Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

எஃப்.பி.ஐ பெண் அதிகாரி மீது மானபங்கப்புகார்!

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 02:13:00 PM // , , , , , , ,

விசாரணை செய்யும் வேளையில் எஃப்.பி.ஐ ஐச் சேர்ந்த பெண் அதிகாரி தன்னை மானபங்கம் செய்து கொடுமைபடுத்தியதாக, மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பகிம் அன்சாரி புகார் கூறியுள்ளார். தனது வழக்கறிஞர் வழியாக மும்பை மெட்ரோ நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, நீதிமன்றம் க்ரைம் பிராஞ்சிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம்மாதம் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளது.

விசாரணைக்கிடையில் தாக்கியதன் காரணமாக உடம்பில் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பகீமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் பகீம் கொடுத்த புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை செய்த மூன்று எஃப்.பி.ஐ அதிகாரிகளில் பெண் அதிகாரி மானபங்கப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை விசாரணை நடத்த எஃப்.பி.ஐக்கு அனுமதி வழங்கிய மாநகர காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்திய சட்டப்படி, நாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை வெளிநாட்டு ஏஜன்ஸிகள் விசாரணை செய்ய அனுமதி இல்லை, எனவே அவருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் எனவும் பகீமின் வழக்கறிஞர் நக்வி கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!