Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

இந்தியாவைத் தகர்க்க எதிரிகள் சதி - பிரணாப் முகர்ஜி!

Published on ஞாயிறு, 18 ஜனவரி, 2009 1/18/2009 03:08:00 PM //

உலகில் இந்தியாவின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட நாடுகள், இந்தியாவின் உயர்வைத் தகர்ப்பதற்காகவே தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுகின்றன என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கடந்தச் சில மாதங்களாக இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களைத் தனிப்பட்ட சம்பவங்களாக காண இயலாது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றில் பின்னணில் இந்தியாவைத் தகர்க்கத் திட்டமிடும் சக்திகள் உள்ளன.

தீவிரவாதத்துடன் இஸ்லாமிய சமுதாயத்தைத் தொடர்புபடுத்துவதற்குச் சில சக்திகள் முயற்சிக்கின்றன. இதனை அங்கீகரிக்க இயலாது. உண்மையில் ஒரு மதத்திலும் இது போன்ற செயல்பாடுகளுக்கு இடமில்லை. மதநூல்களைச் சிலர் தங்களின் தீவிரவாத செயல்பாடுகளுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். தீவிரவாதிகள் மனிதகுலத்தின் எதிரிகளாவர்" என அவர் மேலும் கூறினார்.

அரசு திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக நிற்கும் திரிமுணால் காங்கிரஸுக்கு எதிராகவும் அவர் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

"நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக இங்கு ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயமும் இரயிவே பாதைகளும், சாலைகளும் ஆகாயத்தில் உருவாக்க இயலாது. இன்றைய எதிர்கட்சியே நாளைய ஆளும்கட்சி என்பதைப் புரிந்துக் கொள்ள வேன்டும். ஆட்சியில் வரும் பொழுது, மறந்து போகும் படியிலான வாசகங்களை எவரும் பயன்படுத்தக் கூடாது" என அவர் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!