Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மரம் வெட்டிக்கு தண்டனை

Published on சனி, 24 ஜனவரி, 2009 1/24/2009 12:21:00 PM // , ,

42 மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய ஒருவருக்கு டெல்லி நடுவர் நீதிமன்றம் 210 மரக்கன்றுகளை நடும் விநோத தண்டனையை அளித்துள்ளது.

வாசுதேவா என்ற பெயருடைய அந்த நபர் தனக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே இப்படி செய்துவிட்டதாகக்  கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். 


மரங்களே நகரின் நுரையீரல்கள் எனவும், உலகின் பசுமை குறைந்துவருவது கவலையளிக்கும் விதயம் என்றும் நீதிபதி தேவந்தர் குமார் ஜங்காலா தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!