Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

பாலஸ்தீனிய குழுக்கள் சன்டை நிறுத்த

Published on ஞாயிறு, 18 ஜனவரி, 2009 1/18/2009 06:27:00 PM // , ,

ஹமாஸ் சண்டை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. ஹமாஸ் போராளிகளும் மற்ற போராளிக் குழுக்களும் இந்த சன்டை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று ஹமாஸ தலைவர்களில் ஒருவரான அய்மான் தாஹா கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களைத் தொடுத்து வந்தது. சுமார் 1300க்கும் அதிகமானோரை பலி வாங்கிய இந்த தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கோரி வந்த நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் நேற்று தன்னிச்சையான சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை பாலஸ்தீன போராளிக் குழுக்களான ஹமாஸ் உள்பட பல அமைப்புகளும் ஏற்க மறுத்து, இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று அறிவித்திருந்தனர்.

இஸ்ரேலிய சன்டை நிறுத்தத்தை அறிவித்திருந்தும் காஸாவின் பல பகுதிகளிலும் இன்றும் சிறிய அளவிளான தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாயின. காஸாவிலிருந்தும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் தொடர்ந்தன. இந்நிலையில் ஹமாஸ் இயக்கம் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காஸா குறித்து விவாதிப்பதற்காக எகிப்து கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எகிப்தின் ஷரம் அல் ஷைக் எனுமிடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் , அரபு லீக் தலைவர், பிரான்சு, துருக்கி, ஜோர்டான், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!