Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாலஸ்தீனிய குழுக்கள் சன்டை நிறுத்த அறிவிப்பு

Published on: ஞாயிறு, 18 ஜனவரி, 2009 // , ,
ஹமாஸ் சண்டை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. ஹமாஸ் போராளிகளும் மற்ற போராளிக் குழுக்களும் இந்த சன்டை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று ஹமாஸ தலைவர்களில் ஒருவரான அய்மான் தாஹா கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களைத் தொடுத்து வந்தது. சுமார் 1300க்கும் அதிகமானோரை பலி வாங்கிய இந்த தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கோரி வந்த நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் நேற்று தன்னிச்சையான சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை பாலஸ்தீன போராளிக் குழுக்களான ஹமாஸ் உள்பட பல அமைப்புகளும் ஏற்க மறுத்து, இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று அறிவித்திருந்தனர்.

இஸ்ரேலிய சன்டை நிறுத்தத்தை அறிவித்திருந்தும் காஸாவின் பல பகுதிகளிலும் இன்றும் சிறிய அளவிளான தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாயின. காஸாவிலிருந்தும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் தொடர்ந்தன. இந்நிலையில் ஹமாஸ் இயக்கம் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காஸா குறித்து விவாதிப்பதற்காக எகிப்து கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எகிப்தின் ஷரம் அல் ஷைக் எனுமிடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் , அரபு லீக் தலைவர், பிரான்சு, துருக்கி, ஜோர்டான், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

காஸா : தொடரும் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்குப் பணிந்து, ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரம் காலை 2 மணி முதல் தாக்குதலை தன்னிச்சையாக நிறுத்திக் கொள்வது என்று அறிவித்தது. இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதிக்குள் இருப்பதே காஸா மீதான தாக்குதலின் அடையாளம்தான். எனவே காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறும் வரை இராணுவத்துடன் சன்டையிடுவோம் என்று ஹமாஸ் அறிவித்தது. காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசும் கோரியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலிய இராணுவ ஹெலிகாப்டர் காஸா நகரின் மீது வெள்ளை பாஸ்பரஸ் கொண்ட குண்டுகளை வீசியதாக பிரஸ் தொலைக்காட்சி கூறி உள்ளது.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்கதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளன. இன்று மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜபலியா மற்றும் பைத் லஹியா என்ற இடங்களில் இடிபாடுகளை அப்புறப்படுத்தும்போது  குழந்தைகள் உள்பட 95 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன.

இதுவரை 1300க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதல்களில் பலியாகி உள்ளனர். 6000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இஸ்ரேலிய தரப்பிலான சேதம் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. எனினும் 10 இராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவைத் தகர்க்க எதிரிகள் சதி - பிரணாப் முகர்ஜி!

Published on: //
உலகில் இந்தியாவின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட நாடுகள், இந்தியாவின் உயர்வைத் தகர்ப்பதற்காகவே தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுகின்றன என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கடந்தச் சில மாதங்களாக இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களைத் தனிப்பட்ட சம்பவங்களாக காண இயலாது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றில் பின்னணில் இந்தியாவைத் தகர்க்கத் திட்டமிடும் சக்திகள் உள்ளன.

தீவிரவாதத்துடன் இஸ்லாமிய சமுதாயத்தைத் தொடர்புபடுத்துவதற்குச் சில சக்திகள் முயற்சிக்கின்றன. இதனை அங்கீகரிக்க இயலாது. உண்மையில் ஒரு மதத்திலும் இது போன்ற செயல்பாடுகளுக்கு இடமில்லை. மதநூல்களைச் சிலர் தங்களின் தீவிரவாத செயல்பாடுகளுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். தீவிரவாதிகள் மனிதகுலத்தின் எதிரிகளாவர்" என அவர் மேலும் கூறினார்.

அரசு திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக நிற்கும் திரிமுணால் காங்கிரஸுக்கு எதிராகவும் அவர் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

"நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக இங்கு ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயமும் இரயிவே பாதைகளும், சாலைகளும் ஆகாயத்தில் உருவாக்க இயலாது. இன்றைய எதிர்கட்சியே நாளைய ஆளும்கட்சி என்பதைப் புரிந்துக் கொள்ள வேன்டும். ஆட்சியில் வரும் பொழுது, மறந்து போகும் படியிலான வாசகங்களை எவரும் பயன்படுத்தக் கூடாது" என அவர் கூறினார்.

