல்வர் பதவியையும் இழக்க நேரிட்டது.

தற்போது கல்கா சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இவர் இருந்து வருகிறார். நான்காவது முறையாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்நதெடுக்கப் பட்டவர் என்பது குறி்ப்பிடத் தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!