Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

டெல்லி விமானக் கடத்தல் முயற்சி!

Published on செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 2/03/2009 09:20:00 AM // , , , , ,

சென்ற ஞாயிறு மாலை கோவாவிலிருந்து புதுடில்லி வந்துக் கொண்டிருந்த விமானத்தை ஒரு கும்பல் கடத்த முயல்வதாக விமானி தெரிவித்ததைத் தொடர்ந்து டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

5.29 மணியளவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டு ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. விமானத்தைச் சுற்றி கமாண்டோக்கள் நிறுத்தி வைக்கப் பட்டனர். பிறகு பயணிகளை பத்திரமாக வெளியேற்ற முடிவு செய்யப் பட்டது. 8:30 மணியளவில் கமாண்டோக்களின் பாதுகாப்போடு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப் பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜிதேந்திரா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமீர், ஹர்ப்ரீத் என்ற மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப் பட்டனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!