Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்.

Published on செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 2/03/2009 10:54:00 PM // , , , ,

இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன கிளை அலுவலகம் திருச்சி நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் செயற்பட்டு வருகிறது.

நேற்றுமாலைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்குச் சென்ற 10க்கும் மேற்பட்ட ஆட்கள் இலங்கை அரசுக்கும், ராணுவத்திற்கும் எதிராக கோஷமிட்டபடி தாக்குதலில் இறங்கினர்.

அலுவலக கண்ணாடி கதவுகள், விளம்பர போர்டுகளை தாக்கி சேதப்படுத்தினர். கதவுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அலுவலகத்திற்குள் பணியில் இருந்த இரு ஊழியர்களும் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் சென்று விட்டனர்.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!