அமெரிக்காவும், துருக்கியும் உலகின் முன்மாதிரி நாடுகள் - அதிபர் ஒபாமா பெருமிதம்
வெற்றியை நோக்கி இந்தியா - நியூசிலாந்தில் சாதனை படைக்குமா?
அசாமில் குண்டு வெடித்து நால்வர் பலி!
மதுரையில் அழகிரி போட்டி- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
காம்பீர் அதிரடி ஆட்டம் - வலுவான நிலையில் இந்தியா
ஆப்கனில் பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கை தொடரும் - ஒபாமா
தாமரை சின்னத்தில் நடிகர் சரத் குமார் போட்டி?
இந்தியா அபார பந்துவீச்சு, நியூலிலாந்து 197 ரன்களில் சுருண்டது
ஜனதா தளத்திலிருந்து ஜார்ஜ் பெர்ணான்டஸ் நீக்கம்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஜப்பர்பூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட பெர்ணான்டஸ் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
தேர்தலில் பெர்ணான்டஸ் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்ததை அடுத்து அவர் ஜனதா தளத்தில் இல்லை. கட்சியின் முடிவுக்கு எதிராக எவரேனும் போட்டியிட்டால் அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெர்ணான்டசின் உடல்நிலையைக் காரணமாகக் கூறி அவர் போட்டியிட மறுக்கப் பட்டது. ஆனால் தான் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாகக் கூறிய அவர் கடந்த புதன் கிழமையன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நியூயார்க்கில் துப்பாக்கியால் சுட்டு நால்வர் பலி!
அந்தக் கட்டிடத்தில் அமெரிக்க குடியுரிமை வழங்கல் அலுவலகம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்திற்குள் புகுந்த ஒருவன் இன்று காலை (உள்ளூர் நேரம்) 10.30 மணிக்கு துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமுற்றுள்ளனர். மேலும் அந்தக் கட்டிடத்தில் இருந்த 41 பேரை பிணைக் கைதிகளாக அவன் பிடித்து வைத்துள்ளான்.
அந்தப் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் எப்.பி.ஐ. இறங்கியுள்ளது. அவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அதிகாரிகளை அனுப்பியுள்ளது.
நடத்தை விதிகளை மீறியதாக அசாருதீனுக்கு அறிவிக்கை!
மார்ச் 31ஆம் தேதி மொராதாபத்தில் நடந்த தேர்தல் பேரணியின் போது அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக வாகனங்கள் பேரணியில் சென்றது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ம.ம.க. கூட்டணி முடிவு நாளை அறிவிக்கிறது
தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி தர முன் வந்தததால் கூட்டணியில் சிக்கல் நிலவியது. பின்னர் தி.மு.க. இரு தொகுதிகளை ஒதுக்கித் தர முன்வந்துள்ளதாகவும், ஆனால் ம.ம.க. வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை ம.ம.க. ஏற்கவில்லை எனவும், மத்திய சென்னை, வேலூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் ம.ம.க. தனித்துப் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு!
- வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள மக்களுக்கு கிலோ 2 ரூபாய் வீதம் மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படும்.
- தீவிரவாதத்துக்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
- வருமான வரி கட்ட உச்ச வரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும்.
- நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
- வயது முதியோர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
- விவசாய கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
- ராமர் பாலத்தை பாதுகாக்க வேறு பாதையில் சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்.
- ஏழைகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.
- வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்படும்.
- பாதுகாப்பு படையினருக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
- கிராமங்களில் இணையதள வசதி செய்து தரப்படும்.
- ராமர் கோயில் கட்டும் பணியில் பாஜக முனைப்புடன் செயல்படும்.
- இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை தரப்படும்.
- வறுகை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும்.
பொருளாதார சரிவை சீர்படுத்த ரூ.55 லட்சம் கோடி, G-20 நாடுகள் முடிவு

G-20 நாடுகளின் மாநாடு லண்டனில் நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் மெத்வதேவ், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சீர்செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பொருளாதாரத்தை சரிசெய்ய ரூ.55 லட்சம் கோடி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இவற்றை சர்வதேச நிதி அமைப்பு (IMF) மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
பயங்கரவாத மிரட்டல் எதிரொலி: ப.சிதம்பரம் - அத்வானி சந்திப்பு
முக்கிய தலைவர்களை கொன்று அதன் மூலம் தேர்தலை சீர் குலைக்க அவர்கள் திட்டம் தீட்டி இருந்தது உளவுத்துறைக்கு தெரியவந்தது.
பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, மத்தியஅமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராகுல், லல்லு பிரசாத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான்,ஜெயலலிதா உள்ளிட்ட 40 அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் குறிவைத்து இருந்தது தெரியவந்தது.
இந்த 40 தலைவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பினார். காவல்துறைக்கும் துணை இராணுவத்துக்கும் பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
இது தொடர்பாக, மேலும் விளக்கமறிய அத்வானி விரும்பியதால், ப.சிதம்பரம் அவரைச் சந்தித்து அதுபற்றி விளக்கினார். அத்வானிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அவர் விளக்கியதுடன் என்னமாதிரி பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.
"பயங்கரவாதத்தை ஒழிக்க மதவாதத்தை ஒழிக்கவேண்டும்"- ப.சிதம்பரம்
நாடு ஒற்றுமையாக இருந்தால் தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியம் ஆனால் பாரதிய ஜனதா போன்ற மதவாத கட்சிகள் நாட்டைத் துண்டாட நினைக்கின்றன. மதவாதத்தை ஒழிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்க இயலாது. மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சி மட்டும் தான் மத்தியில் ஆட்சியமைக்க தகுதியுடையது. அதனால் மக்கள் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டும். தேர்தலை அமைதியாக நடத்த போதிய படை பலத்தை தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்ளோம்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.
சமாஜ்வாடி பொதுச்செயலாளரானார் சஞ்சய்தத்!
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தன்னை மிரட்டியதாக சஞ்சய்தத் பரபரப்புப் புகார் தெரிவித்திருந்தார்.
தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சஞ்சய்தத்துக்கு உயர்ந்த பதவியான பொதுச்செயலாளர் பதவியை சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் வழங்கியுள்ளார்.
சினிமா
மலேசியப் பிரதமர் பதவி விலகினார்!

மலேசியப் பிரதமர் பதவி விலகினார்!
மலேசியப் பிரதமர் அப்துல்லா அஹமது பதாவி இன்று திடீரென தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். மலேசிய மன்னரிடம் இன்று அவர் தனது விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.
ஆளும் கட்சியில் அவருக்கு செல்வாக்கில் கடும் சரிவு ஏற்பட்டதாலும், முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மதுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும் அவர் இம்முடிவை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து துணை பிரதமர் நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. நஜீப் முன்னாள் பிரதமர் அப்துர் ரஸாக்கின் மகனார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்சில் ஏழு பேருடன் சென்ற விமானத்தைக் காணவில்லை!
ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட RP-C764 வகை விமானம் காகயான் மாகாணத்தில் உள்ள டுகேகராவ் விமான நிலையத்திலிருந்து இன்று காலை (உள்ளூர் நேரம்) 8.55 மணிக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து 30 நிமிட பயண தூரத்தில் இசபெலா மாகாணத்தின் மகனகான் விமான நிலையத்தை அடைய வேண்டிய இவ்விமானம் இதுவரை எந்த விமான நிலையத்தையும் சென்றடையவில்லை. இந்த விமானத்தை தேடும் பணியில் இராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
- இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வழி வகை செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
- இலங்கை போர் நிறுத்தம் ஏற்பட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
- நெல் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அரசை திமுக வலியுறுத்தும்
- மாநில நதிகளின் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்குமாறு திமுக கோரிக்கை விடுக்கும்.
- தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- சேது கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட கோரிக்கை
- அருந்ததியினருக்கு அனைத்து மாநிலத்திலும் இடஒதுக்கீடு தர கோரிக்கை
- ஊரக வேலைவாய்ப்பு 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.
- எஸ்.சி. எஸ்டிக்கு இலவச கல்வி
- அரவாணிகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்க திமுக வலியுறுத்தும்
- அகில இந்திய அளவில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம்
- பொருளாதார சரிவில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி அளிப்பது.
ஜி 20 மாநாடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : வங்கிகள் தாக்கப் பட்டன, ஒருவர் பலி
உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 4000 பேர் கலந்து கொண்டு, "வங்கி அதிகாரிகளை தூக்கில் இடுங்கள்", "வங்கிகளை அகற்றுங்கள்" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. இங்கிலாந்து வங்கி அருகே நடந்த ஆர்ப்பாட்டம் பின்னர் ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் லண்டன் தலைமையகம் அருகில் வன்முறையாய் மாறியது. அந்த வங்கியை அவர்கள் தாக்கினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் காவலர்களுக்கும் சன்டை ஏற்பட்டது. இதில் பல அதிகாரிகள் காயமுற்றதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராயல் ஸ்காட்லாந்து வங்கி பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வங்கியின் நட்டம் 40 பில்லியன் டாலர்கள் என்ற செய்தி வந்ததிலிருந்து, பொதுமக்களின் கோபம் இந்த வங்கி மீது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கியதில் ரூ.900கோடி ஊழல்?
இதையடுத்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரூ. 600 கோடி முதல் ரூ. 900 கோடி வரை ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ்நந்தா முன்னாள் இந்திய கடற்படை தளபதி எஸ்.எம்.நந்தாவின் மகன் ஆவார். இவர் 1971-ல் நடந்த போரில் கடற்படை தளபதியாக இருந்தார். ஆயுத முகவர்களாக செயற்பட்டு வருகிற கதிர்சவுத்ரி, சுரேஷ்நந்தா ஆகியோரிடம் ம.பு.து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இன்னொரு முகவர் கதிர், அவரது சகோதரர் அசில் ஆகியோர் இந்தியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுத விநியோகிகளாக உள்ளனர். இவர்கள் உருஷியா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆயுத நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். முகவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கும், அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. விரைவில் இந்த ஊழல் தொடர்பாக முக்கிய தலைவர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
சிதம்பரம்: திருமாவுக்கு எதிராக பா.ம.க நடப்பு எம்.பி
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம்(தனி), விழுப்புரம்(தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழர்பாதுகாப்பு இயக்கம் என்று அவர்களுடன் தேர்தலுக்கு முன்புவரை தோழமை காட்டிவந்த பா.ம.க. எதிரணியான அதிமுகவில் இடம்பெற்றுவிட இவ்விரு கட்சிகளும் சிதம்பரத்தில் மோதிக்கொள்ளுமா என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே பா.ம.க-வுக்கு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் சிதம்பரம்(தனி)யும் இடம்பெற்றது. இதை அறிந்த திருமா பாமகவுடன் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு கடலூர் தொகுதியை மாற்றிக்கேட்டிருந்தார். வேண்டுகோளை மீறி, இறுதியில் அவருக்கு சிதம்பரம்(தனி) தொகுதியே ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் திருமாவளவன் சிதம்பரம்(தனி) தொகுதியிலேயே போட்டியிட வேண்டிய நிலையில், அவரை எதிர்த்து பா.ம.க தரப்பில் நடப்பு எம்.பியான பொன்னுசாமியே நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் இதே தொகுதியில் களம் காண்பது இது மூன்றாவது முறையாகும்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார் ஜஸ்வந்த்சிங், வீடியோ!
பா.ஜ.க. பிரிவினைவாதஅரசியலை விதைக்கிறது : ராகுல் காந்தி
"இந்த நாடு முழுவதையும் நாங்கள் (காங்கிரஸ்) ஒரே நாடாகக் கருதுகிறோம். இந்த நாட்டின் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் எங்கள் எதிர்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலை விதைக்கின்றனர்" என்று ராகுல் காந்தி கூறினார்.
"சில கட்சிகள் மத அரசியல் செய்கின்றன. சில கட்சிகள் ஜாதி அரசியல் செய்கின்றன. மேலும் எங்களுக்கும் மற்ற எதிர்கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் நாங்கள் இந்தியாவை பொதுமக்களின் பார்வை வழியாகப் பார்க்கிறோம்" என்றும் அவர் கூறினார்.
அவர்கள் இப்போது தீவிரவாதம் குறித்து பேசுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இது குறித்து எதுவும் பேசவில்லை. நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த போது, ஒரு அமைச்சர் காந்தகார் சென்று தீவிரவாதி ஒருவரை விடுவித்து விட்டு வந்தார் என்று ராகுல் கூறினார்.
மன்மோகன் சிங்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் : சமாஜ்வாதி கட்சி
உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அங்கும் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் சமாஜ்வாதி கட்சி தற்போது கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
வாக்காளர்களுக்கு பா.ஜ.க. தலைவர் பணம் கொடுத்தார்?
இராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங்கின் மகன் பார்மர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபின் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதனை தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. ஜஸ்வந்த் சிங்குடன் பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் கைலாஷ் மேக்வால் என்பவரும் இதில் இடம் பெற்றுள்ளார். தேர்தல் பேரணி்யில் கலந்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடன் வந்தவரிடம் பணம் கொடுப்பது போன்று காட்சி அமைந்துள்ளது.
இது குறித்து தாசில்தார் அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் நடிகர் கோவிந்தா ஆகியோர் மீதும் ஏற்கனவே இத்தகைய புகார்கள் எழுந்துள்ளன.
படகு கவிழ்ந்து 300 பேர் பலியானதாக சந்தேகம்!
இப்படகுகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்திருப்பர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 23 நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் 6 இந்தியர்கள் பலி!
கேரளாவிலுள்ள வயநாடு அய்யன்கொல்லியிலுள்ள செரியேரியைச் சேர்ந்தவர் அப்பு மாஸ்டர். இவரின் அஸோக். அப்பு மாஸ்டரின் மகளான அபயாவின் கணவர் தேவராஜன். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் சிலிக்கன்வேலி ஸாண்டாக்ளாராவில் பணிபுரிகின்றனர்.
சம்பவத்தினத்தன்று, குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தேவராஜன் குடும்பத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் அசோகன், மனைவி சுஜிதா, மக்களான அலகா, அகில், மேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். தேவ ராஜனின் மனைவி மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியப்பின் தேவராஜனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் பல உயிர்களையும் பலிவாங்குவது தொடர்கதையாகி வருகிறது.
சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை!
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தேர்தல் சட்டம் தடை விதிக்கிறது. இதனை மனதில் வைத்தே, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க சஞ்சய் தத் மனு அளித்திருந்தார்.
மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "இது தவறான முன்னுதாரணத்திற்கு அடிகோலி விடும்" என கூறியது.
முன்னதாக, சஞ்சய் தத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் தேர்தல் களம் கிரிமினல்களின் கூடாரமாகி விடும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.
தற்போதைய மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர்களில் சுமார் 57 பேர் கிரிமினல் குற்றபின்னணி கொண்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிக அதிகபட்சமாக 27 பேர் பாஜக சார்பாக களமிறங்குபவர்களாவர்.
பஞ்சாபில் சாலை விபத்து, 20 புனித யாத்திரிகர் மரணம்!
ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள நைனா தேவி கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடி விட்டூ ஊர் திரும்பிக் கொண்டிருந்த யாத்திரிகளின் ட்ரக் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபிலுள்ள லூதியானாவிற்கு அருகில் மச்சிவாரா கிராமத்தில் உள்ளவர்கள் ஆவர்.
தேர்தல், வேட்பாளர்கள், சின்னங்கள் அறியாத தளிஞ்சி மலைவாழ் மக்கள்
உடுமலை, மார்ச் 30: உடுமலை அருகே உள்ள தளிஞ்சி, தளிஞ்சி வயல் பகுதி மழைவாழ் மக்கள், தேர்தல் குறித்த விவரங்களே அறியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் எந்தத் தொகுதியை சேர்ந்தவர்கள், நடைபெற இருக்கும் தேர்தல் மத்திய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா அல்லது மாநில அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா என்ற விவரமே தெரியாமல் உள்ளனர்.
வேட்பாளர்கள், சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் இம்மக்களுக்கு விருப்பம் இல்லை.
"தேர்தல் நாளில் ஓட்டுப்போட யாராவது வந்து அழைத்தால் ஓட்டுப் போடுவோம்; அழைக்காவிட்டால் ஓட்டுப் போடமாட்டோம்.
யார் வெற்றி பெற்றால் என்ன பயன்' என்கின்றனர் இக்கிராம மக்கள்.
தாடியும் பர்தாவும் தாலிபானிசம் - உச்சநீதிமன்றம் அதிரடி!
மதசார்பற்ற நிலைபாட்டை விசாலமாக்கி இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது எனவும் நீதிமன்றம் கருத்து கூறியது. "நாளை ஒரு பெண் வந்து பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கலாம். நமக்கு அனுமதிக்க முடியுமா?" என நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பினார்.
தான் ஒரு மதசார்பற்றவன் எனவும் இருப்பினும் மத நம்பிக்கைகளை அடிப்படை உரிமைகளிலிருந்து வேறுபடுத்த வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறினார்.
மத்தியபிரதேசத்திலுள்ள நிர்மலா கான்வெண்டில் மேல் நிலை பிரிவில் பயிலும் முஹம்மது ஸாலிம், "முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளி சட்டத்திட்டத்தினைக் கேள்விக்குட்படுத்தி சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாடி வளர்ப்பது தன்னுடைய மத உரிமை என்றும் மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக்கூடாது எனவும் எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கதல் செய்திருந்தார்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30 ஆம் பிரிவு படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்குவதற்கு அனுமதியுள்ளது என நீதிமன்றம் விளக்கமளித்தது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸாலிம் பயில்வதற்கு வேறு பள்ளியினைத் தேர்வு செய்தூ கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்தவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும் போது, தன்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி அதிகாரிகளின் தெளிவான இரட்டை நிலைபாடு என ஸாலிம் வாதித்த போதிலும் நீதிமன்றம் ஸாலிமின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
ம ம க கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை
திமுக கூட்டணி அறிவிப்பு தொகுதி பங்கீட்டுச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்தவித தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திமுக மமக கூறிவந்தன. இந்நிலையில், ம ம க, 2 மக்களவை+1 மாநிலங்களவை என்று கோரிக்கை வைப்பதாகவும், திமுக 1 மக்களவைத் தொகுதிக்கே ஒத்துக்கொண்டுள்ளதால், கூட்டணி மாறுவது பற்றி ம ம க யோசித்து வருகிறது.
இதற்கிடையே,
மனித நேய மக்கள் கட்சியை தங்கள் கூட்டணியில் நீடிக்கவைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தின் சார்பில் அவரது பிரதிநிதிகள் ஜே.எம்.ஆருண் எம்.பி.யும், தொழிலதிபர் பிரசிடென்ட் அபு ஆகியோர் மமக கட்சி நிர்வாகிகளுடன் பேசி
திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடத்தில் இது பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத்தும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.
இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருந்தும் மனித நேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மனித நேய மக்கள் கட்சி தனது நிலைகுறித்து இன்று இரவு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நால்வரைக் கொலை செய்த வழக்கில் 46 பேருக்கு வாழ் நாள் சிறை!
மேற்கு வங்கத்தில் நான்கு பேரை கொலை செய்த வழக்கில் 46 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு அவர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை அளித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு பீர்பூம் மாவட்டத்தில் லெனினிய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் மூவர் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த 43 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தீபக் சாஹா ராய் இந்த தீர்ப்பை அளித்தார்.
1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பீர்பூம் மாவட்டத்தில் போல்பூர் காவல் எல்லைக்குட்பட்ட முலுக் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.
மதுவுக்கு 'நோ' சொல்லும் கார்கள் -
கோவையைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் சேர்ந்து 'ஆல்கஹால்' வாடைஇருப்பின் வாகனமே செயலிழந்துபோகும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் .
மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது வாகன ஓட்டுனருக்கு மட்டுமின்றி, எதிரே வரும் வாகனத்தில் அமர்ந்திருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது. கோவை நகரில் விபத்தை தடுக்க, காவல்துறை வகுக்கும் வியூகங்கள் எல்லாம் தவிடு பொடியாகிப் போகின்றன. இச்சூழலில், கோவை வழியாம்பாளையத்திலுள்ள எஸ். என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரி மாணவர் கீர்த்திவாசன், கோவை அவினாசி ரோட்டிலுள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வினோத்குமார், ஹரி பிரசாத் ஆகியோர், மதுபானம் அருந்தி, வாகனம் ஓட்டுவதைத் தடுக்க, புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகரோ 880 ' என்ற நுண்ணுணர்வி (சென்ஸார்), மது நெடியை உணரக்கூடியது. இந்த சென்சாரைக் கொண்டு புதிய சர்க்யூட்டை மூன்று மாணவர்களும் உருவாக்கியுள்ளனர். இந்த சர்க்யூட் காரின் ஸ்டீயரிங்கில் பொருத்தப் படும். சென்ஸார் மட்டும் வெளியில் தெரியும். சாவியைப் போட்டு திருகும் போது இரு இக்னேஷியன்கள் இணைவதால், கார் ஸ்டார்ட் ஆகிறது. இந்த இக்னேஷியனுக்கு நடுவில், "ரிலே' பொருத்தப்படும்.
