Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

கப்பல்கள் மோதி தீப்பிடித்தது!

Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 2/10/2009 10:25:00 PM // , , , ,

இரானிலிருந்து 9 மில்லியன் விலையுள்ள 30,000 டன் எண்ணெயுடன் துபை நோக்கி வந்துக் கொண்டிருந்த காஷ்மீர் என்ற பெயர் கொண்ட எண்ணெய் கப்பலும் துபையிலிருந்து சென்று கொண்டிருந்த சீமாபாய் என்ற சரக்கு கப்பலும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக மோதிக் கொண்டதில் வெடித்து தீ பற்றி எரிகிறது.

துபையிலுள்ள ஜபல் அலி தீவிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டருக்கு அப்பால் வைத்து இச்சம்பவம் நடைபெற்றது.

உயிர் அபாயங்கள் எதுவும் நிகழ்ந்ததாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இரு கப்பல் பணியாளர்கள் இதுவரை கடலிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் பயங்கர ஓசையுடன் வெடி சப்தம் கேட்டதாக சாட்சிகள் கூறுகின்ரனர். இரானின் காஷ்மீர் என்ற எண்ணெய் கப்பல் 1998 ல் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!