Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

தமிழகம்: அரிசி விலை கிடுகிடு

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 01:31:00 AM // , , , , ,

தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
மூட்டைக்கு ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது.
ஓரிரு மாதங்களுக்கு முன் நிஷா புயல் வந்து போனதால் நெல் விளைச்சல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டது. நெற்களஞ்சியங்களான தஞ்சை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத விளைச்சல் குறைவு காணப்படுகிறது.

மேலும், கர்நாடக மாநிலத்திலிருந்து பிறமாநிலங்களுக்கு அரிசி அனுப்புவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர அரிசி வரத்தும் முழுவதுமாக நின்று போனது. இவ்விரு மாநிலங்களே தமிழகத்தின் அரிசி தேவையில் பாதியளவு பூர்த்தி செய்து வந்தன.

வட மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படும் நெல்லுக்கும் சரக்குக்கட்டண உயர்வால் அடக்கவிலை அதிகமாகிவிடுகிறது. இந்நிலை நீடித்தால், அடுத்தடுத்த மாதங்களில் அரிசி கிலோ ரூ.50/=க்கு விற்றாலும் ஆச்சர்யமில்லை என்று அரிசிக்கடை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!