இது, சென்ஸாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு நபர், மதுபானம் அருந்தி கார் சாவியை திருகி ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும் போது, சென்ஸார், ஆல்ஹகால் நெடியை உணர்ந்து, ரிலேவை செயல்பட வைக்கும். இதையடுத்து கார் சாவியை எத்தனை முறை திருகினாலும், இக்னேஷியன்கள் இணையவே இணையாது. முற்றிலும் ஆல்ஹகால் நெடி இல்லாமலிருந்தால் மட்டுமே கார் ஸ்டார்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாணவர்களும் இரு ஆய்வுகளையும் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல நகரங்களில் நள்ளிரவு நடக்கும் விபத்துகளுக்கு மது அருந்தி வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம்.
மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து, புதிய கார் தயாரிக்கும் போது பயன்படுத்தினால், நிச்சயம் மது அருந்தி கார் ஓட்டுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையக்கூடும்.
மாணவர் கீர்த்திவாசனின் நண்பர், சமீபத்தில் தனது காரில் பாலக்காடு நோக்கி சென்ற போது கார் விபத்துக்குள்ளானதில் பலியானார். எதிரே வந்த வாகனத்தின் விளக்கு வெளிச்சத்தில் தடுமாறியதால், கார் கட்டுப் பாடு இழந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து எதிரே வரும் வாகனத்தின் வெளிச்சத்துக்கு ஏற்ப, காரை ஓட்டும் வகையில் ஒளி விளக்கு செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் எனக்கருதிய மூன்று மாணவர்களும், சென்சாரை பயன்படுத்தி "ஆட்டோ டிப்பர்' என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் கண்டுபிடித்த சர்க்யூட் போர்டை, ஒரு காரின் முகப்பு விளக்கு அருகே பொருத்திவிட் டால் போதும். எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கில் இருந்து வெளிவரும் ஒளி அதிகமாக உமிழப்பட்டு (ஹை பீம்), காரின் முகப்பு விளக்கில் படும் போது தானாகவே காரின் விளக் கில் இருந்து ஒளி உமிழ்வது குறைவாக்கப்படும் (லோ பீம்).
எதிரே வரும் வாகனம் கடந்து சென்ற பின், தானாகவே ஹை பீம் முறைக்கு காரின் விளக்கு மாறிக் கொள்ளும். இப்புதிய தொழில்நுட்ப முறையை பல தொழில்நுட்ப கண்காட்சியில் இடம்பெறச் செய்து, மூன்று மாணவர்களும் பரிசுகள் பல பெற்றுள்ளனர்.
"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிடவில்லை" - கமல்
இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆதிக்கம் நீடிக்கிறது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.
நான் நடிகன். எனக்குத் தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்குத் தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.
எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ISI முத்திரை இருக்கிறது. ASI முத்திரை வேண்டியதில்லை.
எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.
ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.
பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் மீதம் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.
பயணிகள் மீதான சந்தேகத்தால் விமானம் தரையிறக்கம்.
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மீண்டும் விமானத்தைத் தரை இறக்க விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வானில் பறந்த விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டது. சந்தேகத்துக்குரிய அந்த 3 நபர்களிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகள் என்பதும், இம்பால் புறப்பட்டு சென்றதும் தெரிய வந்தது. எனவே, அவர்களை தொடர்ந்து பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது
லாஹூர் போலீஸ் மையம் மீதான தாக்குதலில் தாலிபான்
பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல் 8 மணி நேரம் நீடித்திருந்தது. 800 காவலர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இதில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 27 காவலரும், 8 தீவிரவாதிகளும் மொத்தம் 35 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
6 தீவிரவாதிகளும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். 6 தீவிரவாதிகளில் 2 பேர் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்திகா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம் லாகூர் காவலர் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்த தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். எனவே இந்த தாக்குதல் பின்னணியில் தாலிபான் இயக்கத்துக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் லாகூரில் தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று தஹ்ரீக் -யே-தாலிபான் இயக்கத் தலைவர் பைத்துல்லா மக்சூத் பொறுப்பேற்றதுடன் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தாலிபான் இயக்கத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து தாலிபான்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
தீவிரவாதி கசாப்பின் வக்கீல் அஞ்சலி விலகல்!
தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் அஞ்சலி வாக்மாரே வீடு முன்பு சிவசேனா தொண்டர்கள் கோஷம் எழுப்பி, அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கசாப்பிற்க்காக வாதிடுவதிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும் அஞ்சலி வாக்மாரே தெரிவித்துள்ளார்.
மேற்கு மும்பை தொகுதியில் நடிகை நக்மா போட்டி?
காங்கிரஸ் எம்.பி யும் நடிகருமான கோவிந்தா வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தன் விருப்பமின்மையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல நடிகை நக்மாவை தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே ஆண்டனி கட்சி மேலிடத்திடம் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.
மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அ.தி.மு.கவில் இருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.க. வில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தே.மு.தி.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார்.
ஊழல் குற்றம் சாட்டப்பட்வரை பா.ஜ.க.வில் சேர்ப்பதா?
இந்தியாவிலேயே ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவியை இழந்த ஒரே தலைமைச் செயலர் நீரா யாதவ் ஆவார். இத்தகைய ஊழல் மிகுந்த முன்னாள் அதிகாரியை ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களே வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பெயர் குறிப்பிட விரும்பாத பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் ஒருவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
ராஜ்நாத் சிங் போட்டியிட இருக்கும் காஜியாபாத் தொகுதியில் தியாகி இனத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே அந்த இனத்தைச் சார்ந்த இவரை கட்சியில் இணைத்துள்ளதாக மற்றொரு மாநில முன்னாள் தலைவர் கூறி இருக்கிறார்.
கசாபுக்கு அரசு வழக்குரைஞர் - ஏப்ரல் 6 முதல் விசாரணை துவக்கம்
மகராஷ்டிரா சட்ட உதவிக் குழுவில் உள்ள வழக்குரைஞர் அஞ்சலி வக்மரேவை இந்த வழக்கின் போது கசாபின் சார்பில் வாதிட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகில்யானி நியமனம் செய்து இன்று அறிவித்தார்.
மேலும் லஷ்கரே தொய்பாவைச் சார்ந்த பஹீம் அன்சாரி மற்றும் சகாபுதீன் முகமது ஆகியோர் தங்களுடைய வழக்குரைஞர் குறித்து உடன் முடிவெடுக்குமாறும் நீதிபதி வலியுறுத்தினார்.
வருண் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்!
அதன்படி நேற்றிரவு வருண் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
முன்னதாக போடப்பட்ட 3 வழக்குகளில் பிணை கோரியிருந்த அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வருண் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக, பாரதிய ஜனதா தொண்டர்கள் காவல்துறையினருடன் மோதியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 65 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிகழ்வே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவரை கைது செய்ய முதல்வர் மாயாவதியைத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது
மனித நேய மக்கள் கட்சி அதிமுக பக்கம்?
திமுகவில் கோரியுள்ள படியே 2 மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவைத் தொகுதி என்ற கோரிக்கைக்கு இணங்கும் நிலையில் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க மனிதநேய மக்கள் கட்சி முயற்சி செய்வதாகத் தெரிய வந்துள்ளது.
