Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

20-20 கிரிக்கெட்: இந்தியா இலங்கையை

Published on: செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 // , , , , , , ,

இன்று கொழும்புவில் நடைபெற்ற 20-20 சுற்றுகள் மட்டைப்பந்தாட்டத்தில் இந்தியா 3 ஆட்டக்காரர்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.முன்னதாக களம் இறங்கிய இலங்கை அபாரமாக ஆடி 20 சுற்று பந்துவீச்சில் 171 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் தில்ஷான் 47 பந்துகளில் 61ஓட்டங்களும், ஜெயசூர்யா 17 பந்துகளில் 33 ஓட்டங்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் யூசுஃப் பதான் இருவரை வீழ்த்த, இர்ஃபான்பதான் ஒருவரையும், இஷாந்த் சர்மா ஒருவரையும் வீழ்த்தினர்.பிறகு களமிறங்கிய இந்திய...

புலிகள் 19 பேரைச் சுட்டுக் கொன்றனர்!

பாதுகாப்பான இடம் நோக்கி நகரும் பொதுமக்களுக்கு எதிராக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 76 பேர் படுகாயமுற்றனர். புலிகளின் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 25000 பேரை இராணுவம் வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது.தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்தும் கொடூர தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச சமுதாயத்தில் வலுத்து வரும் வேளையில், பாதுகாப்பான இடம் தேடி...

கப்பல்கள் மோதி தீப்பிடித்தது!

Published on: // , , , ,

இரானிலிருந்து 9 மில்லியன் விலையுள்ள 30,000 டன் எண்ணெயுடன் துபை நோக்கி வந்துக் கொண்டிருந்த காஷ்மீர் என்ற பெயர் கொண்ட எண்ணெய் கப்பலும் துபையிலிருந்து சென்று கொண்டிருந்த சீமாபாய் என்ற சரக்கு கப்பலும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக மோதிக் கொண்டதில் வெடித்து தீ பற்றி எரிகிறது.துபையிலுள்ள ஜபல் அலி தீவிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டருக்கு அப்பால் வைத்து இச்சம்பவம் நடைபெற்றது.உயிர் அபாயங்கள் எதுவும் நிகழ்ந்ததாக இதுவரை...

ஆஸ்திரேலிய காட்டுத்தீ - மரணம் 200 கடந்தது!

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக படர்ந்த காட்டுத்தீயில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 கடந்துள்ளது. தீ படர்ந்த பகுதிகளிலிருந்து மேலும் பல உடல்களைத் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்..சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ படர்ந்த மாரிஸ் வில்லி, கிங்லேக் பட்டணங்களில் பொதுமக்கள் நுழைவதற்குக் காவல்துறை தடை விதித்துள்ளது. இங்கு இதுவரை 700 வீடுகள் தீக்கு இரையாகியுள்ளதாகக் கணக்குகள்...

20/20 போராட்டம்!

இலங்கை சுற்றுபயணத்தில் உள்ள இந்திய அணி, இன்று பிரேமதாசா விளையாட்டு அரங்கில் இலங்கையுடன் 20௨0 ஆட்டம் ஆடி வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது.172 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 16 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களில் தள்ளாடி கொண்டிருக்கின்றது.தற்பொழுது யூசுப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் இருவரும்...

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில்

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு சிவகங்கை பிப்.9 தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் ஏரிவயல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செபஸ்தியம்மாள். இந்த ஊராட்சியில் காஞ்சிரம் முதல் முத்துப்பட்டிணம் வரை தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்தின் மூலம் சாலைப்பணி நடைபெற்று வந்தது. இந்தப்பணியில் 138 பேர் ஈடுபட்டுவருவதாக ரிக்கார்டில் குறிக்கப்பட்டிருந்தது....

கடலாடி அருகே பசுமை புரட்சி செயதுவரும் ஆசிரியர் குடிநீர் வசதி

கடலாடி அருகே பசுமை புரட்சி செயதுவரும் ஆசிரியர் குடிநீர் வசதி செய்துதரகோரிக்கை கடலாடி பிப்.10 கடலாடி அருகே பசுமை புரட்சி செய்து வரும் ஆசிரியருக்கு உதவிய மாணவர்கள் குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலாடி அருகே உள்ள பிடாரியேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.இங்கு 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.இரண்டு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு பள்ளியின் வளாகத்தில்...

