Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

ஹோலோகாஸ்டை மறுத்த பாதிரியார்கள் மீண்டும் கிருஸ்துவ திருச்சபையுடன் இணைப்பு!

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியதற்காக 1988-ஆம் ஆண்டு 4 பிஷப்கள் வாடிகன் கிருஸ்துவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களை போப் பெனடிக்ட் மீண்டும் திருச்சபையுடன் இணைத்துக் கொண்டார். இது யூதத் தலைவர்களை கோபமடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது.ஹிட்லரின் நாஜிப்படையினரால் யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வு 'ஹோலோகாஸ்ட்' என வரலாற்றில் பதியப் பட்டுள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இச்சம்பவங்களை உண்மை என ஏற்றுக் கொண்டிருந்தாலும் சிலர் அவற்றைப் பற்றிய சந்தேகங்களை...

குவாண்டனாமோ: 2 மலேஷிய கைதிகளை தாய்நாட்டிற்குக் கொண்டுவர பிரதமர் விருப்பம்!

அமெரிக்காவின் புதிய அதிபர் பாரக் ஒபாமா குவாண்டனாமோ சிறையை ஓராண்டிற்குள் மூடும்படி உத்தரவிட்டிருப்பது தெரிந்ததே. அங்கு அடைபட்டிருக்கும் கைதிகளுள் இரு மலேஷிய நாட்டவரும் அடங்குவர். அவர்களை மலேஷியாவிற்கு கொண்டுவர பிரதமர் அப்துல்லா படாவி விருப்பம் தெரிவித்துள்ளார்.முகமது நாசிர் லெப் மற்றும் முகமது பரிக் அமின் என்ற இரு மலேஷிய நாட்டவரும் 2002-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்புகளை நடத்திய ஜெமா இஸ்லாமியா...

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பலி!

Published on: //

வடக்கு பாகிஸ்தானின் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதி மீது அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் 3 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒன்றாக பல ஏவுகணைகள் வந்து விழுந்ததாகவும் ஏவுகணை விழுந்தப் பகுதி முழுவதும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எனவும் கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.அநேகமாக பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்ற பின்னர், அமெரிக்கப் படைகள் நடத்திய முதல் தாக்குதல் இது எனக்...

சர்மா கைது செய்த காஷ்மீர் தீவிரவாதி விடுதலை!

Published on: // ,

டெல்லி ஜாமிஆ நகர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மோகன்சந்த் சர்மா தீவிரவாதி என குற்றம் சுமத்தி கைது செய்த இக்பால் என்றழைக்கப்படும் அயாஷ் அஹமது ஷா என்ற காஷ்மீர் இளைஞரை நீதிமன்றம் நிரபராதி எனக் கூறி விடுதலை செய்தது.டெல்லி சாஸ்திரி பார்க்கின் அண்மையிலுள்ள மெட்ரோ ஸ்டேசனில் வைத்து கடந்த 2004 ஜனவரி 22 அன்று அயாஷ் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்யும் பொழுது அவர் வைத்திருந்தப் பையில்...

சீனா பொம்மைகள் இறக்குமதிக்கு இந்தியா தடை!

சீனாவிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.ஏற்கெனவே மெலாமின் என்ற விஷ ரசாயனப்பொருள கலந்துள்ளதுக் கண்டுபிடிக்கப்பட்டக் காரணத்தினால் சீனாவிலிருந்து சாக்லேட், பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தற்பொழுது சீன உற்பத்தி பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.பொம்மைகள் உருவாக்கப்படுத்தப்படும் பொருட்களில் விஷ ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக எழுந்த சந்தேகமும் மிக விலை குறைந்த சீன பொம்மைகளின் அளவுக்கதிகமான இறக்குமதி உள்நாட்டு பொம்மை உற்பத்தியை...

பஞ்சாபில் 5 வயது சிறுமி

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று 5 வயதே ஆன சிறுமி கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறியது.நேபாளத்தில் இருந்து வேலை தேடி பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே குராலி எனும் கிராமத்தில் அச்சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். பெற்றோர் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டனர். இவர்களது வீட்டருகே வசித்து வரும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த 27 வயதுடைய ராஜேஷ் பாரதி என்பவன் இச்சிறுமிக்கு...

"தேச துரோகி" வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி!

Published on: // ,
சமீபத்தில் வெளியான தேசதுரோகி இந்தி திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட்டால், குழப்பங்கள் விளையலாம் என்ற மஹாராஷ்டிரா அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்னர், மும்பை உயர்நீதிமன்றமும் இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு உச்சநிதிமன்றத்தை அணுகியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மற்றப்பாகங்களில் வெளியான இத்திரைப்படத்தை, மஹாராஷ்டிராவில் வெளியிட மட்டும் மஹாராஷ்டிரா அரசு தடை விதித்திருந்தது.

அதேநேரம், உச்சநிதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னரும் இதுவரை மஹாராஷ்டிராவில் ஒரு திரையரங்கிலும் இத்திரைப்படம் இதுவரை திரையிடப்படவில்லை. திரைப்படம் திரையிட நினைத்திருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க தயாராகாததே இதற்கான காரணமாகும்.

மாலேகான் வழக்கு: சதி திட்டத்தில் ஹிமானி சவார்க்கரும்!

Published on: //

மாலேகாவ் குண்டு வெடிப்பிற்காக சதி திட்டம் தீட்டியவர்களில் வி.ட்டி. சவார்க்கரின் மருமகளும் காந்தியைக் கொன்ற கோட்சேயின் அண்ணன் கோபால் கோட்சேயின் மகளுமான அபினவ் பாரதின் தலைவி ஹிமானி சவார்க்கருக்கும் பங்குண்டு என மாலேகான் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ.டி.எஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 11 அன்று போபாலிலுள்ள ராம ஷேத்திரத்தில் வைத்து நடந்த குண்டு வெடிப்பிற்கான ரகசிய சதியாலோசனை...

மரம் வெட்டிக்கு

42 மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய ஒருவருக்கு டெல்லி நடுவர் நீதிமன்றம் 210 மரக்கன்றுகளை நடும் விநோத தண்டனையை அளித்துள்ளது.வாசுதேவா என்ற பெயருடைய அந்த நபர் தனக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே இப்படி செய்துவிட்டதாகக்  கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். மரங்களே நகரின் நுரையீரல்கள் எனவும், உலகின் பசுமை குறைந்துவருவது கவலையளிக்கும் விதயம் என்றும் நீதிபதி தேவந்தர் குமார் ஜங்காலா தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். ...

பிரதமருக்கு நாளை இருதய அறுவை

இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனை(AIIMS)யில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இருதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக  இச்சிகிச்சை என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் P.K. பாண்டா தலைமையில் 11 மருத்துவர்களைக் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது.76 வயதான மன்மோகன், 18 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை  ஃபைபாஸ் சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார். மேலும் கடந்த ஆறு வருடங்களுக்கு...

தீவிரவாத வழக்குகள்: பார் கவுன்ஸிலுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்!

Published on: //

தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வாதாடும் உரிமையைப் பாதுகாப்பதற்கான வழிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முறையீட்டின் மேல் விளக்கம் கோரி பார் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா மாநில பார் அஸோஸியேசன்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.பார் அஸோஸியேசன்களின் நடவடிக்கைக்கு எதிராக...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!