Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

அங்கன்வாடி மையம் மூடல்: குழந்தைகள்

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 08:55:00 PM // , , ,

அங்கன்வாடி மையம் மூடல்: குழந்தைகள் பாதிப்பு

பரமக்குடி, பிப். 9: பரமக்குடி அருகே, வேந்தோணி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிராமத் தலைவர் நாகேந்திரன் தெரிவித்தார்.

வேந்தோணி அங்கன்வாடி மையத்தில் பணியாளர் மற்றும் உதவியாளர் என இருவர் வேலைபார்த்து வந்தனர். இதில், பணியாளர் நாகேஸ்வரி 2 மாத விடுப்பில் சென்றுவிட்டார். உதவியாளர் குழந்தைகளைக் கவனித்து வந்தார்.

இந் நிலையில், இங்கு பணியாற்றிவந்த உதவியாளரை பரமக்குடி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் காமராஜர் நகர் பகுதிக்கு மாற்றிவிட்டார். இதனால், குழந்தைகளுக்கு தொடர்ந்து சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்க முடியாமல் அங்கன்வாடி மையம் மூடப்பட்டுவிட்டது.

இதனால், குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!