Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அஹமதாபாத்தில் 4 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன

Published on ஞாயிறு, 18 ஜனவரி, 2009 1/18/2009 01:28:00 PM // ,

குஜராத் மாநிலத் தலைநகர் அஹமதாபாத்தில் வெடிக்காத நிலையில் இருந்த 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அஹமதாபாத்தின் கரன்ஜ் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டன என்று கரன்ஜ் பகுதியின் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.


கரன்ஜ் பகுதியின் தலைமைத் தபால் அலுவலகம் அருகில் குண்டு உள்ளதாக ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாவும் அவர் கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!