Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

எடியூரப்பா மனைவி மரணம் குறித்து மறு விசாரணை!

Published on செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 2/03/2009 10:06:00 AM // , , , , , , , ,

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் மனைவி மைத்ரா தேவி கடந்த 2004-ம் ஆண்டு ஷிமோகா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் தண்ணீர் தொட்டி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி அப்போது காவல்துறையினர் விசாரணை செய்து வழக்கையும் மூடி விட்டனர்.

ஷிமோகாவைச் சேர்ந்த ஆர் சேஷாத்ரி என்ற வழக்குரைஞர், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மறு விசாரணை செய்யும்படி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வழக்குரைஞர் சேஷாத்ரி, இந்த மரணம் ஒரு கொலை என்றும் உண்மைகள் மறைக்கப்பட்டு சாட்சியங்கள் திரிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகிறார். எடியூரப்பா, அவரது மகள், இரண்டு மகன்கள், பணியாளர்கள் அனைவரும் காவல் துறையினருக்குத் தவறான தகவல்களைத் தந்து திசை திருப்பி விட்டனர் என்றும் தெரிவிக்கிறார்.

முதல்வர் எடியூரப்பா இது பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!