Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆஸ்திரேலிய காட்டுத்தீ - மரணம் 200 கடந்தது!

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 10:18:00 PM // , , ,

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக படர்ந்த காட்டுத்தீயில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 கடந்துள்ளது. தீ படர்ந்த பகுதிகளிலிருந்து மேலும் பல உடல்களைத் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்..

சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ படர்ந்த மாரிஸ் வில்லி, கிங்லேக் பட்டணங்களில் பொதுமக்கள் நுழைவதற்குக் காவல்துறை தடை விதித்துள்ளது. இங்கு இதுவரை 700 வீடுகள் தீக்கு இரையாகியுள்ளதாகக் கணக்குகள் தெரிவிக்கின்றன. விக்டோரியா மாகாணத்தில் 3000 சதுர கிலோமீட்டருக்குக் காட்டுத்தீ படர்ந்துள்ளது.

அவசர உதவிக்கு 70 லட்சம் டாலர்கலை பிரதமர் கெவின்ரட் அனுமதித்துள்ளார். 400 ரெட்க்ராஸ் சேவகர்கள் நிவாரண உதவியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தைக் குறித்து விசாரிப்பதற்காக ராயல் கமிசன் நியமிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!