Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

தீவிரவாத வழக்குகள்: பார் கவுன்ஸிலுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்!

Published on சனி, 24 ஜனவரி, 2009 1/24/2009 12:01:00 PM //

தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வாதாடும் உரிமையைப் பாதுகாப்பதற்கான வழிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முறையீட்டின் மேல் விளக்கம் கோரி பார் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா மாநில பார் அஸோஸியேசன்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பார் அஸோஸியேசன்களின் நடவடிக்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பொதுநல வழக்கின் மீது வாதம் கேட்கும் பொழுது, தலைமை நிதிபதி கெ.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலுள்ள நீதிபதிகள் குழு பார் கவுன்ஸிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. முஹம்மது ஷிஐப்(லக்னோ), ஸமால் அஹ்மது(ஃபைஸாபாத்), நூர் அஹமது(உஜ்ஜயினி), சுரேந்தர் ஸிகாட்லிங்(மாஹாராஷ்டிரா) ஆகிய வழக்கறிஞர்கள் இணைந்து இந்த பொது நலவழக்கு தொடுத்துள்ளனர்.

"பார் அஸோஸியேசன் சட்ட விரோத தீர்மானம் நிறைவேற்றியுள்ளது" எனவும் "இதன் மூலம் கடந்த ஆண்டு நடந்தத் தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக இருந்ததிலிருந்து விலக வேண்டி வந்ததாகவும்" புகாரில் அவர்கள் கூறினர். "குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக வந்த வேளையில் மற்ற வழக்கறிஞர்கள் தங்களைத் தக்கியதாகவும்" அவர்கள் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!