Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல்

Published on செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 2/03/2009 06:29:00 PM // , , , , ,


முல்லைத் தீவு அருகே உள்ள புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது என்றும் இதுவரை மருத்துவ மனையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 12 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் 30க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.


சுமார் 2,50,000 தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக சேவை நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் அப்பகுதியில் 1,20,000 பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது.

மக்கள் பாதுகாப்பான பகுதிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பான பகுதி என்று எதுவும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தியாளர் கர்லா ஹத்தாத் தெரிவித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!