முதன்முதலாக தேர்தலில் களமிறங்க உள்ள ம ம க தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
அதிமுகவும் இக்கோரிக்கைக்கு இணங்கும் எனில், அக்கூட்டணி பலம் பெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆயினும், திமுக கூட்டணியின் முஸ்லிம்லீக் போட்டியிடும் வேலூரில் முஸ்லிம்லீக்கை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட நேரலாம்.
நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் சமனில் முடிந்தது!
இன்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் லஷ்மன் ஆட்டமிழக்காமல் 124 ரன்களுடனும் யுவராஜ் சிங் 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தானில் காவல் பயிற்சி மையம் மீது தாக்குதல்: 9 பேர் பலி!
850 பயிற்சி பெற்று வரும் இப்பள்ளியில் தாக்குதல் நடந்த போது சுமார் 400 பேர் இந்த மையத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 குண்டுகள் வெடித்ததாகவும், துப்பாக்கிச் சூடும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினரைப் போல் உடையணிந்து வந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.
காலை 6.30 மணிக்குத் தொடங்கிய தீவிரவாதத் தாக்குதல் இந்நேரம் வரை தொடர்ந்து வருகிறது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் கொல்கத்தா-லண்டன் விமான சேவை நிறுத்தம்!
மார்ச் 30 ஆம் தேதி முதல் கொல்கத்தா-லண்டன் விமான சேவையை முற்றிலும் நிறுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.1932 ஆம் ஆண்டு முதல் தனது சேவையைத் துவக்கிய இந்நிறுவனம், இடையில் 1985-ல் தற்காலிகமாக நிறுத்தி பின்னர் 1993 முதல் சேவையை மறுபடியும் துவங்கியது.
வாரம் மூன்று முறை கொல்கத்தா-லண்டன் நேரடி விமான சேவை வழங்கி வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், லாபமின்மைக் காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது தில்லி,மும்பை,சென்னை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து தனது நேரடி சேவையை வழங்கி வருகிறது.
இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்
சிட்னியில் முக்கியப் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிட்னி, மெல்போர்ன் மற்றும் கன்பெர்ரா ஆகிய பகுதிகளிலிருந்து தமிழர்கள் 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். சிட்னியின் மார்ட்டின் ப்ளேஸ் பகுதியில் புறப்பட்ட பேரணி டவுன் ஹால் வரை சென்றது.
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று காலை 11.15 மணி அளவில் ஏவப்பட்ட ஏவுகணை 150 விநாடிகளில் இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராணுவ உயர் அதிகாரிகளான லெஃப்டினன்ட் ஷேகான், லெஃப்டினன்ட் ராவ், மேஜர் திவாரி, பிரமோஸ் திட்டத் தலைவர் சிவதானு பிள்ளை மற்றும் இராணுவ தளவாட ஆராய்ச்சிக் கழக இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் இச்சோதனையின் போது அங்கிருந்தனர்.
இந்த சோதனையின் மூலம் பிரமோஸ் ஏவுகணையின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஏற்கனவே இது இராணுவத்தின் உபயோகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஒரிசாவில் குண்டு வெடித்து 4 பேர் பலி!
பெர்ஹாம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புருஷோத்தம்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் இன்று காலை 2 மணி அளவில் இந்த குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிகழ்வு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.
திமுகவில் ஜெகத்ரட்சகன்!
ஜனநாயக முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.திமுக கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டதாகவும், அவரை கட்சியில் சேருமாறு திமுக தலைமை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரும், ஜனநாயக முன்னேற்றகழக நிர்வாகிகளும் இன்று முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், "இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் ஜனநாயக முன்னேற்ற கழக தலைமை நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளோம். ஜனநாயக முன்னேற்ற கழகம், வீரவன்னியர் பேரவை போன்றவை சமுதாய அமைப்புகளாக தொடர்ந்து செயல்படும்", என்று கூறினார்
வருண்காந்தி மீது தேசியபாதுகாப்புச்சட்டம் - மாயாவதி ஆலோசனை
நேற்றைய தினம் வருண்காந்தி தானே முன்வந்து பிலிஃபிட் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.ஆனால், காவல்துறை முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தது
வருண்காந்தி பிணையில் விடுதலையாக மனுதாக்கலும் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
வருண்காந்தி நேற்று நீதிமன்றம் வந்தபோது ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். . வருண்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் காவலர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் காவல்துறை தடியடி நடத்தியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள்.
வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி கடும்கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக அரசு சார்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாயாவதி கூறியுள்ளார்
கடலூரில் களம் காண்கிறார் திருமா?
அதுபோல, மற்றொரு தொகுதியாக விழுப்புரத்தையும் கேட்டுள்ளாராம்.
மகளை வன்புணர்ந்து 11 குழந்தைகளைப் பெற்றதாக தந்தை கைது!
கொலாம்பியாவில் அதிர்வலைகளை எழுப்பியுள்ள இக்குற்றச் சாட்டிற்கு ஆளான 58 வயது மனிதர் தான் நீதிமன்றத்திற்கு வரும்போது காவல் துறை மற்று இராணுவ பாதுகாப்பு வேண்டும் என்று கோரியுள்ளார்.
தற்போது 30 வயதாகும் அந்தப் பெண் தான் 10 வயதை அடையும் முன்பிருந்தே தன்னுடைய தந்தை தன்னை வன்புணர்ந்து வந்ததாகக் குற்றம் சுமத்தினார்.
தாங்கள் ஒருவரையொருவர் விரும்புவதால் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண் தன்னுடைய சொந்த மகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப் பட்டவர் நீதிமன்றத்தில் கூறினார்.
தான் அவரை தந்தையைப் போன்றே மதிப்பதாகவும், அவர் தன்னுடைய தந்தைதான் எனவும் அந்தப் பெண் கூறினார். தன்னை தன்னுடைய தந்தை வன்புணர்ந்ததன் மூலம் 11 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் மூன்று குழந்தைகள் இறந்ததாகவும் அவர் கூறினார்.
மஹாதிர் மீண்டும் UMNO கட்சியில் சேருகிறார்
உ.பி., ஆசிரமத்தில் இளம்பெண் மர்மச்சாவு!

இறந்த அப்பெண்ணின் உடலில் நிறைய காயங்கள் காணப்படுகின்றன என்றும், அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஓடிப்போன ஆசிரமத்தின் பாதுகாவலரைத் தேடி வருவதாகவும் ஷியாம் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.
பாஜக விலிருந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கிய சச்சிதானந்த், சமாஜ்வாதி கட்சிக்குத் தாவி, பின்னர் கல்யான்சிங் துவக்கிய ராஷ்டிரிய கிராந்தி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைவராக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக சட்சிதானந்த் கூறியிருந்தார். இவ்வேளையில் இந்த கொலை நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியுலிலாந்துக்கெதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி - தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்
தேர்தல் கமிஷன் விளம்பர மாடலாகும் கிரிக்கெட் வீரர் தோனி

காங்கிரசுக்கு ஆதரவாக சல்மான் கான் பிரச்சாரம்
வரும் ஞாயிற்கு கிழமை முதல் அவர் உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அனு டான்டன் கூறினார்.
இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தும் பல்வேறு விழாக்களிலும் அவர் பங்கு கொள்வார் என்று கூறப்படுகிறது.
பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வார்கள் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத் தக்கது.
