Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கடலாடி அருகே பசுமை புரட்சி செயதுவரும் ஆசிரியர் குடிநீர் வசதி செய்துதரகோரிக்கை

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 09:09:00 PM // , , ,

கடலாடி அருகே பசுமை புரட்சி செயதுவரும் ஆசிரியர் குடிநீர் வசதி செய்துதரகோரிக்கை

கடலாடி பிப்.10
கடலாடி அருகே பசுமை புரட்சி செய்து வரும் ஆசிரியருக்கு உதவிய மாணவர்கள் குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலாடி அருகே உள்ள பிடாரியேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.இங்கு 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.இரண்டு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு பள்ளியின் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்க ளை வளர்த்து வருகின்றனர்.வறட்சியான குடிஞிர் பிரச்சனை நிறைந்த இப்பகுதியில் அரிய வகை மரங்களை வளர்த்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இங்கு புங்கை,வேம்பு,6 வகையான வாகை,

நெல்லி,முருங்கை,மருது,நவ்வாப்பழம் மரம்,அத்தி உள்ளிட்டவைகள் உள்ளன.பசுமைப் புரட்சி செய்துவரும் இப்பள்ளியைப் போன்று கடலாடி பகுதியில் உள்ள 158 பள்ளிகளிலும்,இப்பகுதியில் உள்ள கிராமங்களிலும் மரங்களை வளர்ப்பதற்கு அரசு சார்பில் மரக்கன்றுகள் உதவியும்,தண்ணீர் பிரச்சனையை சரி செய்வதற்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியின் ஆசிரியர் பண்டாரக்கண்ணன் கூறியதாவது:குடியரசு தலைவர் அப்துல் கலாம் பசுமை புரட்சி ஏற்படுத்தி மாசற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியது போல எங்கள் பள்ளியில் அனைத்து வகையான மரங்களையும் வளர்த்து வருகிறோம்.மாணவர்களுக்கு கல்வியையும்,பசுமை மரங்களை வளர்ப்பது குறித்தும் கூறுகிறோம்.

பள்ளி மாணவர்கள் கூறுகையில்,எங்கள் ஊரில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!