Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்திய ஏற்றுமதித் துறையில் 15 லட்சம் பேர் வேலை இழக்க நேரலாம்!

Published on செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 2/03/2009 08:03:00 PM // , , , , , , ,

'இந்தியாவில் ஏற்றுமதி சார்ந்த துறைகளில் பணி புரிவோரில் சுமார் 15 லட்சம் வேலை இழக்க நேரலாம்' என மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குவதால் அந்நாடுகளிலிருந்து வரும் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதித் துறை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த பிள்ளை, இதே நிலை தொடர்ந்தால் மார்ச் மாதத்திற்குள் மேலும் 5 லட்சம் ஊழியர்கள் வேலையை இழக்கக் கூடும் என்றும் கூறினார்.

ஜவுளி மற்றும் ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப் படும் என்று அவற்றில் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலும் உருவாகலாம் என்று அவர் அப்பேட்டியில் தெரிவித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!