Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

இலங்கை தொடரை இந்தியா கைப்பற்றியது.

Published on செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 2/03/2009 10:44:00 PM // , , ,

இலங்கையுடனான ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் அடங்கிய தொடரில், மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது.

முதல் இரண்டு ஆட்டங்களை வென்ற உற்சாகத்தில் களம் இறங்கிய இந்திய அணி, துவக்கத்தில் கவுதம் கம்பீர் மற்றும் தெண்டுல்கர் இருவரின் முக்கிய விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்து சரிவைச் சந்தித்த போதிலும் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியா 364 ரன்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் இணைந்து 214 ரன்கள் குவித்தனர். வீரேந்திர சேவாக் 116 ரன்களும் யுவராஜ் சிங் 117 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணிக்கு எந்த ஒரு கட்டத்திலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை வழங்காமல் இந்தியா ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில் 147 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயனாக தேர்வு செய்யப்பட்டார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!