சாலை விபத்தில் ஐவர் பலி

Published on: //
இன்று அதிகாலையில் ஆக்ராவில் சாலையோரக் கடை மீது வேகமாக வந்த சரக்குந்து மோதி அக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த 5 பேர் பலியானார்கள். மேலும் மூன்று பேர் படுகாயமுற்றனர். ஆக்ராவின் மகாத்மா காந்தி சாலையில் உள்ள மருத்துவமனை ஒன்றின் எதிரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு பெற்ற சரக்குந்து அது என்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அஹமதாபாத்தில் 4 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன

குஜராத் மாநிலத் தலைநகர் அஹமதாபாத்தில் வெடிக்காத நிலையில் இருந்த 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அஹமதாபாத்தின் கரன்ஜ் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டன என்று கரன்ஜ் பகுதியின் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கரன்ஜ் பகுதியின் தலைமைத் தபால் அலுவலகம் அருகில் குண்டு உள்ளதாக ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாவும் அவர் கூறினார்.

4ஆவது நாளாக திருமாவளவன் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. அவரது போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் சில பகுதிகளில் அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று மதுரையில் பேருந்துகள் எரிக்கப்பட்டன. இன்று நள்ளிரவில் விழுப்புரத்தில் இரு பேருந்துகள் மீது பெட்ரோல் வீசி எரியூட்டப்பட்டன. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதால் பேருந்துகள் காவல்துறை உதவியுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள திருமாவளவனை டாக்டர் இராமதாஸ் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தித்த இராமதாஸ், இந்திய அரசு தமிழர்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சுமத்தினார். உங்கள் முடிவால் இலங்கை தமிழர்களைக் காப்பற் முடியும். நீங்கள் மத்திய அரசை நம்புவதாகக் கூறுகிறார். நாங்கள் உங்களை நம்புகிறோம் என்று முதல் அமைச்சர் கருணாநிதிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அஹஹமதாபாத் குண்டு வெடிப்பு துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் நாளன்று அஹமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான துணை குற்றப் பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மாநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட 3, 200 பக்கங்களைக் கொண்ட இந்த துணைக் குற்றப்பத்திரிகையில், அமீரா ரஜா கான் என்ற முக்கிய குற்றவாளி உள்பட 44 பேர் மறைந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் 26 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டிருந்தது. இதில் 19 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது.

57 பேரை பலிவாங்கிய இந்த தொடர் குண்டு வெடிப்பில் ஒவ்வொரு குற்றவாளியும் என்னென்ன செய்தனர், குண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைத்தவர் எவர், எப்போது வைக்கப்பட்டது, எப்படி வைக்கப் பட்டது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காஸா மீதான தாக்குதல் நிறுத்தம்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 22 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்.  சுமார் 6000க்கும் மேற்பட்டோர் காயமுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 450 குழந்தைகள் மற்றும் 100 பெண்களும் அடக்கம். இஸ்ரேலின் இச்செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்து சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சற்று முன் இஸ்ரேலியப் பிரமர் எஹூத் ஓல்மர்ட் தாக்குதல் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். காஸா மீதான தாக்குதல் இஸ்ரேலிய நேரம் அதிகாலை 2 மணி முதல் நிறுத்தப்படும் என்று அறிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதலால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். காஸா மக்கள் இஸ்ரேலுக்கு விரோதிகள் அல்லர் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர்தான் இஸ்ரேலின் விரோதிகள். அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கும் எதிரிகள் என்று அவர் கூறினார். தற்போதைக்கு இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியில் இருக்கும் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்கினால் திருப்பித் தாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிறுத்த அறிவி்ப்பை ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்துவிட்டது. இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை இராணுவத்திற்கெதிரான தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் சன்டை நிறுத்தம் செய்வதற்கு ஹமாஸ் இயக்கம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. 1. காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், 2. காஸாவை விட்டு இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும், 3. காஸா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கி, பாலஸ்தீனத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு ஏதுவாக எல்லைகளைத் திறந்துவிட வேண்டும். இந்த நிபந்தனைகளைச் செயல்படு்த்தாவிட்டால் சன்டை நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பி்ல்லை என்று ஹமாஸ் கூறியுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!