Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

சர்மா கைது செய்த காஷ்மீர் தீவிரவாதி விடுதலை!

Published on சனி, 24 ஜனவரி, 2009 1/24/2009 01:55:00 PM // ,

டெல்லி ஜாமிஆ நகர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மோகன்சந்த் சர்மா தீவிரவாதி என குற்றம் சுமத்தி கைது செய்த இக்பால் என்றழைக்கப்படும் அயாஷ் அஹமது ஷா என்ற காஷ்மீர் இளைஞரை நீதிமன்றம் நிரபராதி எனக் கூறி விடுதலை செய்தது.

டெல்லி சாஸ்திரி பார்க்கின் அண்மையிலுள்ள மெட்ரோ ஸ்டேசனில் வைத்து கடந்த 2004 ஜனவரி 22 அன்று அயாஷ் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்யும் பொழுது அவர் வைத்திருந்தப் பையில் வெடிபொருட்களும் மூன்று லட்சம் ரூபாயும் இருந்ததாகவும் அடுத்து வரும் குடியரசு தினத்தில் டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக அவர் அதனை வைத்திருந்தார் எனவும் டில்லி ஸ்பெஷல் செல் வழக்கு பதிவு செய்திருந்தது.

நிதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பொழுது, ஸ்பெஷல் செல்லிலுள்ள எ.எஸ்.ஐ. ரிஷிகேசிற்கு இக்பாலை கைது செய்த இடம் எங்கு என்பதைக் குறித்து விவரிக்க இயலவில்லை. மற்றொரு ஸ்பெஷல் செல் அதிகாரியான ஜெய் கிஷன், காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டவைக்கு எதிராக, மெட்ரோ அதிகாரிகள் அந்த ரெய்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். ரெய்டில் கலந்துக் கொண்ட எஸ்.ஐ. உமேஷ் பாரதியினால் எவ்வளவு நேரம் ரெய்டு நடந்தது என்றக் கேள்விக்குப் பதிலளிக்க இயலவில்லை.

"குற்றம் சுமத்தப்பட்ட பிரதி, நாட்டுக்கு எதிராக போர் பிரகடன் செய்ததையும் நாட்டைத் தகர்க்க சதியாலோசனை நடத்தியதையும் தெளிவிப்பதில் அரசு தரப்பு தோல்வியடைந்ததாக" தீர்ப்பு கூறிய நீதிமன்றம், காவல்துறைக்கு எதிராகக் கடும் விமர்சனமும் கண்டனமும் தெரிவித்தது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!