Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில்

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 09:17:00 PM // , ,

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு

சிவகங்கை பிப்.9
தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் ஏரிவயல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செபஸ்தியம்மாள். இந்த ஊராட்சியில் காஞ்சிரம் முதல் முத்துப்பட்டிணம் வரை தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்தின் மூலம் சாலைப்பணி நடைபெற்று வந்தது. இந்தப்பணியில் 138 பேர் ஈடுபட்டுவருவதாக ரிக்கார்டில் குறிக்கப்பட்டிருந்தது. இப் பணியை கூடுதல் ஊராட்சி இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். அப்போது 101 பேர் மட்டுமே பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ஜான் செல்வராஜ் காளையார்கோவில் போலிசில் புகார் செய்ததை தொடர்ந்து போலிசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் செபஸ்தியம்மாள், ஊராட்சி எழுத்தர் குருசாமி, மக்கள் நலப்பணியாளர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கர்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!