Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

20-20 கிரிக்கெட்: இந்தியா இலங்கையை வென்றது

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 10:33:00 PM // , , , , , , ,

இன்று கொழும்புவில் நடைபெற்ற 20-20 சுற்றுகள் மட்டைப்பந்தாட்டத்தில் இந்தியா 3 ஆட்டக்காரர்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

முன்னதாக களம் இறங்கிய இலங்கை அபாரமாக ஆடி 20 சுற்று பந்துவீச்சில் 171 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் தில்ஷான் 47 பந்துகளில் 61ஓட்டங்களும், ஜெயசூர்யா 17 பந்துகளில் 33 ஓட்டங்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் யூசுஃப் பதான் இருவரை வீழ்த்த, இர்ஃபான்பதான் ஒருவரையும், இஷாந்த் சர்மா ஒருவரையும் வீழ்த்தினர்.

பிறகு களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முக்கிய ஆட்டக்காரர்களான ஷேவாக், கம்பீரை இழந்தாலும், யுவராஜ் சிங் , ரெய்னா ஆகியோர் பொறுப்பாக ஆடி முறையே 32, 35 ஓட்டங்கள் பெற்றனர். அதன்பிறகு இந்திய ஆட்டக்காரர்கள் விரைவாக ஆட்டமிழக்க, இந்தியா தோற்றுவிடுமோ என்ற நிலையை மாற்றி பதான் சகோதரர்கள் இந்தியாவுக்கு வெற்றித் தேடி தந்தனர்.

யூசுஃப் பதான் 10 பந்துகளில் 22 ஓட்டங்களும், இர்ஃபான் பதான் 16 பந்துகளில் பெற்ற 33 ஓட்டங்களும் இந்திய அணி வெற்றி பெற உதவியது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!