வேலையில்லாத் திண்டாட்டமே சட்டவிரோத குடியேற்றத்துக்கு காரணம்: ஐ.நா.

வேலையில்லாத் திண்டாட்டமே சட்டவிரோத குடியேற்றத்துக்கு காரணம்: ஐ.நா. தகவல்சென்னை, பிப். 9 : வேலையில்லாத் திண்டாட்டமே சட்டவிரோத குடியேற்றத்துக்கு காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குறிப்பாக இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறிவர்கள் பற்றி போதை மற்றும் குற்றத் தடுப்புக்கான ஐ.நா. அமைப்பு தயாரித்துள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஜூன் 2006 முதல் ஜுன் 2007 வரை...

அங்கன்வாடி மையம் மூடல்: குழந்தைகள்

அங்கன்வாடி மையம் மூடல்: குழந்தைகள் பாதிப்புபரமக்குடி, பிப். 9: பரமக்குடி அருகே, வேந்தோணி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிராமத் தலைவர் நாகேந்திரன் தெரிவித்தார். வேந்தோணி அங்கன்வாடி மையத்தில் பணியாளர் மற்றும் உதவியாளர் என இருவர் வேலைபார்த்து வந்தனர். இதில், பணியாளர் நாகேஸ்வரி 2 மாத விடுப்பில் சென்றுவிட்டார். உதவியாளர் குழந்தைகளைக் கவனித்து வந்தார். இந் நிலையில், இங்கு பணியாற்றிவந்த...

இந்தியா-இலங்கை முதல் 20-20 போட்டி இன்று!

இந்திய-இலங்கை அணிகள் மோதும் முதல் 20-20 கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் இன்று இரவு ஏழுமணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது.நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய மகிழ்வில் இந்திய அணியும் கடந்த ஒருநாள் போட்டியில் வென்ற தெம்பில் இலங்கையும் களம் இறங்குகின்றன.இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஹிர்கான் இருஆட்டங்களுக்கு ஓய்வு எடுத்துவிட்டு இன்று அணிக்குத் திரும்புகிறார். ஒருநாள் போட்டி முடிந்ததும் சச்சின் நாடு...

சந்தையில் புதுசு: பஜாஜ் நிறுவனத்தின் புதிய

பஜாஜ் நிறுவனம், பஜாஜ் XCD-135 DTS SI என்கிற புதிய மோட்டார் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.மிகுந்த ஸ்டைல் மற்றும் செயல்திறனுடன் இளைஞர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் டிஸ்க் பிரேக், ஐவேக கியர் பாக்ஸ், ஆட்டோ ச்சோக், இரண்டு பைலட் விளக்குகள் முதலிய அம்சங்கள் உள்ளன.பஜாஜ் மண்டல மேலாளர் மனோஜ் குமார் நிருபர்களிடம் தெரிவிக்கையில் 'பஜாஜ் நிறுவனத்தின் மதிப்புமிக்க பைக்குகளில் இது...

மத்திய புலனாய்வுத்துறைக்கு உச்சநீதிமன்றம்

CBI எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை, மத்திய அரசுக்கும் அதன் சட்ட அமைச்சகத்துக்கும் கீழ்படியாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டன அறிவுறுத்தல் செய்துள்ளது.உத்திரபிரதேச சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் சொத்துகுவிப்பு குறித்து விஸ்வநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் அல்மாஸ் கபீர், சிரியாக் ஜோசப் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது. "எந்த வழக்கிலும் கடைசி நேரத்தில் வழக்கறிஞர்களை மாற்றும் போக்கை ம.பு.து...

எஃப்.பி.ஐ பெண் அதிகாரி மீது மானபங்கப்புகார்!

விசாரணை செய்யும் வேளையில் எஃப்.பி.ஐ ஐச் சேர்ந்த பெண் அதிகாரி தன்னை மானபங்கம் செய்து கொடுமைபடுத்தியதாக, மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பகிம் அன்சாரி புகார் கூறியுள்ளார். தனது வழக்கறிஞர் வழியாக மும்பை மெட்ரோ நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, நீதிமன்றம் க்ரைம் பிராஞ்சிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம்மாதம் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளது.விசாரணைக்கிடையில் தாக்கியதன் காரணமாக...

