Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 09, 2025

பாலஸ்தீனிய குழுக்கள் சன்டை நிறுத்த

Published on: ஞாயிறு, 18 ஜனவரி, 2009 // , ,

ஹமாஸ் சண்டை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. ஹமாஸ் போராளிகளும் மற்ற போராளிக் குழுக்களும் இந்த சன்டை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று ஹமாஸ தலைவர்களில் ஒருவரான அய்மான் தாஹா கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது.பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களைத் தொடுத்து வந்தது. சுமார் 1300க்கும் அதிகமானோரை பலி...

காஸா : தொடரும்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்குப் பணிந்து, ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரம் காலை 2 மணி முதல் தாக்குதலை தன்னிச்சையாக நிறுத்திக் கொள்வது என்று அறிவித்தது. இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதிக்குள் இருப்பதே காஸா மீதான தாக்குதலின் அடையாளம்தான். எனவே காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறும் வரை இராணுவத்துடன் சன்டையிடுவோம் என்று ஹமாஸ்...

இந்தியாவைத் தகர்க்க எதிரிகள் சதி - பிரணாப் முகர்ஜி!

Published on: //

உலகில் இந்தியாவின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட நாடுகள், இந்தியாவின் உயர்வைத் தகர்ப்பதற்காகவே தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுகின்றன என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.கடந்தச் சில மாதங்களாக இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களைத் தனிப்பட்ட சம்பவங்களாக காண இயலாது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றில் பின்னணில் இந்தியாவைத் தகர்க்கத் திட்டமிடும் சக்திகள் உள்ளன.தீவிரவாதத்துடன் இஸ்லாமிய சமுதாயத்தைத்...

சாலை விபத்தில் ஐவர்

Published on: //

இன்று அதிகாலையில் ஆக்ராவில் சாலையோரக் கடை மீது வேகமாக வந்த சரக்குந்து மோதி அக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த 5 பேர் பலியானார்கள். மேலும் மூன்று பேர் படுகாயமுற்றனர். ஆக்ராவின் மகாத்மா காந்தி சாலையில் உள்ள மருத்துவமனை ஒன்றின் எதிரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு பெற்ற சரக்குந்து அது என்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. ...

அஹமதாபாத்தில் 4 குண்டுகள் கண்டு

குஜராத் மாநிலத் தலைநகர் அஹமதாபாத்தில் வெடிக்காத நிலையில் இருந்த 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அஹமதாபாத்தின் கரன்ஜ் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டன என்று கரன்ஜ் பகுதியின் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.கரன்ஜ் பகுதியின் தலைமைத் தபால் அலுவலகம் அருகில் குண்டு உள்ளதாக ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாவும் அவர் கூறினார். ...

4ஆவது நாளாக திருமாவளவன்

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. அவரது போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் சில பகுதிகளில் அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று மதுரையில் பேருந்துகள் எரிக்கப்பட்டன. இன்று நள்ளிரவில் விழுப்புரத்தில் இரு பேருந்துகள் மீது பெட்ரோல்...

அஹஹமதாபாத் குண்டு வெடிப்பு துணை குற்றப் பத்திரிகை

கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் நாளன்று அஹமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான துணை குற்றப் பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.மாநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட 3, 200 பக்கங்களைக் கொண்ட இந்த துணைக் குற்றப்பத்திரிகையில், அமீரா ரஜா கான் என்ற முக்கிய குற்றவாளி உள்பட 44 பேர் மறைந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் 26 பேர் குற்றவாளிகள் என்று...

காஸா மீதான தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 22 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்.  சுமார் 6000க்கும் மேற்பட்டோர் காயமுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 450 குழந்தைகள் மற்றும் 100 பெண்களும் அடக்கம். இஸ்ரேலின் இச்செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்து...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!