ஒபாமாவை சந்திக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்
வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக அளவில், வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தலைவர்களின் (G-20) மாநாடு லண்டன் நகரில் தொடங்குகிறது.பிரதமர் மன்மோகன்சிங் G-20 மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். பின்னர் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனையும் அவர் சந்திக்கிறார்.
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 7 தொகுதிகள்!
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை நடத்த துபாய் மறுப்பு?
பத்து நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் இந்தப் போட்டிகைள நடத்த தயாராக இல்லை என துபாய் விளையாட்டு நகர் அலுவல் ரீதியாக ஆசிய ஹாக்கி அமைப்புக்கு தகவல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
2010 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றாகக் கருதப்படும் இந்தப் போட்டிகளை மலேசியா நடத்த வேண்டும் என ஆசிய ஹாக்கி அமைப்பு கோரியுள்ளது.
அல்காயிதா அமைப்பை துடைத்தொழிப்போம் - ஒபாமா சூளுரை
செப்-11 தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி அமைத்திருந்த தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அங்கு போர் முடிவுக்கு வரவில்லை என்பதையும், கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.
அல்காயிதா பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதைப் பற்றி பல உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த பின்னரும் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், அமெரிக்கா நேரடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் ஒபாமா எச்சரித்தார்.
ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்காக மேலும் 21,000 பேர் கொண்ட படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். இதோடு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 65,000 ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
4 வயது மாணவியைக் கொன்றதாக திருச்சியில் நர்சரி ஆசிரியை கைது!
ரோகிணி என்ற இச்சிறுமி தவறு செய்ததாகவும், அவரைக் கண்டிக்க ஆசிரியை அடித்தபோது அது அச்சிறுமியின் நெற்றியில் பட்டு, சிறுமி இறந்ததாகவும் கூறப்படுகிறது. புதன்கிழைமை நடந்த இச்சம்பவத்தை அடுத்து சிறுமியைக் காணாத பெற்றோர் காவல் துறையில் புகார் அளிக்க, வியாழக் கிழமையன்று சிறுமியின் உடலை அருகிலிருந்த கிணற்றிலிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் சிறுமி கொலை செய்யப் பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியை ஜெயாராணி (25), பள்ளி உதவியாளர்கள் ஆரோக்கியராஜ் (27), சகாயராஜ் (26) ஆகியோர் வெள்ளிக் கிழமையன்று கைது செய்யப் பட்டனர்.
நாளை பிரமோஸ் ஏவுகணை சோதனை
இதற்கு முன் பிரமோஸ் ஏவுகனை கடந்த ஜனவரி 20 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
கூட்டணி ஒப்பந்தம் 2 நாட்களில் - ம.ம.க.
ஜவாஹிருல்லாவுடன், ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொருளாளர் ரகமதுல்லா ஆகியோரும் முதல்வர் கருணாநிதியை சந்திக்க உடன் சென்றிருந்தனர்.
இஸ்ரேலுடன் இந்தியா 1.4 மில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம்
அப்துல் கலாமுக்கு ஹோவர் விருது
குஜராத் அமைச்சர் பதவி விலகல் - கைது செய்யப் படக் கூடும்
2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியதாகவும் அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இவர் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு அழைத்தது. இரண்டு முறை அனுப்பப் பட்ட அறிவிக்கைக்கு எவ்வித பதிலும் அளிக்காததைத் தொடர்ந்து, இவர் தலைமறைவாகிவிட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இவர் எந்நேரமும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.
தனக்கு முன்பிணை வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப் பட்டதை அடுத்து, இன்று அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். விரைவில் இவர் கைது செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தேமுதிகவுக்கு முரசு சின்னம்
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தே.மு.தி.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கம்பம் ராமகிருஷ்ணன் இன்று திமுகவில் இணைகிறார்
மதிமுகவிலிருந்து அண்மையில் விலகிய கண்ணப்பனைத் தொடர்ந்து, இரமாகிருஷ்ணனும் கட்சியிலிருந்து விலகினார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இவர் ராஜிநாமா செய்தார். இன்று காலை அவர் தென்மண்டல திமுக அமைப்பாளர் மு.க. அழகரியைச் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.
அதிமுக வுடன் கூட்டணி அமைக்க பாமக பொதுக்குழுவில் ஆதரவு!
வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதனை முடிவு செய்வதற்காக பா.ம.க பொதுக்குழு கூடியது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது, அதில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்க 2453 பேரும் தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க 117 பேரும் வாக்களித்தனர். 10 பேர் நடுனிலை வகித்தனர். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு.உ.பி முராதாபாத்தில் போட்டியுடும் அசாருதீன்!
வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னால் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், உத்திரபிரதேசம் முராதாபாத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.
கட்சியின் தலைவி சோனியா காந்தி மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் குறிப்பிடும் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அசார் தெரிவித்தார்.
தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2. விருதுநகர்-மாஃபா பாண்டியராஜன்
3. கன்னியாகுமரி-ஆஸ்டின்
4. மதுரை-எம்.ஆர்.முத்துலட்சுமி
5. திண்டுக்கல்-முத்துவேல்ராஜ்
6. தேனி-எம்.சி.சந்தானம்
தன் மகளையே வன்புணர்ந்ததாக பா.ஜ.க. தலைவர் கைது!
24 வயதுடைய அவரது மகள் அஜ்னலா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமிர்தசரஸ் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். குற்றம் சுமத்திய அந்தப் பெண் தன்னுடைய தாயாருடன் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கைப் பதிவு செய்த காவல் துறையினர் தனேஜாவை கைது செய்தனர். அவர் தனக்குக் கடுமையாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தமிழகம்: நீதிபதி பெயர் கூறி செல்பேசிகள் திருட்டு
உதயகிரி கடையில் இருந்து 33 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து நோக்கியா மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு அந்த வாலிபருடன் ஆட்டோவில் சென்றார். ஜட்ஜ் பங்களா ரோட்டில் உள்ள நீதிபதி குடியிருப்புப் பகுதிக்குச் சென்று ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார்.மொபைல் போன்களைக் கொடுங்கள் நீதிபதியிடம் காண்பித்துவிட்டு எது தேவை எனக் கேட்டு வருவதாகக் கூறி அருகில் நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றார்.இதுகுறித்து உதயகிரி கொடுத்த புகாரின்படி, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
தமிழகம்: திமுக-காங் கூட்டணி இற்றைப்படுத்தப்பட்டது?
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அதில், தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு பற்றிய விவரம் 2 நாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்து இருந்தார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்படுவது உறுதியாகி விட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
வடசென்னை, காஞ்சீபுரம் (தனி), தர்மபுரி, ஆரணி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி), கன்னியாகுமாரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்க பேசப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறினார்.
மீதம் உள்ள 24 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வீதம் ஒதுக்கி 21 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
திருவள்ளூர் (தனி), தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப் புரம் (தனி), சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் (தனி), தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய 21 தொகுதிகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
விடுதலைச்சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், முஸ்லிம்லீக் கட்சிக்கு வேலூரும், மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.
நன்றி: மாலைமலர்.
தீயிட்டுக் கொளுத்தப்படும் 170 கோடி ரூபாய்
அதன்பின் அவை சுமையுந்துகளில் பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டபின், காவல்துறை பாதுகாப்புடன் தீயிட்டு எரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை வந்த ராகுல் பேட்டி.