பாகிஸ்தான் தாக்கப்பட்டால் இந்தியாவைத் தாக்குவோம் -அல்கைதா.

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் எனில் மும்பையைப் போன்ற தாக்குதல்கள் இந்தியாவில் மேலும் நிகழும் என அல்கைதா மிரட்டல் விடுத்துள்ளது.பாகிஸ்தானை இந்தியா தாக்கும் எனில் மிகப் பெரிய அழிவை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஆப்கானிஸ்தானிலுள்ள அல்கைதா தலைவர் முஸ்தஃபா அபு அல்யாஸி அறிவித்துள்ளார்.சுமார் 20 நிமிட நேரம் ஓடும் இவரின் பேச்சடங்கிய வீடியோவை பி.பி.ஸி வெளியிட்டுள்ளது. ...

ஒரிசா காவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக

ஒரிசாவில் சுமார் 40 ஆயிரம் ஹவில்தார், கான்ஸ்டபிள் மற்றும் சிப்பாய் பொறுப்புகளில் உள்ள காவலர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாய் அச்சுறுத்தி உள்ளனர். 6ஆவது ஊதியக்குழு ஆணையத்தின் பரிந்துரைப்படி தங்கள் ஊதியங்களை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிவரும் அவர்கள், திங்கள் கிழமை காலை 6 மணி முதல் 6 மணிவரை உணவு எதுவும் உண்ணாமல் தங்கள் பணிகளை மேற்கொண்டனர். காவல்துறையின் கீழ்மட்டத்தில் உள்ள இவர்கள்...

முதல்வருக்கு நாளை அறுவை

முதல்வர் கருணாநிதி சமீபகாலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை முதுகுவலி குறையாததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் கருணாநிதி முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி...

சிஃபி: பிராந்திய மொழித்தளங்கள்

சத்யம் ஆன்லைன் தளமாக இருந்து பிராந்திய மொழிகளில் வளர்ச்சி கண்டு சிஃபி டாட் காம் என்று பெயர் பெற்ற இணைய நிறுவனம் தன் பிராந்திய மொழிச்சேவைகளை நிறுத்திக்கொண்டுள்ளது.தமிழ், தெலுங்கு மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய அனைத்து மொழிச்சேவைகளும் மூடப்பட்டதற்கு 'செலவு குறைப்பு நடவடிக்கை' என்று காரணம் சொல்லப்படுகிறது.2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்ச்சேவை 9 ஆண்டுகளில் முடிவு கண்டுள்ளது. ...

தமிழகம்: அரிசி விலை கிடுகிடு

தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.மூட்டைக்கு ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது.ஓரிரு மாதங்களுக்கு முன் நிஷா புயல் வந்து போனதால் நெல் விளைச்சல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டது. நெற்களஞ்சியங்களான தஞ்சை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத விளைச்சல் குறைவு காணப்படுகிறது.மேலும், கர்நாடக மாநிலத்திலிருந்து பிறமாநிலங்களுக்கு அரிசி அனுப்புவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர அரிசி வரத்தும் முழுவதுமாக...

ஓய்வூதியத்தில் அதிருப்தி: விருதுகளை திருப்பி அளித்தனர், முன்னாள்

ஓய்வூதியத்தில் அதிருப்தி: விருதுகளை திருப்பி அளித்தனர், முன்னாள் ராணுவத்தினர் புதுடெல்லி, பிப்.9-ஆறாவது சம்பள கமிஷனில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ராணுவத்தினருக்கும் புதிய சம்பளம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி பரிந்துரை செய்தது. அதன்படி, ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன வீரர்களுக்கு குறைவாகவும் அதன் பிறகு உள்ளவர்களுக்கு சற்று அதிகமாகவும் ஓய்வூதியம் பரிந்துரை செய்யப்பட்டது.இதனால், முன்னாள் ராணுவத்தினர் அதிருப்தி அடைந்தனர். `ஒரே பதவி,...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!