Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

மத்திய புலனாய்வுத்துறைக்கு உச்சநீதிமன்றம்

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 05:06:00 PM // , , ,

CBI எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை, மத்திய அரசுக்கும் அதன் சட்ட அமைச்சகத்துக்கும் கீழ்படியாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டன அறிவுறுத்தல் செய்துள்ளது.

உத்திரபிரதேச சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் சொத்துகுவிப்பு குறித்து விஸ்வநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் அல்மாஸ் கபீர், சிரியாக் ஜோசப் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது. "எந்த வழக்கிலும் கடைசி நேரத்தில் வழக்கறிஞர்களை மாற்றும் போக்கை ம.பு.து கைவிடவேண்டும்" என்றனர் நீதிபதிகள்.

முன்னதாக, தன்மீது காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவரால் தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்கு புனையப்பட்டது என்ற முலாயம்சிங் தரப்பு வாதத்தையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சமாஜ்வாதி பொதுச்செயலாளர் அமர்சிங் இது குறித்து கருத்தளிக்கையில் தனக்கு மத்திய புலனாய்வு துறை மீது சற்றும் நம்பிக்கை இல்லை என்றும், அது எப்போதும் நடுவண் அரசின் கைப்பாவையாகவே விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!