Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சாலை விபத்தில் ஐவர் பலி

Published on ஞாயிறு, 18 ஜனவரி, 2009 1/18/2009 02:07:00 PM //

இன்று அதிகாலையில் ஆக்ராவில் சாலையோரக் கடை மீது வேகமாக வந்த சரக்குந்து மோதி அக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த 5 பேர் பலியானார்கள். மேலும் மூன்று பேர் படுகாயமுற்றனர். ஆக்ராவின் மகாத்மா காந்தி சாலையில் உள்ள மருத்துவமனை ஒன்றின் எதிரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு பெற்ற சரக்குந்து அது என்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!