Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மாலேகான் வழக்கு: சதி திட்டத்தில் ஹிமானி சவார்க்கரும்!

Published on சனி, 24 ஜனவரி, 2009 1/24/2009 01:12:00 PM //

மாலேகாவ் குண்டு வெடிப்பிற்காக சதி திட்டம் தீட்டியவர்களில் வி.ட்டி. சவார்க்கரின் மருமகளும் காந்தியைக் கொன்ற கோட்சேயின் அண்ணன் கோபால் கோட்சேயின் மகளுமான அபினவ் பாரதின் தலைவி ஹிமானி சவார்க்கருக்கும் பங்குண்டு என மாலேகான் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ.டி.எஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 அன்று போபாலிலுள்ள ராம ஷேத்திரத்தில் வைத்து நடந்த குண்டு வெடிப்பிற்கான ரகசிய சதியாலோசனை கூட்டத்தில் தானும் ஹிமானி சவார்க்கரும் கலந்துக் கொண்டதாக கடந்த டிசம்பர் 24 அன்று, அபினவ் பாரதின் உறுப்பினருமான வழக்கின் முக்கிய சாட்சி வாக்குமூலம் கொடுத்தார்.

இதனைக் குறித்த கேள்விக்கு, "தான் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வேளையில் தற்பொழுது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகளாக இருந்தனர்" என ஹிமானி பதிலளித்துள்ளார்.

ஹிமானியையும் முக்கிய சாட்சியையும் குற்றவாளிகள் பட்டியலில் ஏ.டி.எஸ் சேர்க்கவில்லை. எதனால் இவர்கள் இருவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு, "இதற்கான பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்" என ஏ.டி.எஸ்ஸின் தற்காலிக தலைவர் ரகுவன்ஷி பதிலளித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!