Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

குவாண்டனாமோ: 2 மலேஷிய கைதிகளை தாய்நாட்டிற்குக் கொண்டுவர பிரதமர் விருப்பம்!

அமெரிக்காவின் புதிய அதிபர் பாரக் ஒபாமா குவாண்டனாமோ சிறையை ஓராண்டிற்குள் மூடும்படி உத்தரவிட்டிருப்பது தெரிந்ததே. அங்கு அடைபட்டிருக்கும் கைதிகளுள் இரு மலேஷிய நாட்டவரும் அடங்குவர். அவர்களை மலேஷியாவிற்கு கொண்டுவர பிரதமர் அப்துல்லா படாவி விருப்பம் தெரிவித்துள்ளார்.

முகமது நாசிர் லெப் மற்றும் முகமது பரிக் அமின் என்ற இரு மலேஷிய நாட்டவரும் 2002-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்புகளை நடத்திய ஜெமா இஸ்லாமியா என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

"அதிபர் பாரக் ஒபாமா (குவாண்டனாமோ சிறையை மூடுவது பற்றிய) தமது வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக மலேஷியா தனது மகிழ்வை தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறிய மலேஷிய பிரதமர், அக்கைதிகள் மலேஷியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களின் எஞ்சிய தண்டணைக் காலத்தை மலேஷிய சிறையில் கழிப்பர் என்றும் தெரிவித்தார்.

குவாண்டனாமோ சிறையில் இன்னும் அடைபட்டிருக்கும் சுமார் 250 பேரில் செப் 11 தாக்குதல் நடக்க உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 நபர்களைச் சேர்த்து சுமார் 20 பேர் மீது மட்டுமே குற்ற வழக்கு பதியப் பட்டிருக்கிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!