Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 09, 2025

இந்தியா-இலங்கை முதல் 20-20 போட்டி இன்று!

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 05:46:00 PM // , , , , , , ,

இந்திய-இலங்கை அணிகள் மோதும் முதல் 20-20 கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் இன்று இரவு ஏழுமணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது.

நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய மகிழ்வில் இந்திய அணியும் கடந்த ஒருநாள் போட்டியில் வென்ற தெம்பில் இலங்கையும் களம் இறங்குகின்றன.

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஹிர்கான் இருஆட்டங்களுக்கு ஓய்வு எடுத்துவிட்டு இன்று அணிக்குத் திரும்புகிறார். ஒருநாள் போட்டி முடிந்ததும் சச்சின் நாடு திரும்பிவிட்டார். 20-20 போட்டியில் சிறப்பு பெற்ற சேவாக், தோனி, யுவராஜ், யூசுஃப் பதான், ரெய்னா ஆகியோர் இந்திய அணியை அலங்கரிக்க, இலங்கையிலோ நட்சத்திர ஆட்டக்காரர்களான சங்கக்காரா, கேப்டன் ஜெயவர்த்தனே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மற்றொரு சிறப்பு மட்டையாளரான ஜெயசூர்யா அணியில் உள்ளார்.

அதுபோல, பந்துவீச்சிலும் முரளிதரன், மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெறாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!