Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

Published on வியாழன், 8 ஜனவரி, 2009 1/08/2009 05:16:00 PM //

கடந்த 13 நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதில் 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தெற்கு லெபானான் பகுதி மீது இஸ்ரேல் 5 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.


முன்னதாக இன்று காலை தெற்கு லெபானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் அதற்குப் பதிலடியாவே லெபனான் மீதான ஏவுகணை தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் என்ற அமைப்பு தங்களுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளது. லெபனானில் உள்ள பாலஸ்தீனிய குழுக்கள்தான் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசியிருக்க வேண்டும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. ஹமாஸ் இயக்கத்தினர் இதில் ஈடுபடவில்லை எனவும், மற்ற பாலஸ்தீனிய குழுக்கள் செய்தனவா என தங்களுக்குத் தெரியாது எனவும் ஹமாஸ் கூறியுள்ளது. ஹமாஸ் தனது தாக்குதல்களை பாலஸ்தீனத்தின் எல்லையிலிருந்துதான் தொடரும் எனவும் இதற்காக மற்ற அரபு நாடுகளைப் பயன்படுத்தாது எனவும் ஹமாஸ் கூறியுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!