வருண் காந்தியின் பேச்சு குறித்து ராகுல் கருத்து தெரிவித்த போது,
வருணுக்கு அவர் விரும்பியதைப் பேச உரிமை உண்டு என்றாலும் அடுத்தவர் மீது வெறுப்போ, கோபமோ கூடாது. அடுத்தவரை புண்படுத்தும் பேச்சு சரியல்ல. இது குறித்து பிரியங்கா விவரமாக கருத்து தெரிவித்துவிட்டார். நான் மேலும் பேச விரும்பவில்லை.
ஆனால் ஒன்று, வருணின் பேச்சு எனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. பிரதமர் மன்மோகன் சி்ங் பாஜகவினர் கூறுவது போல பலவீமானவர் அல்ல. இந்த நாட்டுக்கு நிறைய நல்லது செய்த மனிதர். அவர் மிகச் சிறந்த மனிதாபிமானி. மிகச் சிறந்த ஜென்டில்மேன். அப்படிப்பட்ட நபர்களைப் பார்ப்பதே அரிது. அவரது நடவடிக்கைகளே அவரது தரத்துக்கு எடுத்துக்காட்டு.
அதே நேரத்தில் பெரியவர்கள் குறித்து நான் தீர்ப்பு சொல்ல விரும்பவில்லை. நான் ரொம்ப சிறியவன் என்றார்
பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சி தோல்வி!
முக்கிய கட்சியுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் கூட்டணியில் பா.ம.க. நீடிக்க முடியாததற்கான காரணங்களை அவர்களிடம் அன்புமணி விளக்கியதாக சொல்லப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியின் இறுதி கட்ட முயற்சியும் வெற்றி பெறவில்லை.
சோனியா மற்றும் தலைவர்கள் கருத்து குறித்து அன்புமணி மற்றும் டாக்டர் ராமதாசிடம் பேசியதாக தெரிகிறது. அப்போது டாக்டர் ராமதாஸ் “கட்சி முடிவே முக்கியம்” என்று சொன்னதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் அமைச்சர்கள் அன்புமணி, வேலு ஆகியோர் ராஜினாமா பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!
கோவா கடற்கரையிலிருந்து 22 மைல் தொலைவில் இன்று காலை 11 மணி அளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதிலிருந்த இராணுவத்தினர் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டனர். அவர்களுக்குச் சிறிய அளவில் காயமேற்பட்டடதாகவும், அவர்கள் கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக்கியது கோவா!
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பானாஜியில் உள்ள மும்பை உயர் நீதிமன்ற கிளை ஜல்லிக்கட்டை கோவாவில் தடை செய்திருந்தது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரெஜினால்டோ கொண்டு வந்த ஒரு நபர் தீர்மானத்தை அடுத்து மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜல்லிக் கட்டு சட்டபூர்வமாக்கப் பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்த ரெஜினால்டோ பாரம்பரியமான இந்த விளையாட்டு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார். விவாதத்தின் இடையில் குறுக்கிட்ட அவைத் தலைவர் பிரதாப் சிங் ரானே, ஜல்லிக் கட்டின் மூலம் மிருகங்கள் வதை செய்யப்படக் கூடும் என்று கூறினார். எதிர்கட்சித் தலைவர் மனோகர் பரிகார் மிருகங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மிருகங்களின் பாதுகாப்புகளைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்புடன் ஜல்லிக்கட்டை அனுமதித்து சட்டமியற்றப் பட்டது.
சீக்கியர்களுக்கு எதிராக வருண் பேசியதாக பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!
உத்திரப் பிரதேசத்தில் பிலிபிட் தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது சீக்கியர்களுக்கு எதிராகப் பேசிய வருணின் பேச்சுக்கள் அடங்கிய சிடிகளை பஞ்சாப் மாநிலம் முழுவதும் விநியோகிக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அகாலி தளம் கட்சிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
வருண் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர். அகாலி தளம் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது பிரகாஷ் சிங் பாதல் வருணுடன் கூட்டணி அமைத்துள்ளது போன்றதே. சீக்கியர் மற்றும் முஸ்லிம்கள் குறித்த வருணின் கீழ்த்தரமான விமர்சனங்களை பாதல் ஏற்றுக் கொள்கிறாரா என்பதை அவர் விளக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளவில்லை எனில், வருணின் இந்தப் பேச்சு குறித்து அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைக் கூற வேண்டும் என்று பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
வருணின் இந்தப் பேச்சு குறித்து விவாதிக்க ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் குழு என்ற முக்கிய சீக்கிய அமைப்பு வியாழக் கிழமையன்று கூடுகிறது. தள் கல்சா போன்ற சீக்கி அமைப்புகள் வருணின் சீக்கிய எதிர்ப்பு குறித்து அகாலி தளம் மெளனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அசாமில் பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்டார்
அசாமியத் தலைநகர் கெளஹாத்தியில் ராஜ்கர் சாலையில் உள்ள அவரது வீட்டினருகே இளைஞர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப் பட்டதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.
அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி வீட்டின் வாயிற்கதவைத் திறக்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத 7 பேர் அவரைத் தாக்கியதாகவும் பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கொல்கத்தாவை லண்டன் போல மாற்றுவோம்-மமதா
"தற்போது மக்களவை தேர்தல் தான் நடைபெறவுள்ளது,அடுத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் வெற்றிப்பெற்றால், மாநில வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, கொல்கத்தாவை லண்டன் போல மாற்றிக்காட்டுவோம்", என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும் அவர்," மேற்கு வங்கத்தில் வளர்ச்சி என்றால் என்ன என்பதை செயலில் காட்டுவோம்,மேற்கு வங்க கடலோரப் பகுதியான 'திகா' கோவா போல வளர்ச்சியடைய முடியாதா?,அத்தனை வளங்களும் இங்கு இருக்கும்போது ஏன் வளர்ச்சியடைய முடியாது?, எங்கள் ஆட்சியில் கொல்கத்தா நகரை நிச்சயமாக லண்டன் மாநகரைப் போல் மாற்றிக் காட்டுவோம்", என்றார்.
காங்கிரசுக்கு ஆதரவாக ஷாருக் கான் பிரச்சாரம் ?
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் இன்று கான்பூரில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். ஷாருக் கான் மட்டுமின்றி, நடிகர் கோவிந்தா (இவர் ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி), நடிகைகள் நக்மா, பிரீத்தி ஜிந்தா ஆகியோரும் காங்கிரஸ் கட்சிக்காக பேரணிகள் மற்றும் பிரச்சாரங்களில் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் ஷாருக்கான் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களா என்று கேட்டபோது, இதற்காக அவர்கள் நேரம் ஒதுக்குவார்கள் என்று பதிலளித்தார்.
10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!
மத்தியப் புலனாய்வுத் துறையின் டில்லி பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ஹீரா சிங் இந்த ஹெராயினை அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு எடுத்துச் செல்லவிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்த புலனாய்வு நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மத்திய புலனாய்வுத் துறையின் தகவல்படி போதைப் பொருள் கடத்தலில் பஞ்சாப் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
"பிரதமர் பதவிக்கு மன்மோகனே !"- சோனியா திட்டவட்டம்
தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலையில் மூன்றாவது அணியுடன் காங்கிரஸ் சேருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ராகுல்காந்தி கட்சிக்குத் தலைமை தாங்குவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த சோனியா "பொறுத்து பாருங்கள், தேவை ஏற்படும் சூழலில் அது பற்றி பேசலாம்" என்றார்.
