Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

புலிகள் 19 பேரைச் சுட்டுக் கொன்றனர்!

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 10:30:00 PM // , , , , ,

பாதுகாப்பான இடம் நோக்கி நகரும் பொதுமக்களுக்கு எதிராக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 76 பேர் படுகாயமுற்றனர்.
புலிகளின் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 25000 பேரை இராணுவம் வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்தும் கொடூர தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச சமுதாயத்தில் வலுத்து வரும் வேளையில், பாதுகாப்பான இடம் தேடி நகரும் தமிழர்களுக்கு எதிராக புலிகள் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!