Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

"தேச துரோகி" வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி!

Published on சனி, 24 ஜனவரி, 2009 1/24/2009 01:27:00 PM // ,

சமீபத்தில் வெளியான தேசதுரோகி இந்தி திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட்டால், குழப்பங்கள் விளையலாம் என்ற மஹாராஷ்டிரா அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்னர், மும்பை உயர்நீதிமன்றமும் இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு உச்சநிதிமன்றத்தை அணுகியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மற்றப்பாகங்களில் வெளியான இத்திரைப்படத்தை, மஹாராஷ்டிராவில் வெளியிட மட்டும் மஹாராஷ்டிரா அரசு தடை விதித்திருந்தது.

அதேநேரம், உச்சநிதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னரும் இதுவரை மஹாராஷ்டிராவில் ஒரு திரையரங்கிலும் இத்திரைப்படம் இதுவரை திரையிடப்படவில்லை. திரைப்படம் திரையிட நினைத்திருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க தயாராகாததே இதற்கான காரணமாகும்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!