Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முன்னாள் துணை முதல்வரின் மனைவி தற்கொலை முயற்சி

Published on வியாழன், 29 ஜனவரி, 2009 1/29/2009 03:26:00 PM // , , ,

ஹரியாணா மாநில முன்னாள் துணை முதல் சாந்து முகம்மதுவின் மனைவி பிஜா (வயது 37) இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மொஹாலியில் உள்ள அவரது வீட்டில் விஷ மாத்திரை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இப்போது மருத்தவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவர்கள் அனுமதிக்குப் பின் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.


முன்னதாக தன்னுடைய கணவனும் முன்னாள் முதல்வருமான சந்தர் மோகன் என்ற சாந்து முகம்மதுவைக் காணவில்லை என்று நேற்று புகார் அளித்திருந்தார். ஆனால் அந்தப் புகாரை சாந்து முகம்மது மறுத்துள்ளார். காணாமல் போவதற்கு தான் குழந்தை இல்லை என்றும் தானாகவே சென்றதாகவும் அவர் கூறினார்.

1 கருத்து

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!