Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

பாபரி மஸ்ஜித் தகர்ப்பு: கல்யாண்சிங் மன்னிப்பு கேட்டார்!

Published on புதன், 4 பிப்ரவரி, 2009 2/04/2009 08:54:00 PM // , , , ,

பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் வருத்தம் கொள்வதாகவும் செய்து போன தவறுக்காக மன்னிப்பு கோருவதாகவும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் கூறினார்.

பாஜகவிலிருந்து வெளியேறிய கல்யாண்சிங் கடந்தச் சில நாட்களுக்கு முன்னர் முலாயம் சிங்கின் கட்சியில் இணைந்திருந்தார். முலாயம் சிங்குடன் இணைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கல்யாண்சிங்கிடமிருந்து இவ்வறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"பாஜகவை அழிப்பதே இனி எனது இலட்சியம்" எனவும் கல்யாண்சிங் கூறினார். "பாபரி மஸ்ஜித் என்னுடைய ஆட்சி காலத்தில் தகர்க்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களை அகற்றி நிறுத்துவதற்கோ அவர்களை எதிரியாக கருதுவதற்கோ நான் தயாராகவில்லை" என அவர் மேலும் கூறினார். பாஜகவை விட்டு விலகியதை ஆதரித்து அநேக முஸ்லிம் நண்பர்கள் தனக்குக் கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!