பாகிஸ்தானின் வங்கதேசம் சுற்றுப்பயணம் தள்ளிவைப்பு ?
Published on: வியாழன், 5 மார்ச், 2009 //
பாகிஸ்தானில் சில தினங்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் வங்கதேச சுற்றுப்பயனம் கேள்விகுறியாக உள்ளது. இது குறித்து அரசு செய்தியாளர் கூறுகையில், பாகிஸ்தானின் சுற்றுபயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் முடிந்து விட்ட நிலையில், சுற்றுபயணம் தொடர்வது சம்பந்தமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அனைத்துலக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக குறிப்பிட்டார்.
இதற்கிடையே, பாக் மற்றும் இந்தியா நாடுகளில் 2011 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட், பாதுகாப்பு காரணங்களினால் வேறு நாடுகளுக்கு மாற கூடிய சூழ்நிலையில், ஆஸ்திரேலியா, போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பாக் மற்றும் இந்தியா நாடுகளில் 2011 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட், பாதுகாப்பு காரணங்களினால் வேறு நாடுகளுக்கு மாற கூடிய சூழ்நிலையில், ஆஸ்திரேலியா, போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.


















