Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஒரிசா காவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்தல்

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 10:26:00 AM // , , , , ,

ஒரிசாவில் சுமார் 40 ஆயிரம் ஹவில்தார், கான்ஸ்டபிள் மற்றும் சிப்பாய் பொறுப்புகளில் உள்ள காவலர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாய் அச்சுறுத்தி உள்ளனர்.


6ஆவது ஊதியக்குழு ஆணையத்தின் பரிந்துரைப்படி தங்கள் ஊதியங்களை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிவரும் அவர்கள், திங்கள் கிழமை காலை 6 மணி முதல் 6 மணிவரை உணவு எதுவும் உண்ணாமல் தங்கள் பணிகளை மேற்கொண்டனர். காவல்துறையின் கீழ்மட்டத்தில் உள்ள இவர்கள் ஹவில்தார், கான்ஸ்டபிள் மற்றும் சிப்பாய் சங்கம் என்ற பெயரில் செயல்படும் இவர்கள் தங்கள் சட்டமன்றப் பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் வழக்கம்போல் மேற்கொண்டனர்.

நோய்வாய்ப்பட்டுள்ள தங்கள் குடும்பத்து முதியவர்கள் மற்றும் சிறுகுழந்தைகள் தவிர இந்த காவலர்களின் குடும்பத்தினரும் நேற்று உண்ணா நிலையை மேற்கொண்டதாக சங்கத் தலைவர் பத்மதேவ் பெஹேரா கூறினார்.

தங்கள் கோரிக்கைள் நிறைவேற்றப்படாவிட்டால் சங்கப் பிரதிநிதிகள் கூடி வேலை நிறுத்தத்திற்கான நாளை முடிவு செய்து அறிவிப்பார்கள் என்றும் இவர் கூறினார். அரசிடம் பல முறை வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கையை அரசு பரிசிலீக்காததால் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

ஒரிசாவில் கான்ஸ்டபிள் நிலையிலுள்ள காவலர் மாதம் ரூ. 3000 மட்டுமே சம்பளமாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!