Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பலி!

Published on சனி, 24 ஜனவரி, 2009 1/24/2009 02:04:00 PM //

வடக்கு பாகிஸ்தானின் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதி மீது அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் 3 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒன்றாக பல ஏவுகணைகள் வந்து விழுந்ததாகவும் ஏவுகணை விழுந்தப் பகுதி முழுவதும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எனவும் கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

அநேகமாக பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்ற பின்னர், அமெரிக்கப் படைகள் நடத்திய முதல் தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.

"தீவிரவாத எதிர்ப்புப் போரின் முக்கிய பகுதிகளாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இருக்கும்" என அதிபர் பராக் ஒபாமா ஸ்டேட் டிபார்ட்மென்ட் கூட்டத்தில் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!