Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பஞ்சாபில் 5 வயது சிறுமி கற்பழிப்பு

Published on சனி, 24 ஜனவரி, 2009 1/24/2009 01:33:00 PM // , , , , ,

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று 5 வயதே ஆன சிறுமி கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறியது.


நேபாளத்தில் இருந்து வேலை தேடி பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே குராலி எனும் கிராமத்தில் அச்சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். பெற்றோர் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டனர். இவர்களது வீட்டருகே வசித்து வரும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த 27 வயதுடைய ராஜேஷ் பாரதி என்பவன் இச்சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, சிறுமியிடம் நயமாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று இக்குற்றத்தை செய்ததாக விசாரணை அதிகாரி லக்விந்தர் சிங் கூறினார்.

மொஹாலியில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது நிகழ்வு இது. இம்மாதம் 7ஆம் தேதி 6 வயது நேபாளச் சிறுமி மொஹாலியின் தொழில்பேட்டை அருகே கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!