தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளை மூட அரசு உத்தரவு
Published on: ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009 //
ஈழத்தமிழர்,
தமிழகம்,
போராட்டம்,
Strike,
Tamilnadu
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிகளை காலவரையறை இன்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலியினருக்கும் இராணுவத்தினருக்கும் கடுமையான சன்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவித்தமிழர்களும் பலியாகி வருகின்றனர். இலங்கையில் உடனடியாக சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ அரசு மற்றும் அரசியில் கட்சிகள் கோரியும் இதுவரை சன்டை நிறுத்தம் ஏற்படவில்லை. இந்திய அரசு மெளனம் காத்து வருகிறது.
இதனால் தமிழக மக்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் மத்திய அரசுக்கு எதிராகப் போராடத் துவங்கியுள்ளனர். மூன்று தினங்களுக்கு முன் முத்துகுமார் என்ற ஊடகவியலாளர் தன்னை எரியூட்டிக் கொண்டார். வழக்கறிஞர்கள் சங்கம், வணிகர் சங்கம், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என போராட்டம் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகிறது.
இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் வரும் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மறு தேதி குறிப்பிடும்வரை மூடிவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












