Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

குஜராத் அமைச்சர் தலைமறைவு?

Published on செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 2/03/2009 09:32:00 AM // , , , , , ,

குஜராத்தில் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவரும் மற்றும் ஒரு மருத்துவரும் தலைமறைவாக இருப்பதாக கோத்ரா கலவரம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலணாய்வுக் குழு அறிவித்துள்ளது.


மாயாபின் கோட்னானி என்ற அந்த அமைச்சர் குஜராத் மாநில பெண்கள் முன்னேற்றம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். ஜெய்தீப் பட்டேல் என்பவர் விசுவ இந்து பரிசத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். இந்த இருவருக்கும் சிறப்பு புலணாய்வுக் குழு விசாரணைக்கு வருமாறு அறிவிக்கை அனுப்பியது. அந்த அறிவிக்கையை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. எனவே அவர்கள் இருவரும் கைது செய்யப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மாயாபின்னுக்கு ஜனவரி 29 மற்றும் 31 ஆம் தேதி அறிவிக்கை அனுப்பினோம். அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே அவர் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கிறோம். அவர் கைது செய்யப்படக் கூடும் என்று சிறப்புப் புலணாய்வுக் குழு உறுப்பினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!