Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

இராக்: அமெரிக்க இராணுவம் திரும்பப் பெறப்படும்.

Published on: செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 // , , , , , , , ,

கடந்த 2003-ம் ஆண்டு இராக் மீது தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது முதல் அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இப்போது அந்த நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். அங்கு இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கர்கள் உட்பட பல நாட்டினரும் கோரி வந்தனர். இதற்கு முந்தைய ஜனாதிபதி புஷ் சம்மதிக்கவில்லை.இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதே ஒபாமா, மாதம்...

மருத்துவமனையில் வாஜபேயி.

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி இன்று இரவு அகில இந்திய விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் இதயக்கோளாறு காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார்.இன்று இரவு 10.00 மணிக்கு ஐசியூ என்று சொல்லப்படும் இண்டென்சிவ் கேர் யூனிட்டில் வாஜ்பாய் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக ஏஐஎம்எஸ் கண்காணிப்பாளர் மருத்துவர் D K ஷர்மா தெரிவித்துள்ளார்.84 வயதாகும் வாஜ்பேயி உடன் அவருடைய பிரத்யேக மருத்துவர் ரந்தீப் குலேரியா மருத்துவ சோதனைகளில் ஈடுபட்டுள்ளார்.பா ஜ க தலைவர்கள் மருத்துவமனைக்கு...

அரசியல் வானில்: மனிதநேய மக்கள் கட்சி பிப்.7ல் உதயம்.

தேர்தல் அரசியலில் பங்கு பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தன் ஆதரவில் மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை பிப்ரவரி 7ம் தேதி துவக்குகிறது. இதற்கான துவக்கவிழா தாம்பரத்தில் நடக்கிறது.இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நிருபரிடம் கூறுகையில்,தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்பட...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்.

இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன கிளை அலுவலகம் திருச்சி நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் செயற்பட்டு வருகிறது.நேற்றுமாலைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்குச் சென்ற 10க்கும் மேற்பட்ட ஆட்கள் இலங்கை அரசுக்கும், ராணுவத்திற்கும் எதிராக கோஷமிட்டபடி தாக்குதலில் இறங்கினர்.அலுவலக கண்ணாடி கதவுகள், விளம்பர போர்டுகளை தாக்கி சேதப்படுத்தினர். கதவுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அலுவலகத்திற்குள் பணியில் இருந்த இரு ஊழியர்களும் அங்கிருந்து அலறி...

தமிழகம்: நாளைய முழுஅடைப்புக்கு தடை இல்லை.

நாளை தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த முழுஅடைப்பு என்று கூறப்படுகிறது. இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் சரவணகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நாளை சில அரசியல்...

இலங்கை தொடரை இந்தியா கைப்பற்றியது.

இலங்கையுடனான ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் அடங்கிய தொடரில், மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது.முதல் இரண்டு ஆட்டங்களை வென்ற உற்சாகத்தில் களம் இறங்கிய இந்திய அணி, துவக்கத்தில் கவுதம் கம்பீர் மற்றும் தெண்டுல்கர் இருவரின் முக்கிய விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்து சரிவைச் சந்தித்த போதிலும் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியா 364 ரன்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக...

இந்திய ஏற்றுமதித் துறையில் 15 லட்சம் பேர் வேலை இழக்க நேரலாம்!

'இந்தியாவில் ஏற்றுமதி சார்ந்த துறைகளில் பணி புரிவோரில் சுமார் 15 லட்சம் வேலை இழக்க நேரலாம்' என மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை ஒரு பேட்டியில் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குவதால் அந்நாடுகளிலிருந்து வரும் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதித் துறை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை சுமார் 10...

மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும்

முல்லைத் தீவு அருகே உள்ள புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது என்றும் இதுவரை மருத்துவ மனையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 12 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் 30க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.சுமார் 2,50,000 தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக சேவை...

சொந்த தயாரிப்பில் இரான் செயற்கை கோள்

இரான் முதன் முறையாக தன்னுடைய நாட்டில் தயாரான செயற்கைக் கோளை இன்று காலை விண்ணில் ஏவியது. ஒமிட் (நம்பிக்கை) என்று பெயரிடப் பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் சபீர் 2 என்ற உள்நாட்டில் தயாரான ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இரானில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இத்தகவல் வெளியாகி உள்ளது.2005ஆம் ஆண்டு இரானின் செயற்கைக் கோளை ரஷ்யா விண்ணில் ஏவியது....

500 ரூபாய்க்கு

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மடிக்கணினி இன்று திருப்பதியில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதன் விலை 10 அமெரிக்க டாலர்கள் (சுமார் 500 ரூபாய்) என்று கூறப்படுகிறது.கணினியைப் பயன்படுத்துவதில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் களைவதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றாய் இக்கணினி அமையும்.VIT (Vellore Institute of Technology), சென்னை ஐ.ஐ.டி. ஆகிய நிறுவனங்கள் இணைந்து இக்கணினியை வடிவமைத்துள்ளன. கணினியின் வடிவமைப்பு குறித்து விரிவான தகவல்கள்...

எடியூரப்பா மனைவி மரணம் குறித்து மறு விசாரணை!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் மனைவி மைத்ரா தேவி கடந்த 2004-ம் ஆண்டு ஷிமோகா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் தண்ணீர் தொட்டி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி அப்போது காவல்துறையினர் விசாரணை செய்து வழக்கையும் மூடி விட்டனர்.ஷிமோகாவைச் சேர்ந்த ஆர் சேஷாத்ரி என்ற வழக்குரைஞர், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மறு...

குஜராத் அமைச்சர் தலைமறைவு?

குஜராத்தில் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவரும் மற்றும் ஒரு மருத்துவரும் தலைமறைவாக இருப்பதாக கோத்ரா கலவரம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலணாய்வுக் குழு அறிவித்துள்ளது.மாயாபின் கோட்னானி என்ற அந்த அமைச்சர் குஜராத் மாநில பெண்கள் முன்னேற்றம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். ஜெய்தீப் பட்டேல் என்பவர் விசுவ இந்து பரிசத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். இந்த இருவருக்கும் சிறப்பு புலணாய்வுக்...

டெல்லி விமானக் கடத்தல் முயற்சி!

சென்ற ஞாயிறு மாலை கோவாவிலிருந்து புதுடில்லி வந்துக் கொண்டிருந்த விமானத்தை ஒரு கும்பல் கடத்த முயல்வதாக விமானி தெரிவித்ததைத் தொடர்ந்து டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 5.29 மணியளவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டு ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. விமானத்தைச் சுற்றி கமாண்டோக்கள் நிறுத்தி வைக்கப் பட்டனர். பிறகு பயணிகளை பத்திரமாக வெளியேற்ற முடிவு...

பிரிட்டனில் சீன அதிபர் மீது காலணி வீசப்பட்டது!

சீன அதிபர் வென் ஜியாபோவின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் ஒரு அங்கமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது பார்வையாளர்களுள் ஒருவர் அதிபரை நோக்கி தம் காலணியை கழற்றி வீசினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.சீன அதிபர் உலகமயமாதலில் சீனாவின் பங்கு பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தபோது இச்சமபவம் நிகழ்ந்தது. ஐரோப்பியரைப் போல தோற்றம் கொண்ட ஒரு நபர் எழுந்து, 'இந்தச் சர்வாதிகாரி சொல்லும் பொய்களை உங்களால்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!