இதற்கிடையில் வலிமையற்ற ஒரு பிரதமர் என்ற அத்வானியின் தாக்குதல் பேச்சுக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் " என் வலிமைகளை என் சாதனைகள் சொல்லும். ஆனால், அத்வானி அப்படி என்ன நாட்டுக்கு நல்லது செய்துள்ளார்?" என்று வினா எழுப்பினார். "பாபர்மசூதி இடிப்பதற்கு மும்முரம் காட்டி தேசத்துக்கு பாரிய கெடுதியை விளைத்ததைத் தவிர அத்வானி வேறு என்ன சாதித்துவிட்டார்" என்று கேட்டார் பிரதமர்.
கிலோ அரிசி/கோதுமை 3 ரூபாய் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை கிலோ ரூ.3 விலையில் வழங்கப்படும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பெறுவோருக்கு தினமும் ரூ.100 கூலி வழங்கப்படும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் நலிவடைந்தோர் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
முன்னேற்றம் தொடரும் - உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் சிறப்பான இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த முன்னேற்றம் தொடரும்
மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
அ தி மு க கூட்டணியில் பா.ம.க - இன்று முடிவு
ஏழு மக்களவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் என்ற பேரம் படிந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தங்கள் கூட்டணியில் பாமகவை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருகின்றது. மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று காலை மருத்துவர் இராமதாஸைச் சந்தித்து கூட்டணி பற்றி பேசினார். அதன்பின் முதலமைச்சர் கருணாநிதியையும் சந்தித்த தங்கபாலு பாமக கூட்டணி பற்றி அவரிடம் எடுத்துரைத்துள்ளார்.
மத்திய அமைச்சரும், இராமதாஸ் மகனுமான அன்புமணி காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் விருப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் 26ந்தேதி கூடவிருக்கும் மாநில செயற்குழுவில் தங்கள் முடிவு திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என்று பாமக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிமுக தருவதாகச் சொல்லியுள்ள 7 மக்களவை+1 மாநிலங்களவை தொகுதிகளை இராமதாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அப்படி அதிமுகவுடன் கூட்டணி உறுதியானால் "அன்புமணி, வேலு ஆகிய மத்திய அமைச்சர்கள் பதவி விலகிவிடுவார்கள் - நேச்சுரலி" என்றார் அவர்.
பெண் கலெக்டரைத் திட்டினாரா முலாயம் சிங்?
இந்நிகழ்வால் கோபம் கொண்ட கட்சித்தலைவர் முலாயம் சிங் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை பெண் என்றும் பாராமல் தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
"நீ ஒரு பெண், நான் எனது கட்டுப்பாட்டை இழந்து விட்டால் நீ பெண்ணாக இருக்கமாட்டாய். நீ மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியது வரும்" என்று ஆபாசம் கலந்த வார்த்தைகளை பயன்படுத்திப் பேசினார் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சு பற்றி தேர்தல் ஆணையம் விசாரித்து இதில் தேர்தல் விதி மீறல் இருக்கிறதா? என்று ஆராய்ந்து வருகிறது.
ஐ பி எல் போட்டிகளை நடத்த தெ. ஆப்ரிக்கா உறுதி
நாயைச் சுட்டவரை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீசார்
போலீஸ் நாய் தற்போது கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஸா போரின்போது இஸ்ரேலிய மத குருக்கள் இரானுவ வீரர்களை மதவெறியூட்டினர்.

அவிவ் என்ற பெயரிட்ட கிவாத் பிரிகேட்டில் படை உறுப்பினராக இருந்த ரம்ஸ் என்பவர் சொல்லும்போது "ஒவ்வொரு வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்று இருப்பவர்கள் யாவரையும் கொன்று குவிக்கும்படி அவரின் தளபதி உத்தரவு பிறப்பித்ததாகவும்" அதன் படி செயலபடுவதில் அனைத்து வீரர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.
இஸ்ரேலிய வீரர்களின் கொடூரங்கள் பற்றி வெளியான செய்திகள் குறித்து கருத்துக்கூறிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பராக் கூறுகையில் "இஸ்ரேலின் இராணுவம் உலகத்திலேயே மிகச்சிறந்த, ஒழுக்கம் மிக்க, மிக நேர்மையான இராணுவம் என்றும் அதற்கு இனையாக உலகத்தில் வேறு நேர்மை மிக்க இராணுவம் கிடையாது" என்றும் கூறினார். வேறு ஏதும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதுபற்றி விசாரிப்போம் என்றார்.மோஷே எனும் வீரரின் கூற்றுப்படி நாங்கள் நடந்து கொள்ளும்முறை பற்றி எங்களிடம் கடுமையான முறையில் விசாரனை ஏதும் செய்யப்படுவதில்லை. இதைப்பற்றி யாரும் கண்டுகொள்ளப் போவதுமில்லை. போர்களில் இதெல்லாம் சாதாரணம் என்றார்.
மோடிக்கு மாற்றமாக குஜராத் காவல்துறை இயக்குநர் கருத்து!
குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் நர்கரி அமீன் என்பவருக்கு அம்மாநில காவல்துறை இயக்குநர் எழுதிய கடிதத்தில் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியிலிருந்து மே 3ஆம் தேதிவரை 20-20 போட்டிகளை நடத்த தகுந்த பாதுகாப்பு அளிக்க இயலாத நிலையில் குஜராத் அரசு இருப்தாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ள இந்தப் போட்டிகளை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு முன் அல்லது மே 10ஆம் தேதிக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை நடத்த குஜராத் அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று மோடி கூறியிருந்ததற்கு மாற்றமாக காவல் துறை இயக்குநர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதய சூரியன் சின்னத்தை நீக்கக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
சூரியன் இந்துக்களின் கடவுள் என்றும் எனவே அது தேர்தல் சின்னமாக இருக்கக் கூடாது என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து இளைஞர் அமைப்பு என்ற இயக்கம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தி.மு.க.விற்கு உதய சூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்ததில் எந்தவித சட்ட முரணும் இல்லை என்று கூறி இந்த வழக்கை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.
ஏற்கனவே இத்தகைய மனு ஒன்று தேர்தல் ஆணையத்திடமும் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் அதனை நிராகரித்தது குறிப்பிடத் தக்கது.
வருண் தான் வேட்பாளர்-பா.ஜ.க. முரண்டு!
பிலிபித் தொகுதியில் வருண் தான் வேட்பாளர் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. டில்லியில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடைபெற்றது.வருண் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்னர் அவருக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்திருக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் பல்பிர் பூஞ் தெரிவித்துள்ளார்.
வருணை நேரில் சந்தித்த பல்பிர் பூஞ். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,வருண் தான் பிலிபித் தொகுதிதயில் பா.ஜ.க. வேட்பாளர். இது கட்சி மேலிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு. தேர்தல் கமிஷனுக்கு, கட்சிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்க உத்தரவிடும் உரிமை இல்லை கூறியுள்ளார்.




