Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மும்பை தாக்குதல் விசாரணை - பாகிஸ்தானில் நடத்தலாம்

Published on வியாழன், 15 ஜனவரி, 2009 1/15/2009 04:02:00 PM // ,

மும்பையில் நவம்பர் 26ஆம் தேதியன்று நடத்தப்பட் தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையை பாகிஸ்தானில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. 


மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தானிய அரசு மறுத்து வருகிறது. இந்திய அரசு அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பாகிஸ்தானிய அரசுக்கும் தீவிரவாதிகளின் பாகிஸ்தானிய தொடர்பு குறித்த ஆதாரங்களை அளித்தது. இவற்றை ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இவை வெறும் தகவல்கள் மட்டுமே என்றும் பாகிஸ்தான் கூறி வருகிறது.

மும்பை தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த அமெரிக்க தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியது. பின்னர் இது குறித்த விசாரணை பாகிஸ்தானில் நடத்தலாம் என்று கருத்து கூறியது. ஆனால் விசாரணை இந்தியாவில்தான் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா கூறி வந்தது.

"இந்தியாவில் நடந்த குற்றங்கள் குறித்து இந்தியாவில்தான் நீதி விசாரணை நடத்த வேண்டும். சில காரணங்களால் இது முடியாமல் போனால் பாகிஸ்தானில் முறையான விசாரணை நடத்த முடியும் என்றால் பாகிஸ்தானில் நடத்தலாம்" என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியா அளித்த ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!